Showing posts with label ரைவதன். Show all posts
Showing posts with label ரைவதன். Show all posts

Thursday, 26 March 2020

வைவஸ்வத மனுவின் சந்ததி | ஹரிவம்ச பர்வம் பகுதி – 10

(ஐலோத்பத்திவர்ணனம்)

Vaivaswata Manu's Offspring - Emergence of lady Ila | Harivamsa-Parva-Chapter-10 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : வைவஸ்வத மனுவின் மகன்கள்; மனு செய்த வேள்வி; வேள்வியில் உண்டான இளை; இளைக்கும் புதனுக்கும் பிறந்த ஐலன்; பூமியைப் பத்துப் பகுதிகளாகப் பிரித்துக் கொண்ட மனுவின் மகன்கள்; வைவஸ்வத மனுவின் நான்காவது மகன் ஸர்யாதியின் பேரன் ரேவதன்; குசஸ்தலை நாட்டை அடைந்த ரேவதன் மகன் ரைவதன்; பிரம்மலோகத்தில் இசை பயின்ற ரைவதனும் அவனுடைய மகள் ரேவதியும்; பலராமன் ரேவதி திருமணம்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, வைவஸ்வத மனுவுக்கு, இக்ஷ்வாகு, நாபாகன், திருஷ்ணு, சர்யாதி, நரிஷ்யன் {நரிஷ்யந்தன்}, பிரங்ஷன் {பிரமசு}, நாபாகாரிஷ்டன், கொருஷன் {கரூஷன்}, மற்றும் பிருஷத்ரன் என ஒன்பது மகன்கள் இருந்தனர்.(1,2) ஓ! மன்னா, சந்ததியை விரும்பிய குடிமுதல்வன் {வைவஸ்வத} மனு, ஒரு வேள்வியை மித்ரன் மற்றும் வருணனின் முன்னிலையில் செய்தான்.(3) ஓ! பரதனின் வழித்தோன்றலே, இந்த ஒன்பது மகன்களும் பிறப்பதற்கு முன்னர் அந்த {வைவஸ்வத} மனு, நிகழ்வேள்வியில் மித்ரன் மற்றும் வருணனின் பகுதிகளுக்குப் பலியுணவு {காணிக்கை / படையல்} அளித்தான். இந்தக் பலியுணவு அளிக்கப்பட்ட போது, தேவர்களும், கந்தர்வர்களும், மனிதர்களும், தவசிகளும் பெரும் மகிழ்ச்சியை அடைந்து, ஆச்சரியமடைந்து, "ஓ!, இவனது தவசக்தி அற்புதமானது. ஓ!, இவனது சாத்திர அறிவு அற்புதமானது" என்றனர்.(4-6)

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்