Saturday, 25 December 2021

சாத்யகி | பவிஷ்ய பர்வம் பகுதி – 70

(ஸாத்யகிபௌண்ட்ரகயோ꞉ ஸம்வாதம்)

Satyaki | Bhavishya-Parva-Chapter-70 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: பௌண்டரகன் கட்டளை; யாதவர்களைக் காக்க வந்த சாத்யகி; பௌண்டரகன், சாத்யகி உரையாடல்...


Krishna giving the reposibility of saving Dwaraka to Satyaki

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    "மன்னா, யாதவப் படை வீரர்கள், தங்கள் பகைவர்களால் பெரிதும் துன்புறுத்தப்பட்டு, தங்கள் தீப்பந்தங்கள் அணைந்து போர்க்களத்தைவிட்டுத் தப்பி ஓடினர். இஃது அந்தப் படையின் தலைவர்களுக்குப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. யாதவர்கள் தப்பிச் செல்வதைக் கண்ட பௌண்டரகன்: "அன்புக்குரிய கூட்டாளிகளே, விரைந்து சென்று நம் பகைவரின் நகரத்தைத் தரைமட்டமாக்குவீராக.(1-3) பூமியின் தலைவர்களே, கோடரிகள், கயிறுகள் என உங்கள் கைகளில் இருக்கும் எந்த ஆயுதத்தையும் எடுத்துக் கொண்டு நகரத்தைச் சூழ்வீராக.(4) முதலில் நகரத்தின் சுற்றுச் சுவர் மதில்களை உடைத்து, மாளிகைகள் அனைத்தையும் நொறுக்கி, யாதவர்களின் இளம்பெண்கள் அனைவரையும், அவர்களின் பணிப்பெண்களையும் கடத்திச் செல்வீராக.(5) மதிப்புமிக்க ரத்தினங்கள் அனைத்தையும், நீங்கள் காணும் செல்வம் எதனையும் அபகரித்துச் செல்வீராக" என்று ஆணையிட்டான்.

ஸாத்யகிபௌண்ட்³ரகயோ꞉ ஸம்வாத³꞉ | பவிஷ்ய பர்வம் அத்யாயம் - 95 (41)

அத² பஞ்சநவதிதமோ(அ)த்⁴யாய꞉

ஸாத்யகிபௌண்ட்³ரகயோ꞉ ஸம்வாத³꞉

Krishna giving the reposibility of saving Dwaraka to Satyaki

வைஷ²ம்பாயந உவாச
நிவ்ருத்தேஷ்வத² ஸைந்யேஷு வ்ருஷ்ணிவீரேஷு சைவ ஹி |
பீ⁴தேஷ்வத² மஹாராஜ ஹதேஷு யுதி⁴ ஸர்வத꞉ ||3-95-1

தீ³பிகாஸு ப்ரஷா²ந்தாஸு நி꞉ஷ²ப்³தே³ ஸதி ஸர்வத꞉ |
ஜிதமித்யேவ யந்மத்வா வ்ருஷ்ணீநாம் ப³லமுத்தமம்||3-95-2

தத꞉ பௌண்ட்³ரோ மஹாவீர்யோ ப³பா⁴ஷே ஸைநிகாந்ஸ்வகான் |
ஷீ²க்⁴ரம் க³ச்ச²த ராஜேந்த்³ராஷ்டங்கை꞉ குந்தை꞉ புரீமிமாம் ||3-95-3

குடா²ரை꞉ குந்தலைஷ்²சைவ பாஷாணை꞉ ஸர்வதோதி³ஷ²ம் |
கர்ஷணஸ்தை²꞉ ஸுபாஷாணை꞉ ஸர்வதோ யாத பூ⁴மிபா꞉ ||3-95-4

பி⁴த்³யந்தாம் ப்ராகாரசயா ப்ராஸாதா³ஷ்²ச ஸமந்தத꞉ |
க்³ருஹ்யந்தாம் கந்யகா꞉ ஸர்வா தா³ஸ்யஷ்²சைவ ஸமந்தத꞉ ||3-95-5

Friday, 24 December 2021

ஏகலவ்யன் அறைகூவல் | பவிஷ்ய பர்வம் பகுதி – 69

(யாதவாநாம் யுத்தோத்யோகம்)

The might of Ekalavya | Bhavishya-Parva-Chapter-69 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: யாதவர்களுக்கும், பௌண்டரப் படைகளுக்கும் இடையில் நடந்த போர்; ஏகலவ்யனின் வலிமை; சாத்யகியை அறைகூவியழைத்த ஏகலவ்யன்...

Might of Ekalavya

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    "அதேவேளையில் {துவாரகையின்} நகரவாயிலில் முகாமிட்டிருக்கும் பெரும்படையைக் குறித்து யாதவர்கள் அறிந்தனர்.{1} பிரளய காலத்தில் பொங்கும் கடலைப் போலத் தோன்றும் பகைவனின் படையை அவர்கள் கண்டனர்.{2} அப்போது அந்த யாதவர்கள் விரைவாகத் தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டும், தீப்பந்தங்களை ஏற்றிக் கொண்டும் எதிர்த்தாக்குதலுக்கான ஆயத்தங்களைச் செய்தனர். சாத்யகி, பலராமன், கிருதவர்மன், நிசடன்,{3} நுண்ணறிவுமிக்க உத்தவர், வலிமைமிக்க உக்கிரசேனன் ஆகியோரும், யாதவப் போர்வீரர்கள் பிறரும் கவசங்களைப் பூண்டு கொண்டு பிற ஆயத்தங்களை ஏற்பாடு செய்தனர்.(1-4) அவர்கள் அனைவரும் வலிமைமிக்கவர்களாகவும், சாதனைகளுடன் கூடிய போர்வீரர்களாகவும், இரவு நேரப்போர் தந்திரங்களை நன்கறிந்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் தங்கள் வாள்களையும், பிற ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு, பகைவருடன் போரிட ஆயத்தமாக இருந்தனர்.(5)

யாத³வாநாம் யுத்³தோ⁴த்³யோக³꞉ | பவிஷ்ய பர்வம் அத்யாயம் - 94 (33)

அத² சதுர்ணவதிதமோ(அ)த்⁴யாய꞉

யாத³வாநாம் யுத்³தோ⁴த்³யோக³꞉

யாத³வாநாம் யுத்³தோ⁴த்³யோக³꞉

Might of Ekalavya

வைஷ²ம்பாயந உவாச
ததஷ்²ச யாத³வா꞉ ஸர்வே த்³ருஷ்ட்வா ஸைநிகஸஞ்சயம் |
ராத்ரௌ ச வ்யஸநம் ப்ராப்தம் மஹாஷ²ஸ்த்ரஸமாகுலம் ||3-94-1

மஹாவாதஸமுத்³பூ⁴தம் கல்பாந்தே ஸமரோபமம் |
ஸந்நத்³தா⁴꞉ ஸமபத்³யந்த ஷ²ஸ்த்ரிணோ யுத்³த⁴லாலஸா꞉ ||3-94-2

க்³ருஹீததீ³பிகா꞉ ஸர்வே யாத³வா꞉ ஷ²ஸ்த்ரயோதி⁴ந꞉ |
ஸாத்யகிர்ப³லப⁴த்³ரஷ்²ச ஹார்தி³க்யோ நிஷ²ட²ஸ்ததா² ||3-94-3

உத்³த⁴வோ(அ)த² மஹாபு³த்³தி⁴ருக்³ரஸேநோ மஹாப³ல꞉ |
அந்யே ச யாத³வா꞉ ஸர்வே கவசப்ரக்³ரஹே ரதா꞉ ||3-94-4

ஸமஸ்தயுத்³த⁴குஷ²லா ராத்ரௌ ஸந்நாஹயோதி⁴ந꞉ |
ஷ²ஸ்த்ரிண꞉ க²ட்³கி³நஷ்²சைவ ஸர்வே ஷ²ஸ்த்ரஸமாகுலா꞉ ||3-94-5

Thursday, 23 December 2021

துவாரகையைத் தாக்கிய பௌண்டரகன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 68

(பௌண்ட்ரகஸ்ய த்வாரகாவரோதம்)

Paundraka attaks Dwaraka | Bhavishya-Parva-Chapter-68 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: கிருஷ்ணனிடம் செய்தியைச் சொன்ன நாரதர்; துவாரகையை நோக்கிப் படையெடுத்து வந்த பௌண்டரகன்...

Paundrakas conquest on Dwaraka

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    "மன்னா, பௌண்டரகன் தன் பலத்தின் மீது கொண்ட செருக்கில் மிதந்து கொண்டிருந்தான். அந்தச் சபையில் அவன் விப்ரர்களில் சிறந்த நாரத முனிவரிடம் கோபத்துடன் பின்வரும் சொற்களை மறுமொழியாகக் கூறினான்:(1) "முனியே, நீர் என்ன சொல்கிறீர்? நான் மன்னன், என்னைச் சுற்றிலும் எண்ணற்ற துவிஜர்கள் சூழ்ந்திருந்தாலும், அடுத்தவரைச் சபிப்பதில் நீர் மகிழ்ச்சி அடைகிறீர். உம்மை அதிருப்தியடையச் செய்ய அஞ்சுகிறேன் என்பதால் நீர் விரும்பியவாறு எங்கு வேண்டுமானாலும் செல்வீராக" {என்றான் பௌண்டரகன்}.

பௌண்ட்³ரகஸ்ய த்³வாரகாவரோத⁴꞉ | பவிஷ்ய பர்வம் அத்யாயம் - 93 (25)

அத² த்ரிநவதிதமோ(அ)த்⁴யாய꞉

பௌண்ட்³ரகஸ்ய த்³வாரகாவரோத⁴꞉

Paundrakas conquest on Dwaraka

வைஶம்பாயந உவாச
தத꞉ க்ருத்³தோ⁴ மஹாராஜ பௌண்ட்³ரோ மத³ப³லாந்வித꞉ |
நாரத³ம் விப்ரவர்யம் தம் ப்ரோவாச ந்ருபஸம்ஸதி³ ||3-93-1

கிமித³ம் ப்ராஹ விப்ரர்ஷே ராஜாஹம் ச த்³விஜை꞉ ஸஹ |
க³ச்ச² த்வம் காமமத² வா முநே ஶாபப்ரத³꞉ ஸதா³ ||3-93-2

பீ⁴தஸ்த்வத்தோ மஹாபு³த்³தே⁴ க³ச்ச² த்வம் காமமத்³ய ஹி |
இத்யுக்தோ ந்ருபவீர்யேண தூஷ்ணீமேவ ஸ நாரத³꞉ ||3-93-3

ஜகா³மாகாஶக³மநோ யத்ர திஷ்ட²தி கேஶவ꞉ |
ஸ க³த்வா விஷ்ணுஸங்காஶம் விஷ்ணோ꞉ ஸர்வம் ஶஶம்ஸ ஹ ||3-93-4

தச்ச்²ருத்வா ப⁴க³வாந்விஷ்ணுர்யதே²ஷ்டம் வத³தாமிதி |
த³ர்பம் தஸ்யாபநேஷ்யாமி ஶ்வோபூ⁴தே த்³விஜஸத்தம ||3-93-5

Monday, 20 December 2021

பௌண்டரகனும் நாரதரும் | பவிஷ்ய பர்வம் பகுதி – 67

(பௌண்ட்ரகநாரதஸம்வாதம்)

Paundraka Narada Conversation | Bhavishya-Parva-Chapter-67 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: நாரதரிடம் பேசிய பௌண்டரகன்; பௌண்டரகனை எச்சரித்த நாரதர்...

Paundraka

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    "அதே வேளையில் சர்வலோகங்களில் பயணிக்க வல்ல நாரதர், கைலாச சிகரத்தில் இருந்து, பௌண்டரகனின் நகரத்திற்குச் சென்றார்.(1) அவர் வானத்தில் இருந்து இறங்கி, மன்னனின் {பௌண்டரகனின்} வாயிற்காப்போனிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அவனது அரண்மனைக்குள் பிரவேசித்தார்.(2) அர்க்கியம் மற்றும் பிற மங்கலப் பொருட்களுடன் மன்னனால் மதிக்கப்பட்டு, தொண்டாற்றப்பட்ட அவர், அதன்பிறகு அலங்காரத் துணிகளால் மறைக்கப்பட்ட வெண்மையான ஆசனத்தில் அமர்ந்தார்.(3)

பௌண்ட்³ரகநாரத³ஸம்வாத³꞉ | பவிஷ்ய பர்வம் அத்யாயம் - 92 (23)

ஆத² த்³விநவதிதமோ(அ)த்⁴யாய꞉

பௌண்ட்³ரகநாரத³ஸம்வாத³꞉

Paundraka

வைஷ²ம்பாயந உவாச
தத꞉ கைலாஸஷி²க²ராந்நிர்க³தோ முநிஸத்தம꞉ |
நாரத³꞉ ஸர்வலோகஜ்ஞ꞉ பௌண்ட்³ரஸ்ய நக³ரம் ப்ரதி ||3-92-1

அவதீர்ய நபோ⁴பா⁴கா³த்ப்ரத்யாக³ம்ய நரோத்தமம் |
த்³வா꞉ஸ்தே²ந ச ஸமாஜ்ஞப்த꞉ ப்ரவிவேஷ² க்³ருஹோத்தமம்||3-92-2

அர்க்⁴யாதி³ஸமுதா³சாரம் ந்ருபால்லப்³த்⁴வா மஹாமுநி꞉ |
நிஷஸாதா³ஸநே ஷு²ப்⁴ரே ஹ்யாஸ்த்ருதே ஷு²ப⁴வாஸஸா ||3-92-3

குஷ²லம் ப்ருஷ்டவாந்பூ⁴யோ ந்ருப꞉ ஸ முநிஸத்தமம் |
உவாச நாரத³ம் பூ⁴ய꞉ பௌண்ட்³ரகோ ப³லக³ர்வித꞉ ||3-92-4

ப⁴வாந்ஸர்வத்ர குஷ²ல꞉ ஸர்வகார்யேஷு பண்டி³த꞉ |
ப்ரதி²தோ தே³வஸித்³தே⁴ஷு க³ந்த³ர்வேஷு மஹாத்மஸு ||3-92-5

Sunday, 19 December 2021

பௌண்டரகன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 66

(பௌண்ட்ரகவ்ருத்தாந்தராம்பம்)

Paundraka | Bhavishya-Parva-Chapter-66 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: சபையில் உரையாற்றிய பொண்டரகனின் தற்பெருமை...

Paundraka

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    "அதேவேளையில், கல்விமானும், வலிமைமிக்கப் போர்வீரனும், விருஷ்ணி குலத்தைப் பகைக்கும் விரதம் கொண்டவனும், கிருஷ்ணனிடம் பொறாமை கொண்டவனும், பலமிக்க மன்னர்களில் முதன்மையானவனுமான பௌண்டரகன், தனக்கு அடங்கிய சிற்றரசர்கள் அனைவரையும் விரைவாக அழைத்துத் தன் சபையில் அவர்களிடம் பின்வருமாறு பேசினான்:(1,2)

பௌண்ட்³ரகவ்ருத்தாந்தராம்ப⁴꞉ | பவிஷ்ய பர்வம் அத்யாயம் - 91 (18)

அதை²கநவதிதமோ(அ)த்⁴யாய꞉

பௌண்ட்³ரகவ்ருத்தாந்தராம்ப⁴꞉

Paundraka

வைஷ²ம்பாயந உவாச
ஏதஸ்மிந்நேவ காலே து பௌண்ட்³ரோ ந்ருபவரோத்தம꞉ | 
ப³லவாந்ஸத்த்வஸம்பந்நோ யோத்³தா⁴ விபுலவிக்ரம꞉ ||3-91-1

வ்ருஷ்ணிஷ²த்ருஸ்ததா³ ராஜா க்ருஷ்ணத்³வேஷீ ப³லாத்ததா³ |
ந்ருபாந்ஸர்வாந்ஸமாஹூய ப்ரோவாச ந்ருபஸம்ஸதி³ ||3-91-2

ஜிதா ச ப்ருதி²வீ ஸர்வா ஜிதாஷ்²ச ந்ருபஸத்தமா꞉ |
வ்ருஷ்ணயஸ்தே ப³லோந்மத்தா꞉ க்ருஷ்ணமாஷ்²ரித்ய க³ர்விதா꞉ ||3-91-3

தா³ஸ்யந்தி மே கரம் ஸர்வே ந ஹி தே க்ருஷ்ணஸம்ஷ்²ரயாத் |
ஸ து க்ருஷ்ணஷ்²சக்ரப³லாந்மாமவஜ்ஞாய திஷ்ட²தி ||3-91-4

அஹம் சக்ரீதி க³ர்வோ(அ)பூ⁴த்தஸ்ய கோ³பஸ்ய ஸர்வதா³ |
ஷ²ங்கீ² சக்ரீ க³தீ³ ஷா²ர்ங்கீ³ ஷ²ரீ தூணீ ஸஹாயவான் ||3-91-5

சிவனின் விஷ்ணுத்துதி | பவிஷ்ய பர்வம் பகுதி – 65

(புநரபி ஷிவக்ருதா விஷ்ணுஸ்துதி)

Shiva 's Hymn to Krishna | Bhavishya-Parva-Chapter-65 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: கிருஷ்ணனைத் துதித்த சிவன்...

Shiva offering prayer to Krisha

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    "அதன்பிறகு முனிவர்கள் ஆச்சரியப்படும் வகையில் ருத்திரன், விஷ்ணுவும், விஷ்வேஷ்வரனுமான ஹரியை மீண்டும் துதிக்கத் தொடங்கினான். முனிவர்களும் குவிந்த கவனத்துடனும், நிறைவுடனும் அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.(1)

புநரபி ஷி²வக்ருதா விஷ்ணுஸ்துதி꞉ | பவிஷ்ய பர்வம் அத்யாயம் - 90 (38)

அத² நவதிதமோ(அ)த்⁴யாய꞉

புநரபி ஷி²வக்ருதா விஷ்ணுஸ்துதி꞉

Shiva offering prayer to Krisha

வைஷ²ம்பாயந உவாச
தத꞉ ஸ ப⁴க³வாந்ருத்³ர꞉ ஸர்வாந்விஸ்மாபயந்நிவ |
ஸ்துத்யா ப்ரசக்ரமே ஸ்தோதும் விஷ்ணும் விஷ்²வேஷ்²வரம் ஹரிம் |
அர்த்²யாபி⁴ஸ்து ததா³ வாக்³பி⁴ர்முநீநாம் ஷ்²ருண்வதாம் ததா² ||3-90-1

மஹேஷ்²வர உவாச  
நமோ ப⁴க³வதே துப்⁴யம் வாஸுதே³வாய தீ⁴மதே |
யஸ்ய பா⁴ஸா ஜக³த்ஸர்வம் பா⁴ஸதே நித்யமச்யுத ||3-90-2

நமோ ப⁴க³வதே தே³வ நித்யம் ஸூர்யாத்மநே நம꞉ |
ய꞉ ஷீ²தயதி ஷீ²தாம்ஷு²ர்லோகாந்ஸர்வாநிமாந்விபு⁴꞉ ||3-90-3

நமஸ்தே விஷ்ணவே தே³வ நித்யம் ஸோமாத்மநே நம꞉ |
ய꞉ ப்ரஜா꞉ ப்ரீணயத்யேகோ விஷ்²வாத்மா பூ⁴தபா⁴வந꞉ ||3-90-4

நம꞉ ஸர்வாத்மநே தே³வ நமோ வாகா³த்மநே ஹரே |
யோ த³தா⁴ர கரேணாஸௌ குஷ²சீராதி³ யத்ஸதா³ ||3-90-5

Saturday, 18 December 2021

கிருஷ்ண ஸ்வரூபம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 64

(மஹாதேவேந கிருஷ்ணஸ்வரூபவர்ணநம்)

Krishna Swaroopa | Bhavishya-Parva-Chapter-64 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: கிருஷ்ணனின் ஸ்வரூபத்தை முனிவர்களிடம் விளக்கிச் சொன்ன சிவன்...

Lord Shiva, Devas and Sages

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    "சிவன், அந்தத் தேவதேவேசனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வாறு சொல்லிவிட்டு முனிவர்களிடம் திரும்பி, "விப்ரர்களே, ஹரியைக் காண வந்திருக்கும் பக்தர்களான நீங்கள் அனைவரும் இவனைக் குறித்த இந்த உண்மையை அறிய வேண்டும்.(1) இந்தத் தேவனே பரம்பொருளாவான். இவனுக்கு இணையாகவோ, மேன்மையாகவோ வேறெவரும் இல்லை. இவனே நீங்கள் செய்யும் தவங்களின் இறுதி இலக்காவான். இந்த உண்மையை நீங்கள் அறிவீராக.(2) விப்ரர்களே, சிதறாத கவனத்துடன் இவனைத் தியானிப்பதையே வழக்கமான பயிற்சியாக நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இவனை அறிந்து கொள்வதே உங்களுக்கு முழுமையை அளிக்கும், அதுவே உங்கள் பரம தனமாகவும் இருக்கும்.(3)

மஹாதே³வேந க்ருஷ்ணஸ்வரூபவர்ணநம் | பவிஷ்ய பர்வம் அத்யாயம் - 89 (20)

அத² நவாஷீ²திதமோ(அ)த்⁴யாய꞉

மஹாதே³வேந க்ருஷ்ணஸ்வரூபவர்ணநம்

Lord Shiva, Devas and Sages

வைஷ²ம்பாயந உவாச
இத்யுக்த்வா தே³வதே³வேஷ²ம் முநீநாஹ புந꞉ ஷி²வ꞉ |
ஏவம் ஜாநீத ஹே விப்ரா யே ப⁴க்தா த்³ரஷ்டுமாக³தா꞉ ||3-89-1

ஏததே³வ பரம் வஸ்து நைதஸ்மாத்பரமஸ்தி வ꞉ |
ஏததே³வ விஜாநீத்⁴வமேதத்³வ꞉ பரமம் தப꞉ ||3-89-2

ஏததே³வ ஸதா³ விப்ரா த்⁴யேயம் ஸததமாநஸை꞉ |
ஏதத்³வ꞉ பரமம் ஷ்²ரேய ஏதத்³வ꞉ பரமம் த⁴நம் ||3-89-3

ஏதத்³வோ ஜந்மந꞉ க்ருத்யமேதத்³வஸ்தபஸ꞉ ப²லம் |
ஏஷ வ꞉ புண்யநிலய ஏஷ த⁴ர்ம꞉ ஸநாதந꞉ ||3-89-4

ஏஷ வோ மோக்ஷதா³தா ச ஏஷ மார்க³ உதா³ஹ்ருத꞉ |
ஏஷ புண்யப்ரத³꞉ ஸாக்ஷாதே³தத்³வ꞉ கர்மணாம் ப²லம் ||3-89-5

கிருஷ்ணனைத் துதித்த சிவன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 63

(ஸ்ரீ ஷிவக்ருதா விஷ்ணுஸ்துதி)

Shiva's Hymn to Vishnu | Bhavishya-Parva-Chapter-63 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: கிருஷ்ணனைத் துதித்த சிவன்...

siva-pracetas

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    "காளைக்கொடி கொண்டவனும், சூலபாணியும், சாக்ஷாத் உமாபதியுமான அந்த தேவன், கருடக்கொடி கொண்ட விஷ்ணுவின் கைகளைப் பற்றிக் கொண்டு, தேவர்கள் அனைவரும், பெரும் முனிவர்களும் கேட்கும் வகையில் பின்வருமாறு பேசினான்:(1,2) "தேவதேவேசா, சக்கரபாணியே, ஜனார்த்தனா, என்ன காரணத்திற்காக நீ இங்கே தவம் செய்து கொண்டிருக்கிறாய்? நான் செய்ய வேண்டியதென்ன? உனது பிரார்த்தனை என்ன?(3) நீயே நேரடியாக நித்தியனான விஷ்ணு எனும்போது அனைத்து வகைத் தவங்களின் இலக்காக நீயே இருக்கிறாய். ஜனார்த்தனா, ஜகத்பதியே, மகத்தான மகனை அடையும் விருப்பத்தில் நீ இந்தத் தவத்தைச் செய்கிறாய் என்றால் அத்தகைய மகனை நான் உனக்கு ஏற்கனவே கொடுத்துவிட்டேன் என்று அறிவாயாக. பகவானே அதன் காரணத்தை இப்போது கேட்பாயாக.(4,5)

ஷ்²ரீஷி²வக்ருதா விஷ்ணுஸ்துதி꞉ | பவிஷ்ய பர்வம் அத்யாயம் - 88 (67)

அத² அஷ்டாஷீ²திதமோ(அ)த்⁴யாய꞉

ஷ்²ரீஷி²வக்ருதா விஷ்ணுஸ்துதி꞉

siva-pracetas

வைஷ²ம்பாயந உவாச
ததோ வ்ருஷத்⁴வஜோ தே³வ꞉ ஷூ²லீ ஸாக்ஷாது³மாபதி꞉ |
கரம் கரேண ஸம்ஸ்ப்ருஷ்²ய விஷ்ணோஷ்²சக்ரத⁴ரஸ்ய ஹ ||3-88-1

ப்ரோவாச ப⁴க³வாந்ருத்³ர꞉ கேஷ²வம் க³ருட³த்⁴வஜம் |
ஷ்²ருண்வதாம் ஸர்வதே³வாநாம் முநீநாம் பா⁴விதாத்மநாம் ||3-88-2

கிமித³ம் தே³வதே³வேஷ² சக்ரபாணே ஜநார்த³ந |
தபஷ்²சர்யா கிமர்த²ம் தே ப்ரார்த²நா தவ கா விபோ⁴ ||3-88-3

ஸ்வயம் விஷ்ணுர்ப⁴வாந்நித்யஸ்தபஸ்த்வம் தபஸாம் ஹரே |
புத்ரார்த²ம் யதி³ தே தே³வ தபஷ்²சர்யா ஜநார்த³ந ||3-88-4

புத்ரோ த³த்தோ மயா தே³வ பூர்வமேவ ஜக³த்பதே |
ஷ்²ருணு தத்ராபி ப⁴க³வந்காரணம் காரணாத்மக ||3-88-5

Thursday, 16 December 2021

விஷ்ணுவின் சிவத்துதி | பவிஷ்ய பர்வம் பகுதி – 62

(ஸ்ரீ விஷ்ணுக்ருதா ஷிவஸ்துதி)

Krishna's Hymn to Shiva | Bhavishya-Parva-Chapter-62 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: சிவனைத் துதித்த கிருஷ்ணன்...

Lord Shiva சிவன்

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    "இவ்வாறு பகவான் ருத்திரன், தன் காளை வாகனத்தைச் செலுத்திக் கொண்டும், பூதங்களின் துணையுடனும், எண்ணற்ற பிசாசங்கள், உரகங்கள் ஆகியவற்றுடன் அங்கே வந்தான்.(1) தேவேசனான விஷ்ணு உத்தம தவம் செய்து கொண்டும், விதிப்படி வேள்வி நெருப்பில் புனித ஆகுதிகளைச் செலுத்திக் கொண்டும் இருப்பதை அவன் கண்டான்.(2) தலைவன் கிருஷ்ணன் ஒரு வேட்டியையும், சாதரத்தையும் {துண்டையும்} அணிந்திருந்தான், அவனது முடி சடையாக இருந்தது. கருடன் அவனுக்கு விறகுகளைக் கொண்டு வந்தான், சக்கரம் மலர்களைக் கொண்டு வந்தது, திரிசூலம் குசப்புற்களைக் கொண்டு வந்தது. கதாயுதம் பிற தொண்டுகளைச் செய்து வந்தது. அந்தத் தலைவன் இந்திரன் தலைமையிலான தேவர்களாலும், பெரும் முனிவர்களாலும் சூழப்பட்டிருந்தான்.(3,4)

ஷ்²ரீவிஷ்ணுக்ருதா ஷி²வஸ்துதி꞉ | பவிஷ்ய பர்வம் அத்யாயம் - 87 (38)

அத² ஸப்தாஷீ²திதமோ(அ)த்⁴யாய꞉

ஷ்²ரீவிஷ்ணுக்ருதா ஷி²வஸ்துதி꞉

Lord Shiva சிவன்

வைஷ²ம்பாயந உவாச
ஏவம் ப³ஹுவிதை⁴ர்பூ⁴தை꞉ பிஷா²சைருரகை³꞉ ஸஹ |
ஆக³த்ய ப⁴க³வாந்ருத்³ர꞉ ஷ²ங்கரோ வ்ருஷ²வாஹந꞉ ||3-87-1

த³த³ர்ஷ² விஷ்ணும் தே³வேஷ²ம் தபந்தம் தப உத்தமம் |
ஜுஹ்வாநமக்³நிம் விதி⁴வத்³த்³ரவ்யைர்மேத்⁴யைர்ஜக³த்பதிம் ||3-87-2

க³ருடா³ஹ்ருதகாஷ்ட²ம் து ஜடிலம் சீரவாஸஸம் |
சக்ரேணாநீதகுஸுமம் க²ட்³கா³ணீதகுஷ²ம் ததா² ||3-87-3

க³தா³க்ருதஸமாசாரம் தே³வதே³வம் ஜநார்த³நம் |
இந்த்³ராத்³யைர்தே³வஸங்கை⁴ஷ்²ச வ்ருதம் முநிக³ணை꞉ ஸஹ ||3-87-4

அசிந்த்யம் ஸர்வபூ⁴தாநாம் த்⁴யாயந்தம் கிமபி ப்ரபு⁴ம் |
அவருஹ்ய வ்ருஷாச்ச²ர்வோ ப⁴க³வாந்பூ⁴தபா⁴வந꞉ ||3-87-5

Tuesday, 14 December 2021

சிவனின் தொண்டர்கள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 61

(ஸ்ரீகிருஷ்ண ஸமீபே ஷி²வாக³மநம்)

The associates of Shiva | Bhavishya-Parva-Chapter-60 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: சிவனின் தொண்டர்கள் குறித்த விவரிப்பு...

Shiva Ganas

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    "பூதங்களின் முகங்களைக் கொண்டவர்களும், நீண்ட விழிகளுடன் கூடியவர்களும், ஆடிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தவர்களும், விளையாட்டாக ஒருவரையொருவர் அறைகூவி அழைத்தவர்களுமான கண்டாகர்ணன், விரூபாக்ஷன், குண்டதாரன், குமுத்வஹன்,{1} தீர்க்கரோமன், தீர்க்கபுஜன், தீர்க்கபாஹு, நிரஞ்சனன், உருநேத்ரன், ஷதமுகன், ஷதக்ரீவன், ஷதோதரன்,{2} குண்டோதரன், மஹாக்ரீவன், ஸ்தூலஜிஹ்வன், துவிபாஹு, பார்ஷ்வவக்த்ரன், சிம்ஹமுகன்,{3} {திரிபாஹு, பஞ்சபாஹு, தீர்க்காஸ்யன்},{3} வியாக்ர வக்தரன், சிதானனன் ஆகிய கோர ரூபம் கொண்ட அனைவரும் அந்தச் சிவனுடன் இருந்தனர்.{4}

ஷ்²ரீக்ருஷ்ணஸமீபே ஷி²வாக³மநம் | பவிஷ்ய பர்வம் அத்யாயம் - 86 (18)

அத² ஷட³ஷீ²திதமோ(அ)த்⁴யாய꞉

ஷ்²ரீக்ருஷ்ணஸமீபேஷி²வாக³மநம்

Shiva Ganas

வைஷ²ம்பாயந உவாச
தஸ்யாக்³ரே ஸமபத்³யந்த பூ⁴தஸங்கா⁴꞉ ஸஹஸ்ரஷ²꞉ |
க⁴ண்டாகர்ணோ விரூபாக்ஷ꞉ குண்ட³தா⁴ர꞉ குமுத்³வஹ꞉ ||3-86-1

தீ³ர்க⁴ரோமா தீ³ர்க⁴பு⁴ஜோ தீ³ர்க⁴பா³ஹுர்நிரஞ்ஜந꞉ |
உருநேத்ர꞉ ஷ²தமுக²꞉ ஷ²தக்³ரீவ꞉ ஷ²தோத³ர꞉ ||3-86-2

குண்டோ³த³ரோ மஹாக்³ரீவ꞉ ஸ்தூ²லஜிஹ்வோ த்³விபா³ஹுக꞉ |
பார்ஷ்²வவக்த்ர꞉ ஸிம்ஹமுக² உந்நதாம்ஸோ மஹாஹநு꞉ ||3-86-3

த்ரிபா³ஹு꞉ பஞ்சபா³ஹுஷ்²ச வ்யாக்⁴ரவக்த்ர꞉ ஸிதாநந꞉ |
ஏதே சாந்யே ச ப³ஹவோ தீ³ர்கா⁴ஸ்யா தீ³ர்க⁴லோசநா꞉ ||3-86-4

ந்ருத்யந்த꞉ ப்ரஹஸந்தஷ்²ச ஸ்போ²டயந்த꞉ பரஸ்பரம் |
ததா²ந்யே கோ⁴ரரூபாஷ்²ச ததா²ந்யே விக்ருதாநநா꞉ ||3-86-5

Monday, 13 December 2021

சிவனின் வருகை | பவிஷ்ய பர்வம் பகுதி – 60

(ஸ்ரீகிருஷ்ணஸமீபே இந்த்ராதிதேவ ஆநாமாகமநம்)

Lord Shiva arrives | Bhavishya-Parva-Chapter-60 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: சிவனை நிறைவடையச் செய்ய பன்னிரெண்டு வருடங்கள் கடுந்தவம் செய்த கிருஷ்ணன்...

Lord Krishna Meditating

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    "இந்திரன், தன் வாகனமான உத்தம கஜத்தில் {ஐராவதத்தில்} ஏறி சர்வேஷ்வரனான விஷ்ணு தவத்தில் இருப்பதைக் காண அங்கே வந்தான்.(1) அடுத்ததாக யம பகவானும், எருமை வாகனத்தைச் செலுத்திக் கொண்டு, தன் தொண்டர்களுடன் அங்கே வந்தான்.(2) ஹம்சவாகனத்தில் அமர்ந்தவனும், தலைக்கு மேல் வெண்குடை ஏந்தியவனும், தொண்டர்களால் வெண்சாமரம் வீசப்படுபவனுமான வருணனும் அங்கே வந்தான்.(3) கைலாச சிகரத்தில் கேசவன் எவ்வாறு தவம் செய்கிறான் என்பதைக் காண அவனும், ஆதித்யனும் அங்கே வந்தனர்.{4} ஓ! மன்னா {ஜனமேஜயா}, ருத்திரர்கள், வசுகள், சித்தர்கள், பெரும் முனிவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள்,{5} ஆடல் பாடல்களில் திறன் பெற்ற அப்சரஸ்சகள் பலரும், தேவகணங்களும் கேசவனைக் காண கைலாச மலைக்கு வந்தனர்.{6}

ஷ்²ரீக்ருஷ்ணஸமீபே இந்த்³ராதி³தே³வஆநாமாக³மநம் | பவிஷ்ய பர்வம் அத்யாயம் - 85 (22)

அத² பஞ்சாஷீ²திதமோ(அ)த்⁴யாய꞉

ஷ்²ரீக்ருஷ்ணஸமீபே இந்த்³ராதி³தே³வஆநாமாக³மநம்

Lord Krishna Meditating

வைஷ²ம்பாயந உவாச
தத இந்த்³ர꞉ ஸ்வயம் தத்ர ஆருஹ்ய க³ஜமுத்தமம் |
த்³ரஷ்டும் ஸர்வேஷ்²வரம் விஷ்ணும் தபஸ்யந்தம் ஸமாயயௌ ||3-85-1

ததோ யமஸ்து ப⁴க³வாநாருஹ்ய மஹிஷம் வரம் |
கிங்கரைஷ்²ச ஸ்வயம் ஸாக்ஷாதா³யயௌ நக³முத்தமம் || 3-85-2

ப்ரசேதா ஹம்ஸமாருஹ்ய வாருணைஷ்²ச ஸமந்வித꞉ |
ஷ்²வேதச்ச²த்ரஸமாயுக்த꞉ ஷ்²வேதவ்யஜநவீஜித꞉ || 3-85-3

யயௌ கைலாஸஷி²க²ரம் த்³ரஷ்டும் கேஷ²வமஞ்ஜஸா |
அந்யே சாபி ததா² தே³வா ஆதி³த்யா வஸவஸ்ததா² || 3-85-4

ருத்³ராஷ்²சைவ ததா² ரஜந்த்³ரஷ்டும் கேஷ²வமாயயு꞉ |
ஸித்³தா⁴ஷ்²ச முநயஷ்²சைவ க³ந்த⁴ர்வா யக்ஷகிந்நரா꞉ ||3-85-5

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்