Showing posts with label சத்யபாமா. Show all posts
Showing posts with label சத்யபாமா. Show all posts

Wednesday, 30 December 2020

கிருஷ்ணனின் சந்ததி | விஷ்ணு பர்வம் பகுதி – 160 – 104

(விருஷ்ணிவம்சவர்ணநம்)

Krishna's children | Vishnu-Parva-Chapter-160-104 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனின் குடும்பம்; பலதேவன், வசுதேவன், பிரத்யும்னன், அநிருத்தன் ஆகியோரின் குடும்ப வம்சாவளி கூறப்படல்...


Krishna with his children

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மதிப்பிற்குரிய ஐயா, கிருஷ்ணனின் பல்லாயிரம் மனைவியரில் எட்டுப் பெயர்களை முறையாகக் குறிப்பிட்டீர். அவர்களின் பிள்ளைகளைக் குறித்து இப்போது சொல்வீராக" என்று கேட்டான்.(1)

Saturday, 7 November 2020

புண்யகச் சடங்கைச் செய்த சத்யபமா | விஷ்ணு பர்வம் பகுதி – 133 – 077

(த்யுதரோ꞉ புந꞉ ஸ்வஸ்தாநே நயநம்)

Satya perform the rite | Vishnu-Parva-Chapter-133-077 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : சத்யபாமையின் புண்யக நோன்பு; நாரதருக்குக் கொடையளித்துத் தன்னை மீட்டுக் கொண்ட கிருஷ்ணன்; பாரிஜாதத்தை மீண்டும் சொர்க்கத்திற்குக் கொண்டு சென்றது...

Narada Rukmini Satyabama Krishna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! குருவின் வழித்தோன்றலே, முனிவர்களிலும், பேசுபவர்களிலும் முதன்மையானவரும், தவத்தையே செல்வமாகக் கொண்டவருமான நாரதர், கிருஷ்ணனால் நினைக்கப்பட்டவுடனேயே அங்கே வந்தார்.(1) ஓ! மன்னா, ஸ்ரீயின் அழகிய தலைவன் முறையாக அவரை வழிபட்டு, புண்யகச் சடங்குகளை ஏற்றுக்கொள்ளுமாறு மதிப்புடன் அழைத்தான்.(2) 

Friday, 6 November 2020

துவாரகையில் பாரிஜாத மரம் | விஷ்ணு பர்வம் பகுதி – 132 – 076

(ஸ்வர்காத்பாரிஜாதாநயனம்)

Indra fights with Krishna | Vishnu-Parva-Chapter-132-076 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனுக்கும் இந்திரனுக்கும் இடையில் மீண்டும் போர்; அமைதியை நிலைநாட்டிய கசியபரும் அதிதியும்; துவாரகை வந்த பாரிஜாதம்.

wishful tree fulfill ambition parijata tree

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "உயர்ந்த ஆன்மா கொண்டவனும், மதுசூதனனுமான கிருஷ்ணன், வில்வத்துக்கும், நீருக்கும் தலைவனை {சிவனை} வணங்கிவிட்டுத் தன் தேரில் ஏறிச் சென்றான்; அவன் தன் தேரில் அமர்ந்து கொண்டு புஷ்கரையின் அருகில் தேவர்களுடன் கூடிய தேவமன்னனை {இந்திரனை} அழைத்தான்.(1,2)

Monday, 12 October 2020

பாரிஜாத மர வரலாறு | விஷ்ணு பர்வம் பகுதி – 125 – 069

(பாரிஜாதஹரணே க்ருஷ்ணப்ரதிஜ்ஞா)

The history of the Parijata tree the coloquy between Krishna and Narada | Vishnu-Parva-Chapter-125-069 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பாரிஜாத மரத்தை வேண்டி இந்திரனிடம் செல்லுமாறு நாரதரிடம் சொன்ன கிருஷ்ணன்; பாரிஜாத மரத்தின் வரலாற்றைச் சொன்ன நாரதர்...

Narada Satyabhama and Krishna


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "எல்லாம்வல்லவனும், அளவில்லா சக்திகளைக் கொண்டவனுமான விஷ்ணு {கிருஷ்ணர்}, நாரதர் புறப்பட விரும்புவதைக் கண்டு அவரிடம் இவ்வாறு பேசினான்.(1) {கிருஷ்ணன்}, "ஓ! பாவமற்றவரே, பெரும் முனிவரே, அறங்கள் அனைத்தின் உண்மை அறிந்தவரே, நீர் சொர்க்கத்திற்குச் சென்று, திரிபுரனை அழித்த நுண்ணறிவுமிக்கவனின் {சிவனின்} சபையினரிடம் பேசி,(2) பாகசாசனனிடம் {இந்திரனிடம்} நீர் அறிந்த வகையில் எங்களுக்கிடையில் இருந்த பழங்காலத்து சகோதர அன்பை நினைவூட்டி, அவனிடம் என் ஆணையாக இல்லாமல் வேண்டுகோளாக {பின்வருவனவற்றைத் தெரிவிப்பீராக},(3) முனிவர்களில் முதன்மையானவரும், அறம்சார்ந்தவரும், சிறப்புமிக்கவருமான கசியபரால் பழங்காலத்தில் அதிதியின் மகிழ்ச்சிக்காகப் படைக்கப்பட்ட அந்தப் பாரிஜாத மரத்தை,(4) அறத்தகுதிகளையும் {புண்ணியங்களையும்} அளவற்ற செழிப்பையும் அருளும் அந்தச் சிறந்த மரத்தை, அறத்தகுதிகளை வளர்த்துக் கொள்வதற்கான தங்கள் நோன்புகளை நிறைவேற்றுவதற்காக அறம்சார்ந்த தேவியராலேயே உமக்குக் கொடையாக அளிக்கப்பட்ட அந்த மரத்தைக்(5) கொடையளித்த கதைகளைக் கேட்ட என் மனைவியரும் கூட, ஓ! தலைவா, அறத்தையும், சிறப்பான செயல்களின் விளைவால் நேரும் அறத்தகுதிகளையும் {புண்ணியங்களையும்} ஈட்டுவதற்காகவும், என் நிறைவுக்காகவும் கொடையளிக்க விரும்புவதாக {இந்திரனிடம்} சொல்வீராக.(6) மரங்கள் அனைத்திலும் சிறந்த பாரிஜாதத்தைத் துவாராவதிக்கு அனுப்புமாறு அவனிடம் கேட்பீராக; கொடைவிழா நிறைவடைந்ததும் அது சொர்க்கத்திற்கு மீளட்டும். பலனை {பலாசுரனைக்} கொன்றவனும், எல்லாம் வல்லவனுமான அந்தத் தேவனிடம் {இந்திரனிடம்} இவ்வாறே நீர் பேச வேண்டும்.(7,8) ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, தேவர்களின் தலைவன் பாரிஜாதமெனும் அந்தச் சிறந்த மரத்தைக் கொடுக்கும் வகையில் நீர் முன் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.(9) ஓ! தவமெனும் செல்வத்தைக் கொண்டவரே, தூதராகச் செயல்படும் உமது திறன்களையும் அது {அம்முயற்சிகள்} புகழ்பெறச் செய்யும்; உமது செயல்கள் அனைத்தும் வெற்றியடையும் என்பதால் இது சாத்தியப்படும் என்பதை நான் அறிவேன்" என்றான் {கிருஷ்ணன்}.(10)

Saturday, 10 October 2020

சத்யபாமாவின் துயரம் | விஷ்ணு பர்வம் பகுதி – 124 – 068

(பாரிஜாதோத்பத்திகதனம்)

Satyabhama's grief | Vishnu-Parva-Chapter-124-068 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : சத்யபாமாவின் துக்கத்திற்கான காரணத்தைக் கேட்டறிந்த கிருஷ்ணன்; பாரிஜாத மரம் கொணர்வதாக உறுதி கூறல்; பாரிஜாத மலரின் மகிமையைச் சொன்ன நாரதர்...

Krishna and Satyabhama

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! பாரதா, பொறாமையுடன் கூடிய சினத்தின் ஆதிக்கத்தில் இருந்தவளும், கற்புடையவளும், அழகியுமான சத்யபாமாவிடம் மீண்டும் நாராயணன் {கிருஷ்ணன்} பின்வரும் வகையில் அன்புடன் பேசினான்.(1)

Thursday, 8 October 2020

சத்யபாமாவின் சினமும் கேசவனின் ஆறுதலும் | விஷ்ணு பர்வம் பகுதி – 123 – 067

(கிருஷ்ணேன பாமாக்ரோதகாரணப்ரஷ்னம்)

Satyabhama's resentment and Keshava's consolation to her | Vishnu-Parva-Chapter-123-067 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : சத்யபாமாவின் மாளிகைக்குச் சென்ற கிருஷ்ணன்; பொறாமையில் வெந்து கொண்டிருந்த சத்யபாமாவைத் தேற்றும் வகையில் பேசியது; தபம் செய்ய அனுமதி கேட்ட சத்யபாமா...

Sathyabama and Krishna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அனைத்துக் காரியங்களையும் அறிந்தவனான கேசவன் {கிருஷ்ணன்}, அந்த முனிவர் {நாரதர்}, ருக்மிணியின் அருகில் அமர்ந்திருப்பதைக் கண்டு, ஏதோ காரியத்துக்காக (சத்யபாமாவின் மாளிகைக்குப்) புறப்பட்டுச் சென்றான்.(1) இனிமை நிறைந்த ரைவத மலையில் விஷ்வகர்மனால் கட்டப்பட்ட சத்யபாமாவின் பெரிய மாளிகையை நோக்கி அவன் விரைந்து சென்றான்.(2) விஷ்ணு {கிருஷ்ணன்}, தன் அன்புக்குரியவளும், உயிருக்கும் மேலானவளும், சத்ராஜித்தின் மகளுமானவள் {சத்யபாமா} பொறாமையுடன் கூடிய கோபத்தில் இருப்பதை அறிந்து (அந்த மாளிகைக்குள்) மெதுவாக நுழைந்தான்.(3) மதுசூதனன், பொறாமையில் இருக்கும் தன் அன்புக்குரியவளை பாசத்துடன் நினைத்து, அச்சத்துடன் மெல்லடிகளை எடுத்து வைத்து மெதுவாகச் சென்றான்.(4) நாரதருக்கு மகிழ்ச்சியூட்டி அவரைக் கவனித்துக் கொள்வதில் பிரத்யும்னனை ஈடுபடுத்திவிட்டு வந்த அவன், தன் பணியாளான {தேரோட்டியான} தாருகனிடம், "வாயிலில் காத்திருப்பாயாக" என்று சொல்லிவிட்டு சத்யபாமாவின் அரண்மனைக்குள் நுழைந்தான்.(5)

Tuesday, 6 October 2020

ருக்மிணிக்குப் பாரிஜாதம் கொடுத்த கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 122 – 066

(பாரிஜாதநிபம்தநம் ஸத்யாகோபம்)

The present of the Parijata by Krishna to Rukshmini | Vishnu-Parva-Chapter-122-066 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : நாரதர் கொடுத்த பாரிஜாத மலர்; அதை ருக்மிணி அடைந்தது; ருக்மிணியைத் துதித்த நாரதர்; சத்யபாமாவின் பொறாமை...

Parijata tree and flower Indian postal stamp

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, மதுராவில் பிறந்த கிருஷ்ணனின்[1] மங்கல வரலாற்றை மீண்டும் மீண்டும் கேட்டு இன்னும் என்னால் முழுமையான நிறைவை எட்ட முடியவில்லை.(1) மனைவியரை மணந்து கொண்டு துவாரகையில் வசித்தவனும், ஆறு குணங்களைக் கொண்டவனுமான கிருஷ்ணனின் வரலாற்றை நீர் நன்கறிவீர். இப்போது எனக்கு அதைச் சொல்வீராக" என்று கேட்டான்[2].(2)

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்