Showing posts with label பவிஷ்ய பர்வம். Show all posts
Showing posts with label பவிஷ்ய பர்வம். Show all posts

Friday, 17 February 2023

சுவடுகளைத் தேடி - பவிஷ்ய பர்வம்

Lord Krishna

ஹரிவம்சத்தின் இரண்டாம் பர்வமான விஷ்ணு பர்வம் வரை பல்வேறு பதிப்புகளை ஒப்புநோக்க முடிந்தது. ஆனால் பவிஷ்ய பர்வம் அதற்கு இடங்கொடுக்கவில்லை. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் ஹரிவம்ச பதிப்பு விஷ்ணு பர்வத்தை மட்டுமே கொண்டிருப்பதாலும், பிபேக்திப்ராயின் பதிப்பு செம்பதிப்பாகையால் பவிஷ்ய பர்வத்தின் பெரும்பகுதி தவிர்க்கப்பட்டிருப்பதாலும், பவிஷ்ய பர்வத்திற்கான நமது மொழிபெயர்ப்பின் ஒப்புநோக்குதலுக்கு அப்பதிப்புகளைப் பயன்படுத்த முடியவில்லை. சித்திரசாலை பதிப்பை ஒட்டி தேசிராஜு ஹனுமந்தராவ் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இணையத்தில் கிடைக்கும் பதிப்பில் பவிஷ்ய பர்வத்தில் நான்கு அத்தியாயங்கள் மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பவிஷ்ய பர்வத்தின் 135 அத்தியாயங்களுக்கான சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அங்கே முழுமையாகக் கிடைக்கின்றன. மன்மதநாததத்தரின் பதிப்பில் பவிஷ்ய பர்வத்தில் மொத்தம் 48 அத்தியாயங்கள் மட்டுமே இருக்கின்றன. இங்கே நாம் மொழிபெயர்த்திருக்கும் பவிஷ்ய பர்வத்தின் 110 அத்தியாயங்களில், முதல் 46 அத்தியாயங்களும், இறுதியில் 2 அத்தியாயங்களும் மன்மதநாததத்தரின் பதிப்பைக் கொண்டு செய்யப்பட்டன. எஞ்சிய 62 அத்தியாயங்கள் சுவாமி ஏ.ஜி.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களின் International Society for Krishna Consiousness வெளியீட்டில் வந்த திரு.பூமிபதி தாசரின் ஆங்கில மொழிபெயர்ப்பின் துணை கொண்டு செய்யப்பட்டது. 

Bhavishya Parva wrapper

பவிஷ்ய பர்வத்தின் 37ம் அத்தியாயத்தில் மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லாத மற்றொரு அத்தியாயம் 37அ என்ற தலைப்பிட்டு சேர்க்கப்பட்டிருக்கிறது. அதே போல 38ம் அத்தியாயத்தில் 38அ, 38ஆ, 38இ என்ற மூன்று அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. எனவே, நம் பதிப்பின் பவிஷ்ய பர்வ பொருளடக்கத்தை வெளிப்படையாகப் பார்க்க 110 அத்தியாயங்களைக் கொண்டதாகத் தெரிந்தாலும், உண்மையில் 114 அத்தியாயங்களும், 3866 சுலோகங்களும் இருக்கின்றன. சித்திரசாலை பதிப்பில் பவிஷ்ய பர்வம் 135 அத்தியாயங்களைக் கொண்டதாகும். அவற்றில் 21 அத்தியாயங்கள் நம் பதிப்பில் விடுபட்டிருக்கும். முதல் 46 அத்தியாயங்களும் மன்மதநாததத்தரின் பதிப்பை ஒட்டி செய்தபோது, இந்த 21 அத்தியாயங்கள் விடுபட்டன. 37ம் அத்தியாயத்தில் இருந்து தொடங்கும் நரசிம்ம அவதாரம் முதல் 44ம் அத்தியாயம் வரையுள்ள பகுதிகளுக்கிடையிலேயே இந்த அத்தியாயங்கள் அனைத்தும் விடுபட்டிருக்கின்றன. அந்த அத்தியாயங்கள் முழுவதும் தேவாசுரப் போரை வர்ணிப்பனவாக உள்ளன. மன்மதநாததத்தர் இதற்கடுத்து வரும் வாமனாவதாரத்தையும் மொழிபெயர்த்திருக்கிறார். நரசிம்மாவதாரத்தில் வரும் அந்தக் குறிப்பிட்ட 21 அத்தியாயங்களையும் அவர் தவிர்த்திருப்பதால், இங்கும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. 47ம் அத்தியாயத்தில் பிறகு வருவனவற்றில் இறுதியான 2 அத்தியாயங்களைத் தவிர மற்ற அனைத்தையும் மன்மதநாததத்தர் தவிர்த்திருந்தாலும் இங்கே சேர்க்கப்பட்டிருப்பது ஏனென்றால், மஹாபாரத நாயகர்களுக்குத் தலைவனான கிருஷ்ணனைக் குறித்த செய்திகளாக அவை இருப்பதனால்தான். 

பவிஷ்ய பர்வத்தின் தொடக்கத்தில், பிரபஞ்சப் படைப்பின் கதை வேறு கோணத்தில் சொல்லப்படுகிறது. பிராணாயாமச் செயல்முறை, பிருதுவின் கதை, தக்ஷன் வேள்வி, வராஹ அவதாரம், வேதங்களின் படைப்பு ஆகியவையும்,  நரசிம்ம அவதாரம் முற்றிலும் வேறு வகையிலும் சொல்லப்படுகின்றன. அடுத்ததாக வாமன அவதாரம் குறித்துச் சொல்லப்படுகிறது. பவிஷ்ய பர்வத்தின் 48ம் அத்தியாயம் முதல் துவாரகையில் கிருஷ்ணனின் இளமைக் காலம் விவரிக்கப்படுகிறது. அதில் புத்திரப்பேறுக்காக கைலாசத்தில் கிருஷ்ணன் தவமிருந்தது, கண்டாகர்ணன் என்ற பிசாசு முக்தியடைந்தது, விஷ்ணுவின் சிவத்துதி, சிவனின் விஷ்ணு துதி ஆகியவை இருக்கின்றன. மேலும் விஷ்ணுபுராணம், பாகவதம் போன்றவற்றில் வரும் பௌண்டரகன், ஹம்சன், டிம்பகன், விசக்ரன் ஆகியோரைக் குறித்தும், மிக முக்கியமாக ஏகலவ்யனின் மறைவு குறித்தும் குறிப்புகள் இருக்கின்றன.

2021ம் ஆண்டு பங்குனி உத்திரத்தன்று (28.3.2021) அன்று தொடங்கப்பட்ட பவிஷ்ய பர்வ மொழிபெயர்ப்பு ஜூலை 9, 2021 அன்று மன்மதநாததத்தரின் 48 அத்தியாயங்களோடு முடிவடைந்தது. அடுத்ததாக ஜூலை 19, 2021 அன்று இராமாயண மறு ஆக்கமும் தொடங்கப்பட்டது. இருப்பினும் பவிஷ்ய பர்வம் நிறைவடையாததைப் போன்ற உணர்வே ஆதிக்கம் செலுத்தி வந்தத்தால், ராமாயணத்தின் முதல் காண்டமான பால காண்டம் நிறைவடையும் முன்பே, மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லாத பவிஷ்ய பர்வப் பகுதிகளையும் மீண்டும் மொழிபெயர்க்கத் தொடங்கினேன். அக்டோபர் 6, 2021 முதல் ஒருநாள் ராமாயணத்தின் ஒரு சர்க்கத்தை மறு ஆக்கம் செய்தால், அடுத்த நாள் பவிஷ்ய பர்வத்தில் ஓர் அத்தியாயத்தை மொழிபெயர்ப்பதெனத் தீர்மானித்து மெல்ல மெல்ல பவிஷ்ய பர்வத்தையும் மொழிபெயர்த்து வந்தேன். டிசம்பர் 5, 2021ல் ராமாயணத்தின் பாலகாண்டம் நிறைவடைந்ததும், ராமாயண மறு ஆக்கத்தை சற்றே நிறுத்தி வைத்துவிட்டு, ஹரிவம்ச பவிஷ்ய பர்வத்தை முழுமூச்சாக மொழிபெயர்க்கத் தொடங்கினேன். அவ்வாறே தொடர்ந்து செயல்பட்டு பவிஷ்ய பர்வத்தின் இறுதி அத்தியாயத்தை மார்ச் 2, 2022 அன்று மொழிபெயர்த்து நிறைவடைந்தேன். பிப்ரவரி 8, 2020ல் தொடங்கப்பட்ட ஹரிவம்ச மொழிபெயர்ப்பு இவ்வாறே நிறைவடைந்தது.

ஹரிவம்சம் முதல் பர்வத்தில் 55 அத்தியாயங்களும், 3,119 சுலோகங்களும் இருக்கின்றன. இரண்டாம் பர்வமான விஷ்ணு பர்வத்தில் 132 அத்தியாயங்களும், 7,787 சுலோகங்களும் இருக்கின்றன. மூன்றாம் பர்வமான பவிஷ்ய பர்வத்தில் 110 அத்தியாயங்களும் {சரியாகச் சொன்னால் 114 அத்தியாயங்களும்}, 3,866 சுலோகங்களும் இருக்கின்றன. ஆக மொத்தம் ஹரிவம்சம் முழுமையாக 297 அத்தியாயங்களும் {சரியாகச் சொன்னால் 301 அத்தியாயங்களும்}, 14,772 சுலோகங்களும் கொண்ட பதிப்பாக அமைந்திருக்கிறது. 


பவிஷ்ய பர்வத்தின் இறுதி அத்தியாயமான ஹரிவம்ச பலன்களில் 110:5, "கலியுகத்தில் ஜம்பூத்வீபத்தில் ஹரிவம்சத்தை அறிபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதாகவே இருக்கும்" என்று சொல்லப்படுகிறது. அத்தகைய அரிதினும் அரிதான படைப்பை தமிழ் வாசகர்களுக்கு அளிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். ஐயம் எழும் இடங்கள் அனைத்திலும் எனக்குப் பேருதவியாக இருந்த பதிப்புகளைச் செய்த மன்மதநாததத்தர், தேசிராஜு ஹனுமந்த ராவ், உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்கார், பிபேக்திப்ராய், பூமிபதி தாசர் ஆகியோரை என் குருக்களாக பாவித்துத் தொழுகிறேன். பதிவுகளை இட்ட உடனுக்குடன் திருத்தம் செய்து உதவிய நண்பர் உ.ஜெயவேலன் அவர்களுக்கும், தள்ளாத வயதிலும் சொல் சொல்லாக, வரி வரியாகப் படித்து, சொற்பிழைகளையும், சொற்றொடர் பிழைகளையும் சுட்டிக் காட்டிய என் சித்தி திருமதி.நா.பிரபா அவர்களுக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த பாக்கியத்தை எனக்கு ஏற்படுத்தித் தந்த பரமனை உளமாறப் போற்றித் துதிக்கிறேன்.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்
202302171232

Wednesday, 2 March 2022

ஹரிவம்சப் பலன்கள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 110

(ஹரிவம்ஷ²ஷ்²ரவணப²லம் மபா⁴ராதஸமாப்திஷ்²ச)

The fruits of the recitation of Harivamsha| Bhavishya-Parva-Chapter-110 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : ஹரிவம்சம் உரைப்பவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய கொடை; ஹரிவம்சம் கேட்பவருக்கும், படிப்பவருக்கும் உண்டான பலன்...

Vyasa and Vishampayana in Janamejaya's sacrice

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, ஹரிவம்சத்தைக் கேட்பதன் மூலம் ஒருவன் அடையும் பலன்களையும், அவன் கொடுக்க வேண்டிய கொடைகளையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.{1}

ஹரிவம்சம் பொருளடக்கம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 109

(ஹரிவம்ஷவ்ருத்தாந்தஸங்க்ரஹம்)

Contents of Harivamsha | Bhavishya-Parva-Chapter-109 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : ஹரிவம்சத்தின் பொருளடக்கம் சுருக்கமாகச் சொல்லப்படுகிறது...

Harivamsam

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இனி, நாம் விவாதித்த ஹரிவம்சத்தின் பொருளடக்கத்தைச் சுருக்கமாக நினைவுகூர்கிறேன்.

{1. ஹரிவம்சபர்வம்}

தொடக்கத்தில் வரும் ஹரிவம்ச பர்வத்தில் அண்டத்தின் அடிப்படை படைப்பு விளக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து பூதங்களின் படைப்பும் விளக்கப்பட்டது.(1) வேனனின் மகன் பிருதுவின் கதை சொல்லப்பட்டது. அதன்பின் வைவஸ்வத மனுவின் குலத்தில் வந்த மனுக்கள் விளக்கப்பட்டனர். துந்துமாரன் கதையும் விளக்கப்பட்டது.(2) காலவரின் தோற்றம், இக்ஷ்வாகு குல விளக்கம், பித்ருக்களுக்கு அளிக்கப்படும் ஆகுதி காணிக்கைகளின் விளக்கம், சோமன் கதை, புதன் கதை ஆகியனவும் சொல்லப்பட்டன.(3)

திரிபுரவதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 108

(திரிபுரவதவ்ருத்தாந்தம்)

Tripura annihilated | Bhavishya-Parva-Chapter-108 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : திரிபுரமெனும் அசுரர்களின் ஆகாய நகரங்கள் மூன்றும் சிவனால் அழிக்கப்பட்டது...

Shiva in chariot and vishnu as bull

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "பிராமணரே, முக்கண்ணனான மஹாதேவன் மூன்று நகரங்களுக்கு ஒப்பான விமானங்களில் வானில் பயணித்த அசுரர்களின் மகன்களை எவ்வாறு கொன்றான்? இது குறித்து நான் கேட்க விரும்புகிறேன்" என்றான்.(1)

மஹாபாரதப் பலன்கள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 107

(பாராயணபர்வக்ரமேண மஹாபாரதஷ்ரவணபலம்)

The fruits of the recitation of the Bharata | Bhavishya-Parva-Chapter-107 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : ஒவ்வொரு பர்வத்தின் நிறைவிலும் என்னென்ன கொடைகள் அளிக்கப்பட வேண்டும்; மஹாபாரதம் உரைப்பவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய கொடை; மஹாபாரதம் கேட்பவருக்கும், படிப்பவருக்கும் உண்டான பலன்...

Vaishampayan reciting Mahabharata to Janamejaya ஜனமேஜயனிடம்

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மதிப்பிற்குரிய ஐயா, கல்விமான்கள் எந்த விதிகளின்படி பாரதத்தைக் கேட்கிறார்கள்? அதன் பலன்கள் என்னென்ன? அது நிறைவடையும்போது வழிபடப்பட வேண்டிய தேவர்கள் யாவர்?{1} ஒவ்வொரு பர்வம் நிறைவடையும்போதும் செய்ய வேண்டிய ஈகைகள் என்னென்ன? அதைச் சொல்பவர் எவ்வாறு இருப்பது உகந்தது? இவை அனைத்தையும் எனக்கு விளக்கிச் சொல்வீராக" என்று கேட்டான்.{2}(1,2)

Tuesday, 1 March 2022

மீண்டும் துவாரகை | பவிஷ்ய பர்வம் பகுதி – 106

(ஷ்ரீக்ருஷ்ணஸ்ய த்வாரவதீகமநம்)

Return to Dwaraka | Bhavishya-Parva-Chapter-106 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்:  புஷ்கரையில் கிருஷ்ணனைத் துதித்த முனிவர்கள்; துவாரகை திரும்பிய கிருஷ்ணன்...


Balarama and Krishna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, மஹாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணன், பிற யாதவர்களுடன் சேர்ந்து துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றான். வழியில் புஷ்கரையில் நின்று அங்கே வசித்து வந்த பெரும் முனிவர்களைச் சந்தித்தான்.(1)

Monday, 28 February 2022

நந்தனும் யசோதையும் | பவிஷ்ய பர்வம் பகுதி – 105

(நந்தயஷோதயோர்கோவர்தநே ஷ்ரீக்ருஷ்ணதர்ஷநம்)

Nanda and Yashoda | Bhavishya-Parva-Chapter-105 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்:  நந்தகோபரும், யசோதையும், ஆயர்பாடி மக்களும் கோவர்த்தன மலையில் கிருஷ்ணனையும், பலராமனையும் சந்தித்தது...


Balarama Nanda Krishna Yashoda

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "யசோதையும், நந்தகோபனும் நீண்ட நாட்களாகக் கிருஷ்ணனைக் காண விரும்பினர். எனவே, அவன் தன் தமையனுடன் {பலராமனுடன்} கோவர்த்தன மலைக்கு வந்திருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டதும் அவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். கோபர்கள், கோபிகைகள் ஆகியோர் அனைவரையும் திரட்டிக் கொண்டும், வெண்ணெய், தயிர், சுண்டவைக்கப்பட்ட பால், பாயஸம், காட்டு மலர்கள், மயில் இறகுகளாலான கைவளைகள் ஆகியவற்றையும், இன்னும் பிற பரிசுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டும் அவர்கள் கோவர்த்தன மலைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.(1-3)

டிம்பகன் ஆத்ம தியாகம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 104

(டிம்பகஸ்யாத்மத்யாகம்)

Dimbhaka Commits Suicide | Bhavishya-Parva-Chapter-104 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்:  அண்ணனின் பிரிவு தாளாமல் தன் நாவைப் பிடுங்கி உயிர்த்தியாகம் செய்த டிம்பகன்...


Drowning under water

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "டிம்பகன், பெருஞ்சக்திவாய்ந்த தன் அண்ணன் ஹம்சன் பெரும்போரில் கொல்லப்பட்டான் என்பதைக் கேட்டதும், பலராமனுடன் போர் புரிவதை நிறுத்திவிட்டு யமுனையின் கரைக்குச் சென்றான். கலப்பைதாரியான பலராமன் வேகமாக ஓடி அவனை விரட்டிச் சென்றான்.(1,2) மன்னா {ஜனமேஜயா}, ஹம்சன் குதித்த அதே இடத்தில் டிம்பகனும் யமுனையின் நீரில் குதித்தான். அதன் விளைவாக யமுனையின் நீர் கலங்கியது.(3)

ஹம்ச வதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 103

(ஹம்ஸவதம்)

Hamsa sunk | Bhavishya-Parva-Chapter-103 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: யமுனையின் மடுவில் ஹம்சனை மூழ்கடித்த கிருஷ்ணன்...


A man jumping into a lake

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, மஹாபயங்கரமான அவ்வாயுதம் {வைஷ்ணவாஸ்திரம்} தன்னை அணுகுவதைக் கண்ட மன்னன் ஹம்சன் பீதியில் கிட்டத்தட்ட முடக்கமடைந்தான்.(1) விரைவில் பதற்றம் தணிந்த அவன் தன் தேரில் இருந்து குதித்தான். பிறகு, ரிஷிகேசனான கிருஷ்ணன் ஏற்கனவே காளியனைத் தண்டித்த யமுனை ஆற்றை நோக்கி அவன் ஓடினான்.(2) யமுனையில் இருந்த அந்தப் பெரிய மடுவின் நீர், பாதாளலோகம் வரை ஆழம் கொண்டதாகவும், அஞ்சனத்தைப் போல் கருமையாகவும் இருந்தது.(3)

கிருஷ்ணன் ஹம்சன் போர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 102

(ஸ்ரீக்ருஷ்ணஹம்ஸயோர்யுத்தம்)

Krishna Hamsa Battle | Bhavishya-Parva-Chapter-102 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: புஷ்கரத்தில் இருந்து கோவர்த்தன மலைக்குப் பெயர்ந்த போர்; கிருஷ்ணனும் ஹம்சனும் போரிட்டது...


Krishna at war

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மன்னா, சகோதரர்களான ஹம்சன், டிம்பகன் இருவரும் அந்த இரவிலேயே கொண்டாடப்பட்ட மலையான கோவர்த்தன மலைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.(1) இரவு முடிந்து, சூரியன் எழுந்தபோது, கேசிசூதனனான கேசவனும் கோவர்த்தன மலைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(2) சாத்யகி, பலபத்ரன் {பலராமன்}, சாரணன் ஆகியோரும், பிற யாதவர்களும், கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களின் இசையால் எதிரொலிக்கப்பட்ட கோவர்த்தன மலைக்குக் கேசவனுடன் சென்றனர்.(3)

Sunday, 27 February 2022

ஹிடிம்பன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 101

(ஹிடிம்பேந ஸாகம் வஸுதேவோக்ரஸேநயோர்யுத்தம் பலபத்ரேண ஹிடிம்பபராபவஷ்ச)

Hidimba | Bhavishya-Parva-Chapter-101 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: ஹிடிம்பனுடன் போரிட்ட வசுதேவரும், உக்ரசேனனும்; ஹிடிம்பனை வீழ்த்திய பலராமன்...


Balarama and hidimba

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வசுதேவரும், உக்ரசேனனும் நரைமுடியும், சுருங்கிய தோலும் கொண்ட கிழவர்களாக இருந்தாலும், அவர்களும் மகிழ்ச்சியாக அந்தப் போரில் ஈடுபட்டனர்.(1) ஞானத்திலும், அதன் நடைமுறை பயன்பாட்டிலும் முன்னேற்றம் அடைந்தவர்களான அவர்கள் இருவரும், அரச வகையின் கடமைகளை முழுமையாக அறிந்திருந்தனர். ராக்ஷசனான அந்தத் துராத்மாவிற்கு {ஹிடிம்பனுக்கு} எதிரான போரில் அவர்கள் இருவரும் ஒன்றுகூடிப் போரிட்டனர்.(2) ராக்ஷசேந்திரனும், துராத்மாவுமான ஹிடிம்பன் மீது ஆயிரக்கணக்கான கணைகளை ஏவி அவனை அவர்கள் துன்புறுத்தினர்.(3)

Saturday, 26 February 2022

டிம்பகன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 100

(ஸாத்யகிடிம்பகயோர்யுத்தம்)

Dimbhaka | Bhavishya-Parva-Chapter-100 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: சாத்யகிக்கும் டிம்பகனுக்கும் இடையில் நடந்த போர்; டிம்பகனின் மகிமை...


Dimbhaka

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அதே நேரத்தில் நிகரான சக்தி படைத்தவர்களும், கொண்டாடப்பட்ட க்ஷத்திரியர்களுமான டிம்பகனும், சாத்யகியும் கடும்போர் செய்து கொண்டிருந்தனர்.(1) அவ்விருவரும், முதன்மையான குருக்களிடம் போர்க்கலையினைக் கற்றுக் தேர்ச்சியடைந்தவர்கள் என்பதால், பெருஞ்சீற்றத்துடனும் திறனுடனும் போரிட்டனர். அவ்விருவரும் போரிட்டுக் கொண்டிருந்தபோது சாத்யகி, டிம்பகனின் மார்பு, முகம், வயிறு ஆகியவற்றை நோக்கிப் பத்துக் கணைகளை ஏவினான். பெரும்பலத்தில் பெருஞ்செருக்கு கொண்டிருந்தவனும், க்ஷத்திரியர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுபவனுமான டிம்பகனும் அடுத்தடுத்து சாத்யகியின் மீது ஐயாயிரம் கணைகளை ஏவினான். எனினும், அந்தப் பெரும் விருஷ்ணி வீரன் {சாத்யகி}, உரக்க முழங்கியபடியே அந்தக் கணை மழையை அழித்தான்.(2-4)

பலபத்ரன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 99

(ஹம்ஸபலபத்ரயோர்யுத்தம்)

Balabadhra | Bhavishya-Parva-Chapter-99 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: பலராமனுக்கும் ஹம்சனுக்கும் இடையில் நடந்த போர்...


Balarama and Krishna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அதன்பிறகு, வில்லாளிகளில் முதன்மையானவனும், தர்மாத்மாவுமான பலதேவன் {பலராமன்}, பத்துக் கணைகளை ஹம்சன் மீது ஏவினான்.(1) ஹம்சன், அவன் மீது ஐந்து கணைகளை ஏவி பதிலடி கொடுத்தாலும், கலப்பைதாரியான பலராமன், தன்னை நோக்கி வரும் கணைகளை மேலும் பத்துக் கணைகளால் தவிடுபொடியாக்கினான். பிறகு அவன் ஹம்சனின் நெற்றியில் ஒரு கணையால் பலமாகத் தாக்கினான்.(2) அந்தக் கணையானது, ஹம்சனை சுயநனவற்றவனாக்கித் தேரில் அமரச் செய்தது. சுயநனவு மீண்ட ஹம்சன், ஒரு கணையோடையை ஏவி, பலராமனுக்கு ஆழமான காயங்களை ஏற்படுத்தி, வானத்தில் பார்வையாளர்களாக நின்றிருந்த தேவர்களை வியப்படையச் செய்தான். அவன் {ஹம்சன்} இந்த அருஞ்செயலைச் செய்துவிட்டுச் சிங்கமுழக்கம் செய்தான்.(3,4)

விசக்ரவதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 98

(விசக்ரவதம்)

Vichakra killed | Bhavishya-Parva-Chapter-98 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: அசுரன் விசக்ரனைக் கொன்ற கிருஷ்ணன்...


Krishna fighting with his Gada and Saranga bow

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மன்னா, எண்ணற்ற படைவீரர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிய அந்தப் பெரும்போர் தொடர்ந்து கொண்டிருந்தபோது, கதாயுதத்தையும், கொண்டாடப்படும் சாரங்க வில்லையும் தரித்த கிருஷ்ணனை, விசக்ரன் தாக்கினான்.(1) அந்நேரத்தில் பலபத்ரன் {பலராமன்} ஹம்சனுடனும், சாத்யகி டிம்பகனுடனும், வசுதேவர் ஹிடிம்பனுடனும் போரிட்டுக் கொண்டிருந்தனர்.(2) இராஜேந்திரா {ஜனமேஜயா}, அந்தப் பெரும்போரில் பகைவரிடம் ஒருபோதும் சரணடைய நினையாத முதன்மையான போர்வீரர்கள் இவ்வாறே ஒருவரோடு ஒருவர் போரிட்டுக் கொண்டிருதனர்.(3)

Friday, 25 February 2022

கடும்போர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 97

(ஸங்குலயுத்தம்)

Fierce Battle | Bhavishya-Parva-Chapter-97 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: ஹம்சடிம்பகர்களுக்கும் யாதவர்களுக்கும் இடையில் மூண்ட கடும்போர்...


Battle

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மன்னா, அந்தப் பெரும்போர் தொடங்கியதும் இரு படைகளும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டதைப் போலத் தோன்றியது. இரு தரப்பிலும் எண்ணற்ற கொடிகளும், இரும்பு தண்டங்களும், கதாயுதங்களும், சக்தி ஆயுதங்களும் இருந்தன.(1) இரு படைகளிலும் சூலங்கள், வாள்கள், விற்கள் தரித்த படைவீரர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் பேரிகைகளும், எக்காளங்களும் முழக்கப்பட்டன.(2)

போர்க்களமான புஷ்கரம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 96

(உபயஸைந்யயோ꞉ புஷ்கரதீர்தப்ரவேஷம்)

Pushkara Battlefield | Bhavishya-Parva-Chapter-96 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: புஷ்கரைக்கு வந்த ஹம்சனும், டிம்பகனும்; ஹம்ச டிம்பகர்களின் நண்பனான தானவன் விசக்ரன்; விசக்ரனின் நண்பனான தைத்தியன் ஹிடிம்பன்; இரு படைகளும் போர்க்களம் புகுந்தது...


Pushkara Lake at Rajasthan in 1878

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மன்னா, அதே வேளையில் ஹம்சனும், டிம்பகனும் தங்கள் விற்களையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு, அலங்காரக் கொடிகளுடன் கூடிய எண்ணற்ற தேர்கள் சூழ புஷ்கரத் தீர்த்தத்திற்கு வந்தனர்.(1) அவ்விரு இளவரசர்களின் முன்பு, மொத்த உலகத்தையும் விழுங்கப் போவதைப் போலத் தோன்றும் இரண்டு பூதங்கள் இருந்தனர். அவர்கள் {அந்தப் பூதங்கள்} மேனியெங்கும் பஸ்மத்தைப் பூசிக்கொண்டு சிங்கங்களைப் போல முழங்கிக் கொண்டிருந்தனர்.(2) மேலும் ருத்ராக்ஷங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவர்கள் தங்கள் நெற்றிகளில் மூவரி திலகங்களைச் சூடியிருந்தனர். உலகை அழிப்பதற்காக வந்திருக்கும் இரு ருத்திரர்களைப் போல அவர்கள் தெரிந்தனர்.(3) அந்தப் பூதங்கள் இருவரையும் பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான படைவீரர்கள் வந்தனர். ஹம்சடிம்பகர்கள் பத்து அக்ஷௌஹிணி அளவுக்குப் படையைக் கொண்டிருந்தனர்.(4)

Thursday, 24 February 2022

புஷ்கரஞ்சென்ற கிருஷ்ணன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 95

(ஸ்ரீகிருஷ்ணஸ்ய புஷ்கரம் ப்ரதி கமநம்)

Krishna goes to Pushkara | Bhavishya-Parva-Chapter-95 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: புஷ்கரைக்குச் சென்ற கிருஷ்ணனும், யாதவர்களும்...


Krishna at pushkara

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "சிநியின் பேரனான சாய்தகி, துவாரகைக்குத் திரும்பி ஹம்சடிம்பகர்களுடனான தன் சந்திப்பைக் கிருஷ்ணனிடம் விரிவாகக் கூறினான்.(1) அதன்பிறகு ஒரு நல்ல காலை வேளையில் கேசிசூதனனும், கதாதாரியும், சக்கரபாணியுமான கேசவன் தன் படைத்தலைவனிடம் பின்வருமாறு ஆணையிட்டான்.(2)

Tuesday, 22 February 2022

சாத்யகியின் எச்சரிக்கை | பவிஷ்ய பர்வம் பகுதி – 94

(ஸாத்யகிப்ரதிப்ரயாணம்)

Satyaki warns | Bhavishya-Parva-Chapter-94 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: ஹம்சனுக்கும் சாத்யகிக்கும் இடையில் நடந்த உரையாடல்; அவர்களை எச்சரித்த சாத்யகி...


Satyaki warns Hamsa and Dimbhaka

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மன்னா, சாத்யகியின் வாக்கியங்களைக் கேட்டுக் கொண்டிருந்த ஹம்சனும், டிம்பகனும் பெருங்கோபத்துடன் அனைத்தையும் எரித்துச் சாம்பலாக்கிவிடுபவர்களைப் போலத் தங்கள் கண்களைத் திக்குகள் அனைத்திலும் துருதுருவென உருட்டினர். சாத்யகியின் எச்சரிக்கையை நினைத்துத் தங்கள் கைகளைப் பிசைந்தவாறே தங்கள் சிற்றரசர்களிடம் பின்வருமாறு பேசினார்:(1,2) {அவர்கள்}, "நந்தனின் மகன் எங்கே? செருக்குடன் வெறி கொண்டிருக்கும் ராமன் {பலராமன்} எங்கே?" என்றனர். ஹம்சனும், டிம்பகனும் இவ்வாறே சாத்யகியின் முன்னிலையில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.(3) 

Monday, 21 February 2022

சாத்யகியின் சீற்றம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 93

(ஸாத்யகிவாக்யம்)

The rage of Satyaki | Bhavishya-Parva-Chapter-93 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: கிருஷ்ணனுடனான தன் சந்திப்பை விவரித்துக் கூரிய ஜனார்த்தனன்; வெகுண்டெழுந்த ஹம்சன்; சாத்யகியின் மறுமொழி...


Krishna speaking to yadavas

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஹம்சன் பேசியதைக் கேட்டதும், நாராயணனின் அவதாரமான கிருஷ்ணனைப் புகழ்வதில் எப்போதும் ஆவலுடைய தர்மாத்மாவான ஜனார்த்தனன் புன்னகைத்தவாறே பின்வருமாறு மறுமொழி கூறினான்:(1)

ஹம்சமொழி | பவிஷ்ய பர்வம் பகுதி – 92

(ஹம்ஸவாக்யம்)

The words of Hamsa | Bhavishya-Parva-Chapter-92 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: சால்வ நகரில் உள்ள ஹம்சடிம்பகரின் சபைக்கு சாத்யகியுடன் திரும்பிச் சென்ற ஜனார்த்தனன்...


Krishna and Satyaki

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அந்த விப்ரனிடம் {ஜனார்த்தனனிடம்} பேசிய பிறகு கிருஷ்ணன் சாத்யகியிடம், "சைநேயா {சிநியின் பேரனே}, இந்த விப்ரருடன் சென்று நான் இப்போது சொன்னவற்றை ஹம்சடிம்பகர்கள் என்ற சகோதரர்கள் இருவரிடமும் மீண்டும் சொல்வாயாக.(1) நாம் போர்க்களத்தில் சந்திக்கும் வகையில் நான் சொன்ன செய்தியை மாற்றமில்லாமல் அவர்களிடம் மீண்டும் சொல்வாயாக. அவர்கள் எதை எதிர்க்கிறார்கள் என்று விளக்கிப் போதுமான எச்சரிக்கையையுயம் அவர்களுக்குக் கொடுப்பாயாக.(2) சாத்யகி, யதுவின் வழித்தோன்றல்களில் முதன்மையானவனே, வில்லை எடுத்துக் கொள்வாயாக, உடும்புத் தோலுறைகளைச் சூடிக் கொள்வாயாக. துணைவரெவரும் இல்லாமல் ஒரேயொரு குதிரையை மட்டும் எடுத்துச் செல்வாயாக" என்றான் {கிருஷ்ணன்}.(3)

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்