(கலியுகவர்ணநம்)
Kali yuga described | Bhavishya-Parva-Chapter-04 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : கலியுகத்தை வர்ணித்த வியாசர்...
ஜனமேஜயன் {வியாசரிடம்}, "மொத்த உலகும் இவ்வாறு மாசடையும்போது, மனிதர்கள் எவரால் பாதுகாக்கப்படுவார்கள்? அவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள்? அவர்கள் எதை உண்பார்கள்? அவர்கள் எவ்வாறு இன்புற்றிருப்பார்கள்?(1) அவர்களின் செயல்பாடுகளும், முயற்சிகளும் எவ்வாறு இருக்கும்? அவர்கள் எவ்வளவு காலம் வாழ்வார்கள்? அவர்கள் {மனிதர்கள்} எந்த எல்லையை எட்டியதும் சத்திய யுகத்தை அடைவார்கள்?" என்று கேட்டான்.(2)


