Showing posts with label சிசுபாலன். Show all posts
Showing posts with label சிசுபாலன். Show all posts

Wednesday, 16 September 2020

ருக்மிணியைக் கடத்திய கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 116 – 060

(ருக்மிணீஹரணம்)

An account of Rukshmi: Krishna takes away Rukshmi | Vishnu-Parva-Chapter-116-060 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : ருக்மிணியை அபகரித்துச் சென்ற கிருஷ்ணன்; ஜராசந்தனுடனும், சிசுபாலனுடனும் கடும்போர் செய்த யாதவர்கள்...

Krishna kidnaps Rukmini

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அதேவேளையில் வலிமைவாய்ந்த ஜராசந்தன், சேதிகளின் மன்னனை நிறைவடையச் செய்யும் வகையில், "மன்னன் சிசுபாலனுக்கும், பீஷ்மகனின் மகளான ருக்மிணிக்கும் இடையில் பொன் நாணய, ஆபரணக் கொடைகளுடன் திருமணம் நடைபெறும்" என அறிவித்தான்.(1,2) பெரும் பலம்வாய்ந்தவனும், ஆயிரங்கண் தேவனைப் போன்று மாயைகளில் தேர்ந்தவனும், தந்தவக்ரனின் மகனுமான சுவக்தரன்,(3) பெருஞ்சக்தியும், வலிமையும் கொண்டவனும், ஓர் அக்ஷௌஹிணி படைவீரர்களின் தலைவனுமான சுதேவன், பௌண்ட்ர மன்னன் வாசுதேவனின் மகன்,(4) பெருஞ்சக்திவாய்ந்த ஏகலவ்யனின் மகன், பாண்டிய மன்னனின் மகன், கலிங்கத்தின் பலம்வாய்ந்த மன்னன்,(5) கிருஷ்ணனின் பகைவனான மன்னன் வேணுதாரி, அம்சுமான், கிரதன் சுருததர்மன்,(6) பகைவரைப் புறமுதுகிடச் செய்யும் காளிங்கன், காந்தார மன்னன், பெரும் வீரமிக்கவனான கௌசம்பியின் மன்னன்,(7) பெரும்படையுடன் கூடிய பகதத்தன், சலன், பலம்வாய்ந்தவனான சால்வன், பெரும்படையுடன் கூடிய பூரிஸ்ரவஸ், வீரனான குந்திவீர்யன் ஆகியோரையும் இதை ஆதரிக்குமாறு அவன் {ஜராசந்தன்} தூண்டினான்[1]" என்றார்.(8)

Tuesday, 25 August 2020

மன்னர்களிடம் பேசிய ஜராசந்தன் | விஷ்ணு பர்வம் பகுதி – 105 – 049

(விதர்பஸபாயாம் ஜராஸந்தஸுனீதயோர்பாஷணம்)

Jarasandha's address to the kings | Vishnu-Parva-Chapter-105-049 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணன் வரவைக் குறித்து அரசர்களுக்கு மத்தியில் நடந்த ஆலோசனை; மன்னர்களின் கூட்டத்தில் பேசிய ஜராசந்தனும், சுனீதனும்...

Vishnu and Garuda at Deva's Sacrifice

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "நித்தியனான கிருஷ்ணன், வினதையின் மகனுடன் {கருடனுடன்} அங்கே வந்ததைக் கண்ட முன்னணி மன்னர்கள் பெருஞ்சோகத்தால் பீடிக்கப்பட்டனர்.(1) ஓ! மன்னா, பயங்கர ஆற்றலைக் கொண்டவர்களும், குடிமையியலை {நீதி சாஸ்திரங்களை} நன்கறிந்தவர்களும், ஆலோசனைகளில் திறன்மிக்கவர்களுமான அந்த மன்னர்கள், மன்னன் பீஷ்மகனின் பொன் மாளிகையில் கலந்தாலோசிக்கக் கூடினர். தேவ சபையில் அமர்ந்திருக்கும் தேவர்களைப் போலவே அவர்களும் அங்கே பல்வேறு வண்ண விரிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.(2,3)

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்