Showing posts with label பிருது. Show all posts
Showing posts with label பிருது. Show all posts

Monday, 21 June 2021

பிருதுவின் பதவியேற்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 26

(பிருதுராஜ்யாபிஷேககதநாதி)

An account of Prithu and the churning of the ocean | Bhavishya-Parva-Chapter-26 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : பிருது அரியணையில் நிறுவப்பட்டது; பெருங்கடலைக் கடையும் திட்டம் உருவானது...

churning-of-milk-ocean

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "உலகம் முழுவதிலும் அகங்காரமும், அறியாமையும் இவ்வாறு நீடித்திருந்தபோது மக்கள் என்ன செய்தனர்?" என்று கேட்டான்.(1)

Thursday, 27 February 2020

பூமியின் தோற்றம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 06

(ப்ருதூபாக்யானம்)

origin of the earth!| Harivamsa-Parva-Chapter-06 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : பிருதுவுக்கும், பூமாதேவிக்கும் இடையில் நடந்த உரையாடல்; பூமியைச் சமப்படுத்திய பிருது; பிருதுவின் மூலம் உண்டாகிய மூன்று தொழில்கள்; பல்வேறு காலக்கட்டங்களில் பூமாதேவியிடம் கறக்கப்பட்ட பலன்கள்; புதிய பூமி; பிருதுவின் மகள் பிருத்வி; மேதஸால் நிறைந்த மேதினி...

பிருது, "எவன் ஒருவன், தன் தரப்பைச் சார்ந்த அல்லது எதிர் தரப்பைச் சார்ந்த ஒருவனுக்காக பல உயிர்களை அழிக்கிறானோ, அவன் இம்மையில் பாவம் இழைத்தவனாவான்.(1) தீங்கு நிறைந்த ஒருவனைக் கொல்வதன் மூலம் பலர் மகிழ்ச்சியடைந்தால் அதில் சிறியதாகவோ, பெரியதாகவோ எந்தப் பாவமும் பற்றாது.(2) ஒரு தீய மனிதனை அழிப்பதன் மூலம் பலருக்கு நன்மை நேருமேயானால், அத்தகைய செயல் அறமீட்டலுக்கே வழிவகுக்கும்.(3) எனவே, ஓ! பூமியே, நான் என் குடிமக்களின் நன்மைக்காக உன்னைக் கொல்லப் போகிறேன். உலகின் நன்மைக்காக நான் இடும் இந்தக் கட்டளையை நீ  நிறைவேற்றவில்லையெனில், என் ஆணையைப் புறக்கணிக்கும் உன்னை நான் இந்தக் கணையால் கொல்வேன். என்னை நானே (பூமிக்கடியில்) புதைத்துக் கொண்டு என் குடிமக்களை நான் எப்போதும் காத்திருப்பேன்.(4,5) ஓ! அறச் சடங்குகளை எப்போதும் நோற்பவளே, என் குடிமக்களைக் காக்கவல்லவள் என்பதால், என் ஆட்சிக் காலத்தில் நீ அவர்களுக்கு உயிர் கொடுப்பாயாக.(6) நீ எனக்குப் பாலைத் தருவாயாக. அப்போது நான் உன் அழிவுக்காக எடுத்த இந்தப் பயங்கரக் கணையை விலக்கிக் கொள்வேன்" என்றான் {பிருது}.(7)

Wednesday, 26 February 2020

வேனன் மற்றும் பிருது | ஹரிவம்ச பர்வம் பகுதி – 05

(வேன சரிதம் - ப்ருதோத்பத்தி)

An account of Vena and Prithu!| Harivamsa-Parva-Chapter-05 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : வேனன் பிறப்பு; வேனனின் அறம்வழுவிய ஒழுக்கம்; வேனனின் அஹங்காரம்; முனிவர்களால் அழிக்கப்பட்ட வேனன்; வேனனின் இடது தொடையில் பிறந்த நிஷாதன்; அவனது வலது கையில் பிறந்த பிருது; உலகின் முதல் மன்னன் பிருது; பிருதுவைத் துதிக்க முனிவர்களால் நியமிக்கப்பட்ட சூதரும், மாகதரும்; பசுவாக மாறி தப்பி ஓடிய பூமாதேவி; பின்தொடர்ந்த பிருது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "முன்னர் அத்ரி குலத்தில் அவரைப் போலவே பலமிக்கவனாக இருந்த குடிமுதல்வன் அங்கன், அறப்பாதுகாவலனானான்.(1) வேனன் என்ற பெயரில் {அறத்தில் அக்கறையில்லாத} மிக இழிவான மகன் அவனுக்குப் பிறந்தான். அந்தக் குடிமுதல்வன் {வேனன்} மரணத்தின் {மிருத்யுவின்} மகளான சுனீதைக்குப் பிறந்தான்.(2) தன் தாய்வழி தாத்தாவின் குறைபாட்டை உள்வாங்கிக் கொண்ட அந்தக் காலனின் மகன் {வேனன்}, தன் கடமைகளில் இருந்து விலகி, உலகில் ஒழுக்க விடுதலையைப் போதித்தான்.(3) அந்த மன்னன் {வேனன்}, அறமில்லாவொழுங்கை நிறுவி, வேத வினைமுறைகளைப் புறக்கணித்து இழிவான செயல்களில் ஈடுபட்டான்.(4) அவனுடைய நிர்வாகத்தில், வேத கல்வி மற்றும் வேதச் சடங்குகள் இடைநிறுத்தப்பட்டன. வேள்விகளில் புனிதப்படுத்தப்பட்ட சோமச் சாறானது தேவர்களுக்குக் கிட்டவில்லை.(5) அந்தக் குடிமுதல்வனின் பயங்கர உறுதிமொழியானது, ஹோமம் அல்லது வேள்விகளை அழிவுக்காலத்திலும் கூட எவரும் செய்யாத வகையில் இருந்தது.(6)

Monday, 24 February 2020

உணவுப் பொருட்களின் தோற்றம் குறித்த கேள்வி | ஹரிவம்ச பர்வம் பகுதி – 04

(ப்ருதூபாக்யானம்)

A query regarding the origin of the aricles of food!| Harivamsa-Parva-Chapter-04 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : அதிஷ்டாத்ர தேவதைகளை நியமித்த பிரம்மன்; வைவஸ்வத மனுவிடம் தன் அரசை ஒப்படைத்த பிரம்மன்; வேனனின் மகன் பிருது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "குடிமுதல்வன் {பிரம்மன்}, வேனனின் மகனான பிருதுவை உயர் தனித் தலைவனின் அலுவலில் {பூமியின் பேரரசனாக} நிறுவிய பிறகு, சோமனுக்கும், பிறருக்கும் அரசுகளை அளிக்கத் தொடங்கினான்.(1) அவன் சோமனை இருபிறப்பாளர்கள், மூலிகைகள், கோள்கள், நட்சத்திரங்கள், வேள்விகள் மற்றும் கடுந்தவங்கள் ஆகியவற்றின் பொறுப்பில் நியமித்தான்.(2) அதன் பிறகு அவன் {பிரம்மன்} வருணனை நீர்நிலைகளின் மன்னனாகவும், வைஸ்ரவணனை மன்னர்களின் தலைவனாகவும், விஷ்ணுவை ஆதித்யர்களின் மன்னனாகவும், பாவகனை வசுக்களின் மன்னனாகவும், தக்ஷனைக் குடிமுதல்வர்களின் {பிரஜாபதிகளின்} மன்னனாகவும், வாசவனை {இந்திரனை} மருத்துகளின் மன்னனாகவும், ஒப்பற்ற சக்தி கொண்ட பிரல்ஹாதனை {பிரஹலாதனை} தைத்தியர்கள் மற்றும் தானவர்களின் மன்னனாகவும், சூரியனின் மகனான யமனைப் பித்ருக்களின் மன்னனாகவும், நாராயணனை மாத்ரிகள், நோன்புகள், மந்திரங்கள், பசுக்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், மன்னர்கள், ஆகியோரின் மன்னனாகவும், காளையைச் சின்னமாகக் கொண்ட சிவனைச் சாத்யர்கள் மற்றும் ருத்திரர்களின் மன்னாகவும் நிறுவினான்.(3-7) பிறகு அவன் விப்ரசித்தியைத் தானவர்களின் மன்னனாகச் செய்து, கதாதாரியான கிரீசனை (சிவனை) பூதகணங்கள் அனைத்தின் மன்னனாக்கினான்.(8)

Wednesday, 12 February 2020

மனிதர்களின் தோற்றம் - தக்ஷனின் பிறப்பு | ஹரிவம்ச பர்வம் பகுதி – 02

(தக்ஷோத்பத்தி)

The origin of men: the birth of Daksha | Harivamsa-Parva-Chapter-02 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : ஸ்வாயம்பூ மனு மற்றும் ஷதரூபை; உத்தானபாதர்; துருவனின் பிறப்பு; வேனனை அழித்த முனிவர்கள்; வேனனிடம் தோன்றிய முதல் க்ஷத்திரியன் பிருது; பூமியைக் கறந்த பிருது; பிராசேதஸ்களின் தவம்; பத்து பேரை மணந்த மாரிஷை; தக்ஷனின் பிறப்பு; பல்வேறு உயிரினங்களைப் படைத்த தக்ஷன்; பாலினக் கலவி மூலம் உயிரினங்கள் உண்டானது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "குடிமுதல்வரான {பிரஜாபதியான} வசிஷ்டர், சந்ததி படைக்கும் தமது தொழில் {மனத்தால்} முடிவடைந்தபோது, எந்தப் பெண்ணில் இருந்தும் பிறக்காத ஷதரூபையைத் தமது மனைவியாக அடைந்தார்.(1) ஓ! ஏகாதிபதி, புலனுக்கு அப்பாற்பட்ட பகுதியை {உலகத்தை} மறைத்தபடி வசித்து வந்த அவர், தமது மகிமையாலும், யோக சக்தியாலும் ஷதரூபையைப் படைத்தார்.(2) ஒரு கோடி {1,00,00,000} வருடங்கள் கடுந்தவம் இருந்த அவள் {ஷதரூபை} தனல் போன்ற தவசக்தி கொண்ட தன் கணவரை அடைந்தாள்.(3) ஓ! குழந்தாய் {ஜனமேஜயா}, அந்தப் புருஷனே ஸ்வாயம்பூ மனு என்றழைக்கப்படுகிறான். இவ்வுலகில் அவனுடைய மன்வந்தரம் எழுபத்தோரு யுகங்களைக் கொண்டதாகும்.(4) அந்த அண்டப் புருஷன் {விராட்} ஷதரூபையிடம் வீரன் என்ற பெயரைக் கொண்ட மகனைப் பெற்றான், அவன் {வீரன்} காம்யையிடம் பிரிவிரதன் மற்றும் உத்தானபாதன் என்ற பெயர்களைக் கொண்ட இரு மகன்களைப் பெற்றான்.(5)

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்