Showing posts with label மார்க்கண்டேயர். Show all posts
Showing posts with label மார்க்கண்டேயர். Show all posts

Saturday, 24 April 2021

நான் நாராயணன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 10

(ஏகார்ணவே பகவந்மார்கண்டேயஸம்வாத꞉)

The God after dissolution | Bhavishya-Parva-Chapter-10 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : நாராயணனின் வயிற்றுக்குள் இருந்து வெளிப்பட்ட மார்க்கண்டேயர்; ஒற்றைப் பெருங்கடலையும், சிறுவனையும் கண்டு கலங்கியது; மார்க்கண்டேயருக்கும் நாராயணனுக்கும் இடையில் நடந்த உரையாடல்...


Markandeya-Rishi-sees-the-illusory-potency-of-the-Lord

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இவ்வாறு அனைத்தும் ஒற்றைப் பெருங்கடலாக மாற்றப்பட்டதும், பெருஞ்சிறப்புவாய்ந்த தலைவன் ஹரி, பொருள் காரணமாக அமைந்திருந்த அண்டத்திற்கு அழிவை ஏற்படுத்தித் தூய புத்தியாக நிலைத்திருக்கிறான்.{1,2} ரஜஸ் குணத்திற்கு அப்பாற்பட்டவனும், நித்தியனெனக் கல்விமான்களால் சொல்லப்படும் பெரியவனுமான நாராயணன், தன் நனவால் மறைக்கப்பட்டவனாக, ரஜஸ் குணம், பூதங்கள் ஆகியவற்றின் பயனாக இருக்கும் கடக்கப்பட முடியாத பெருங்கடலுக்குள் மூன்று யுகங்கள் உறங்கிக் கிடக்கிறான்.{3,4} தலை, பாதங்கள் முதலியவற்றைக் கொண்ட புருஷனை யோகத்தாலும், வேள்விகளாலும் அடையலாம், ஆனால் மஹாபுருஷன் அவனிடம் இருந்து வேறுபட்டவனாவான். இந்தத் தூய புத்தி அனைத்திலும் கிடக்கிறது.{5}

Wednesday, 10 March 2021

ஹரிஹர ஐக்கியம் | விஷ்ணு பர்வம் பகுதி – 183 – 127

(பிரஹ்மவாக்யாத்க்ருஷ்ணபாணயோர்யுத்தநிவ்ருத்தி꞉ பிதாமஹஜிஜ்ஞாஸயா மார்கண்டேயகர்த்ருகம் ஹரிஹரமாஹாத்ம்யகீர்தனம் ஸ்தவகதனம் ச)

The earth goes to Brahma; Markandeya explains how Brahma, Vishnu, Siva are one | Vishnu-Parva-Chapter-183-127 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : சிவனைக் கலங்கடித்த கிருஷ்ணன்; பிரத்யும்னன் செய்த போர்; சிவனிடம் பேசிய பிரம்மன்; சிவ விஷ்ணு ஐக்கியம் நிறுவப்படல்; ஹரிஹராத்மகத் துதி...


Encounter between Shiva and Krishna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "{வைஷ்ணவ ஆயுதத்தால்} (சிவனின்) முக்கண்களும் எரிந்து கொண்டிருந்த போது, உலகங்கள் அனைத்தும் இருளில் மூழ்கின; நந்தியும், ருத்ரனும், அவனது தேரும் புலப்படவில்லை.(1) அப்போது கோபத்தாலும், பலத்தின் காரணமாகவும் இரண்டு மடங்கு பிரகாசத்துடன் எரிந்து கொண்டிருந்த ருத்ரன், நான்கு பக்கங்களிலும் கூரிய ஈட்டிகளைக் கொண்டதும், திரிபுரமெரிக்கப் பயன்பட்டதுமான தன் கணையை {சதுர்முகப் பாணத்தை} எடுத்துக் கொண்டான்.(2) அந்த முக்கண் தேவன், அந்தக் கணையை எடுத்துத் தன் வில்லில் பொருத்தி அதை ஏவ முற்பட்டபோது, அனைவரின் மனங்களையும் அறியும் உயரான்ம வாசுதேவன் {கிருஷ்ணன்} அதை அறியவந்தான்.(3) அதன்பிறகு, கரநளினம் கொண்டவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான புருஷோத்தமன் ஜிரும்பணம் {கொட்டாவி} எனும் ஆயுதத்தை எடுத்து, அதைக் கொண்டு ஹரனைக் கொட்டாவி விட வைத்தான் {அவனைச் சோம்பியிருக்கச் செய்தான்}.(4) அசுரர்களையும், ராட்சசர்களையும் வெல்பவனும், வில், கணைகளுடன் கூடியவனுமான தெய்வீக ஹரன், அந்தக் கணையால் கலக்கமடைந்து, நனவை இழந்தான்.(5) {சக்தியால் செருக்கில் இருந்த பாணன், வில், கணைகளுடன் கூடிய ஹரன் கொட்டாவி விடுவதைக் கண்டு அவனைத் தூண்டினான்}.

Friday, 10 April 2020

பரத்வாஜரின் குடும்பம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 19

(பித்ரு கல்பம் - 3 | யோகாப்ரம்சாநிரூபணம்)

Bharadwaja's Family | Harivamsa-Parva-Chapter-19 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : தவத்தகுதி குறைந்த பரத்வாஜரின் மகன்கள்; மானஸத்தின் அக்கரையில் இருந்தது; அவர்கள் மேன்மையடையும் வழிகளை மார்க்கண்டேயரிடம் சொன்ன சனத்குமாரர்...

{ஸனத்குமாரர் சொன்னதாக} மார்க்கண்டேயர், "ஓ! குழந்தாய், முந்தைய யுகத்தில், பரத்வாஜரின் மகன்களான பிராமணர்கள் யோகப்பயிற்சிகளை மேற்கொண்டாலும், தங்கள் அத்துமீறல்களால் மாசடைந்தார்கள்.(1) யோகப் பயிற்சிகளில் தொடர்ந்து வரம்புமீறி தகுதி குறைந்தவர்களாக ஆனதால், மானஸம் என்றழைக்கப்படும் பெருந்தடாகத்தின் அக்கரையில் நனவற்ற நிலையில் நீடித்திருந்தார்கள்.(2) (தாங்கள் செய்த) அத்துமீறல்களைக் கழுவிக் கொண்டோம் என்ற நினைவால் கலக்கமடைந்து, (பிரம்மத்துடன்) ஐக்கியமடையத் தவறிய அவர்கள், காலக் குணங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டவர்களானார்கள்[1].(3) அவர்கள் யோக பாதையில் இருந்து விலகிச் சென்றாலும், தேவர்களின் நிலத்தில் அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தனர். அவர்கள் குருக்களின் நிலத்தில் மனிதர்களில் முதன்மையானவர்களாகக் குசிகனின் மகன்களாகப் பிறப்பார்கள்.(4) அவர்கள் பித்ருக்களுக்காக உயிரினங்களைக் கொல்வதன் மூலம் அறப் பயிற்சிகளைத் தொடர்வார்கள். மேலும் (இவ்வாறே) தகுதி குறைந்தவர்களாக இன்னும் இழிந்த பிறவிகளையும் அடைவார்கள்.(5)

Tuesday, 7 April 2020

பித்ருகணங்களின் அமைப்பு | ஹரிவம்ச பர்வம் பகுதி – 18

(பித்ரு கல்பம் - 2)

An account of Pitris | Harivamsa-Parva-Chapter-18 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : வடிவமற்ற மூன்று வகை பித்ருக்களையும், வடிவத்துடன் கூடிய நான்கு வகை பித்ருக்களையும் குறித்து மார்க்கண்டேயருக்கு விளக்கிச் சொன்ன சனத்குமாரர்...

மார்க்கண்டேயர் {பீஷ்மரிடம்}, "ஓ! கங்கையின் மைந்தா {பீஷ்மா}, மிகத்தொடக்கத்திலிருந்து அனைத்தையும் என்னிடம் இருந்து கேட்பாயாக. தேவர்களில் பிரகாசமானவரும், தேவர்களில் முதன்மையானவரும், நித்திய தேவரும், மதிப்பிற்குரியவருமான ஸனத்குமாரர் இவ்வாறு பேசிய பிறகு, நான் மீண்டும் அவரிடம் என் ஐயங்களைக் குறிப்பிட்டேன்.(1,2)

Saturday, 4 April 2020

பித்ருக்களின் பேறு | ஹரிவம்ச பர்வம் பகுதி – 17

(பித்ரு கல்பம் - 1)

Beatification of manes | Harivamsa-Parva-Chapter-17 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : பித்ருக்கள் தொடர்பாக மார்க்கண்டேயருக்கும், சனத்குமாரருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "என் தந்தையிடம் {சந்தனுவிடம்} ஏற்கனவே நான் கேட்ட அதே கேள்வியை, என் தந்தை சொன்ன சொற்களுக்கு இணங்க மார்க்கண்டேயரிடமும் கேட்டேன். அறம் சார்ந்த உயரான்மாவான மார்க்கண்டேய முனிவரும் என்னிடம், "ஓ! பாவமற்றவனே, நான் அனைத்தையும் சொல்கிறேன் கவனமாகக் கேட்பாயாக" என்றார்.(1,2)

Friday, 3 April 2020

பித்ருக்களின் தோற்றமும் சிராத்தப் பலன்களும் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 16

(சிராத்தகல்பப்ரஸங்கம்)

The origin of Pitris and fruits of Sraddhas | Harivamsa-Parva-Chapter-16 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : பித்ருக்கள் மற்றும் சிராத்தங்கள் குறித்து யுதிஷ்டிரனுக்குப் பீஷ்மர் சொன்னதை ஜனமேஜனிடம் சொன்ன வைசம்பாயனர்; தம்பிக்குச் சிராத்தம் செய்த பீஷ்மர்; பிண்டத்தை வேண்டிய சந்தனு; சந்தனுவிடம் பித்ருக்கள் மற்றும் சிராத்தங்கள் குறித்துக் கேட்ட பீஷ்மர்...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "சிறப்புமிக்க ஆதித்யன், சிராத்தங்களின் (தலைமை) தேவனானது எவ்வாறு? அவற்றைச் செய்வதற்கான மிகச்சிறந்த முறை எது? ஓ! விப்ரரே, இவை அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்.(1) பித்ருக்களின் தோற்றம் எது? அவர்கள் யார்? பிராமணர்களின் உரையாடல்களில், சொர்க்கத்தில் இருக்கும் பித்ருக்கள் (மூதாதையரின் ஆவிகள்) தேவர்களுக்கும் தேவர்களாவர் என்று நாம் கேள்விப்படுகிறோம். வேதங்களை நன்கு கற்றோரோராலும் இதுவே சொல்லப்படுகிறது. எனவே, நான் இதை அறிய விரும்புகிறேன்.(2,3) பித்ருக்களின் மிகச் சிறந்த படைப்பு, அவர்களது பல்வேறு வகைகள், அவர்களது பெரும்பலம், நாம் செய்யும் சிராத்தங்களால் அவர்கள் நிறைவடைவது எவ்வாறு? மகிழ்ச்சியடையும் அவர்கள் நம் மீது ஆசிகளைப் பொழிவது எவ்வாறு என்பன குறித்து நான் கேட்க விரும்புகிறேன்" என்றான் {ஜனமேஜயன்}.(4,5)

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்