Showing posts with label ஜராசந்தன். Show all posts
Showing posts with label ஜராசந்தன். Show all posts

Monday, 14 February 2022

துர்வாச வாக்கியம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 86

(ஸ்ரீக்ருஷ்ணம் ப்ரதி துர்வாஸஸோ வாக்யம்)

Durvasa's speech | Bhavishya-Parva-Chapter-86 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: சாத்யகி முதலிய நண்பர்களுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்த கிருஷ்ணனிடம் பேசிய துர்வாசர்...


Krishna playing ball game with friends

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மன்னா, சர்வேஸ்வரனும், விஷ்ணுவும், தாமரை இதழ் கண்களும், கருநிற மேனியும், சுருண்ட கருமுடியும் கொண்டவனும், பீதாம்பரதாரியும், ஆறு செல்வங்கள் நிறைந்தவனும், அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனும்,{1} கீர்த்திமானும், ஸ்ரீ பதியும் {லட்சுமி தேவியின் கணவனும்}, நீக்கமற நிறைந்த சாஸ்வத தேவனும், சகல மங்கலங்களும் உடையவனுமான கிருஷ்ணன்,{2} கிரீடத்தால் சிரத்தை அலங்கரித்துக் கொண்டும், கதாயுதம் தரித்துக் கொண்டும் சாத்யகியுடனும், பல இளவரசர்களுடனும் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.(1-3) யதுவின் வழித்தோன்றலான அன்புக்குரிய கிருஷ்ணன், சுதர்மமெனும் சபா மண்டபத்தினுள் யுயுதானனுடன் {சாத்யகியுடன்} பந்து விளையாடிக் கொண்டிருந்தான்.(4)

Monday, 7 February 2022

துர்வாசரின் எச்சரிக்கை | பவிஷ்ய பர்வம் பகுதி – 84

(துர்வாஸஸோ பாஷணம்)

Durvasa warns | Bhavishya-Parva-Chapter-84 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: சந்நியாச தர்மத்தை நிந்தித்த ஹம்சனும், டிம்பகனும்...


Durvasa

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "துர்வாசர், அவ்விரு இளவரசர்களையும் சாம்பலாக்கி விடுபவரைப் போல, நெருப்புக்கு ஒப்பான தமது ஒற்றைக் கண்ணால் கோபத்துடன் அவர்களைப் பார்த்தார்.(1) மன்னா {ஜனமேஜயா}, உண்மையில் அம்முனிவர், கோபவசத்தில் மொத்த உலகத்தையும் சாம்பலாக்கப் போகிறவரைப் போல அவ்விரு இளவரசர்களையும் வெறித்துப் பார்த்தார்.(2) அன்புக்குரிய மன்னா, தமது மற்றொரு கண்ணால் பக்திமானும், நற்பேறு பெற்ற பிராமணனுமான ஜனார்த்தனனை அவர் பார்த்தார்.

Thursday, 10 September 2020

துவாரகை செல்ல முன்மொழிந்த கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 113 – 057

(காலயவநஸ்யாபியோகோ த்வாரவதீப்ரயாணம்)

Krishna's proposal to go to Dwaraka | Vishnu-Parva-Chapter-113-057 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனுடைய விருப்பத்தின் பேரில் மதுரையைவிட்டுக் குசஸ்தலிக்குச் சென்ற யாதவர்கள்...

Yadhavas shifting from Madura to Kusasthali

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஒரு காலத்தில் தாமரைக் கண்ணனான கிருஷ்ணன், யதுக்களின் சபையில் அவர்களிடம் பின்வரும் அறிவார்ந்த சொற்களைச் சொன்னான்.(1) {கிருஷ்ணன்}, "இந்த மதுரா நகரம் யதுக்களின் வசிப்பிடமாகும். நாங்கள் இங்கே பிறந்தோம், விரஜத்தில் {ஆயர்பாடியில்} வளர்க்கப்பட்டோம்.(2) எனினும் நம் அனைவரின் துன்பங்களும் அகன்றன, பகைவரும் வீழ்த்தப்பட்டனர். இப்போது நமக்கு மன்னர்களுடனான பகைமையும், ஜராசந்தனுடன் போரும் தொடங்கியிருக்கின்றன.(3) நம்மிடம் எண்ணற்ற காலாட்படையினர் இருக்கின்றனர், விலங்குகளும் இருக்கின்றன. நம்மிடம் போதுமான அளவு ரத்தினங்களும் இருக்கின்றன, நண்பர்களும் இருக்கின்றனர்.(4) நமது நண்பர்களின் மூலமும், படைவீரர்களின் மூலமும் நாம் செல்வத்தைத் திரட்டியிருந்தாலும், மதுரா நகரம் பகைவர் எளிதில் நுழையும் வண்ணம் மிகச் சிறியதாக இருக்கிறது.(5) அதையுந்தவிர, ஒரு கோடி இளவரசர்களும், காலாட்படையினரும் இங்கே சேர்ந்து வாழ்ந்து வந்தால், அவர்களுக்குள் பிளவு ஏற்படுவதற்குரிய போதுமான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன[1].(6) எனவே, ஓ! முன்னணி யதுக்களே, நாம் வேறெங்காவது சென்று வாழ்வது சிறந்தது என நான் கருதுகிறேன்.(7) யதுக்களின் இந்தக் கூட்டத்தின் முன்பு நமது நன்மைக்காக நான் சொன்னதை நீங்கள் ஒப்புக்கொண்டால் உரிய காலத்தில் அதைச் செயல்படுத்துவேன்" என்றான் {கிருஷ்ணன்}.(8)

Thursday, 3 September 2020

காலயவனனை அழைக்க முன்மொழிந்த ஜராசந்தன் | விஷ்ணு பர்வம் பகுதி – 109 – 053

(காலயவநம் ப்ரதி ஶாலவகமநம்)

Jarasandha's proposal to invite Kalayavana | Vishnu-Parva-Chapter-109-053 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : ஜராசந்தனுடைய அனுமதியின் பேரில் காலயவனனிடம் தூது சென்ற சால்வன்...

shri-krishna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வசுதேவனின் மகன் {கிருஷ்ணன்} புறப்பட்ட பிறகு, ஆபரணங்களால் அங்கங்கள் பளபளத்தவர்களும், தங்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப விரும்பியவர்களுமான மன்னர்கள், இதை (தங்கள் நோக்கத்தை ஜராசந்தனுக்குத்) தெரிவிக்கும் பொருட்டுப் பீஷ்மகனின் சபா மண்டபத்திற்குத் திரும்பிச் சென்றனர்.(1) அப்போது மன்னர்களில் முதன்மையானவனும், அறவிதிகளை நன்கறிந்தவனுமான பீஷ்மகன், சூரியனையும், சந்திரனையும் போன்ற பிரகாசத்துடன் அழகிய இருக்கைகளில் சுகமாக அமர்ந்திருந்த அந்த மன்னர்களிடம்,(2) "ஓ! மன்னர்களே, சுயம்வரத்திற்கு நேர இருக்கும் பேரழிவை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். என் பிழையின் விளைவாக ஏற்பட்ட பலனுக்காக நீங்கள் என்னை மன்னிப்பீராக" என்றான்"[1].(3)

Tuesday, 25 August 2020

மன்னர்களிடம் பேசிய ஜராசந்தன் | விஷ்ணு பர்வம் பகுதி – 105 – 049

(விதர்பஸபாயாம் ஜராஸந்தஸுனீதயோர்பாஷணம்)

Jarasandha's address to the kings | Vishnu-Parva-Chapter-105-049 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணன் வரவைக் குறித்து அரசர்களுக்கு மத்தியில் நடந்த ஆலோசனை; மன்னர்களின் கூட்டத்தில் பேசிய ஜராசந்தனும், சுனீதனும்...

Vishnu and Garuda at Deva's Sacrifice

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "நித்தியனான கிருஷ்ணன், வினதையின் மகனுடன் {கருடனுடன்} அங்கே வந்ததைக் கண்ட முன்னணி மன்னர்கள் பெருஞ்சோகத்தால் பீடிக்கப்பட்டனர்.(1) ஓ! மன்னா, பயங்கர ஆற்றலைக் கொண்டவர்களும், குடிமையியலை {நீதி சாஸ்திரங்களை} நன்கறிந்தவர்களும், ஆலோசனைகளில் திறன்மிக்கவர்களுமான அந்த மன்னர்கள், மன்னன் பீஷ்மகனின் பொன் மாளிகையில் கலந்தாலோசிக்கக் கூடினர். தேவ சபையில் அமர்ந்திருக்கும் தேவர்களைப் போலவே அவர்களும் அங்கே பல்வேறு வண்ண விரிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.(2,3)

Sunday, 16 August 2020

பகைவனைச் சந்தித்த கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 99 – 043

(ஜராஸந்தபராபவம்)

Krishna meets his enemy | Vishnu-Parva-Chapter-99-043 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : தெய்வீக ஆயுத ஞானத்தை மீண்டும் மீண்டும் அடைந்த கிருஷ்ணனும், பலராமனும்; உக்கிரமடைந்த கோமந்த மலை போர் தொடக்கம்; தரதனைக் கொன்ற பலராமன்; ஜராசந்தனை வீழ்த்தியது; தமகோஷன் கிருஷ்ணன் உரையாடல்...

Gomanta mount war

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மலையில் இருந்து இறங்கி வந்த வசுதேவனின் மகன்கள் {பலராமன், கிருஷ்ணன்} இருவரையும் கண்ட மன்னர்களின் படைவீரர்கள் பீதியடைந்தனர், விலங்குகள் கலக்கமடைந்தன.(1) அவர்களின் கரங்களில் ஆயுதங்களேதும் இல்லாவிட்டாலும், கடலைக் கலங்கடிக்கும் மகரங்கள் இரண்டைப் போல அவர்கள் கோபத்தில் அங்கே திரிந்து கொண்டிருந்தனர்.(2) அவ்வாறு அவர்கள் போரிட விரும்பி அங்கே திரிந்து கொண்டிருந்தபோது, ஆயுதங்களைக் கையாள்வது தொடர்பான புராதன நுண்ணறிவு அவர்களுக்குள் எழுந்தது.(3) மதுராவில் நடந்த போரின்போது அவர்கள் ஏற்கனவே அடைந்திருந்த ஆயுதங்கள், கூடியிருந்த மன்னர்களின் கண்களுக்கு முன்பாகவே தழலென எரிந்து கொண்டு வானில் இருந்து இறங்கின. பேருடல் படைத்தவையும், மனிதர்களின் தசைகளை உண்ணும் விருப்பத்துடன் கூடியவையும், அந்த இரு யாதவர்களால் அடையப்பட்டவையுமான அந்த ஆயுதங்கள் தாகம் நிறைந்தவையாக வானில் இருந்து பாய்ந்து வந்தன. அவை தெய்வீக மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும், காந்தியால் பத்து திக்கிற்கும் ஒளியூட்டிக் கொண்டும், வானுலாவிகளை {பறவைகளை} அச்சுறுத்திக் கொண்டும் இருந்தன. அரச இறைச்சியை உண்ணும் நோக்கில் இரை தேடும் விலங்குகளும் பின்தொடர்ந்து வந்தன.(4-8)

Thursday, 13 August 2020

மன்னர்களுக்கு ஜராசந்தனின் ஆணை | விஷ்ணு பர்வம் பகுதி – 98 – 042

(கோமந்ததாஹம்)

Jarasandha's instructions to the kings | Vishnu-Parva-Chapter-98-042 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கோமந்த மலை போர் தொடக்கம்; ஜராசந்தன் ஆணை; தமகோஷன் விவேகம்; மலைக்குத் தீ வைத்த ஜராசந்தன் படை...

Mountain siege

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பெரும்பிரகாசம் கொண்டவனும், பலம்நிறைந்தவனும், நோன்புகளை நோற்பவனும், மன்னர்களின் தலைவனுமான ஜராசந்தன், கடல் போல அசையும் நால் வகைப் படைகள் சூழ அங்கே வந்து சேர்ந்தான். எங்கும் தடையின்றிச் செல்லக்கூடிய திறன்மிக்கப் போர்வீரர்களால் பயிற்றுவிக்கப்பட்ட, உற்சாகமிக்கக் குதிரைகளால் இழுக்கப்படுபவையும், போருக்குப் பயன்படுத்தக்கூடியவையுமான தேர்களும், மணிகளால் அலங்கரிக்கப்பட்டவையும், போரில் செருக்கு மிக்கப் போர்வீரர்களுக்கான பொன் அம்பாரிகளைச் சுமக்கக் கூடியவையும், மேகங்களைப் போன்றவையுமான யானைகளும், நுண்ணறிவுமிக்கச் சாரதிகளால் செலுத்தப்படுபவையும், காற்றைப் போன்ற வேகம் கொண்டவையும், குதித்து ஓடுபவையுமான குதிரைகளும், வாள்கள், குத்துவாள்கள், தோல் கவசங்கள் ஆகியவற்றுடன் கூடியவர்களும், வானம் வரையிலான உயரத்திற்குக் குதிக்கக்கூடியவர்களுமான எண்ணற்ற வீரர்களைக் கொண்ட காலாட்படையும் அவனிடம் இருந்தன. மன்னர்களின் கூட்டம் அவனைப் {ஜராசந்தனைப்} பின்தொடர்ந்து வந்தது.(1-6) அந்தச் சிறந்த மலையின் குகைகள் அனைத்திலும், திக்குகள் அனைத்திலும், மேக முழக்கங்களுக்கு ஒப்பான தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியும், மதங்கொண்ட யானைகளின் பிளிறலும், குதிரைகளின் கனைப்பொலியும், காலாட்படையினரின் சிங்க முழக்கங்களும் எதிரொலித்துக் கொண்டிருந்தபோது பேரரசன் ஜராசந்தனின் படையானது கடல் போலத் தெரிந்தது.(7,8) உள்ளங்கைகளையும், தோள்களையும் தட்டிக் கொண்டு இருந்த மகிழ்ச்சிமிக்கப் போர்வீரர்களுடன் கூடிய அந்த மன்னர்களின் படைகள், மேகங்களின் படையைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தன.(9) காற்றின் வேகம் கொண்ட பலவண்ணத் தேர்களையும், மேகங்களுக்கு ஒப்பான யானைகளையும், வெண்மேகங்களுக்கு ஒப்பான குதிரைகளையும், நன்கு உடுத்தியிருந்த காலாட்படை வீரர்களையும் கொண்ட அந்தப் படையானது, மழைக்கால முடிவில் கடலை முத்தமிடும் மேகங்களைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(10-11)

Saturday, 25 July 2020

பலராம ஜராசந்தப் போர் | விஷ்ணு பர்வம் பகுதி – 92 – 036

(ஜராஸந்தபயானம்)

The Battle Between Krishna and Jarasandha | Vishnu-Parva-Chapter-92-036 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் :  மதுரா நகர் முற்றுகை; அதைத் தொடர்ந்த போர்; ஜராசந்தனுக்கும் பலராமனுக்கும் இடையில் நடந்த போர்; தோற்றுத் திரும்பிய ஜராசந்தன்...

Fight between Jarasandha and Balarama

[1] மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்த அத்தியாயத்தின் தலைப்பு "கிருஷ்ணனுக்கும் ஜராசந்தனுக்கும் இடையிலான போர்" என்று இருந்தாலும், இந்த அத்தியாயத்தில் பலராமனுக்கும், ஜராசந்தனுக்கும் இடையில் நடந்த போர் விளக்கப்படுவதால் தலைப்பு மாற்றப்பட்டிருக்கிறது. மேலும் மன்மதநாததத்தரின் பதிப்பில் 90ம் அத்தியாயத்திற்குப் பிறகு, 92ம் அத்தியாயமே வருகிறது. இடையில் எந்தச் செய்தியும் விடுபடவில்லை. இதில் அச்சுப்பிழை ஏற்பட்டிருக்க வேண்டும். எனினும் அடுத்தடுத்து 93, 94 என்று அத்தியாய வரிசை தொடர்வதால் அந்தப் பிழையுடனேயே இங்கும் அத்தியாய எண் கொடுக்கப்படுகிறது. இந்த எண்களைத் தொடர்ந்து வரும் விஷ்ணு பர்வத்தின் அத்தியாய எண் முறையான வரிசையின்படியே 36 என்று கொடுக்கப்படுகிறது.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "விருஷ்ணிகளுக்கும், படைத்தலைவர்களுக்கும், மகதத் தலைவனைப் {ஜராசந்தனைப்} பின்பற்றும் மன்னர்களுக்கு இடையில் பெரும்போர் நடந்தது.(1) ஓ பரதனின் வழித்தோன்றல்களில் முதன்மையானவனே {ஜனமேஜயனே}, வாசுதேவன் ருக்மியுடனும், ஆஹுகன் பீஷ்மகனுடனும், வசுதேவன் கிராதனுடனும், பப்ரு கைசிகனுடனும்,(2) சேதியின் மன்னன் {சிசுபாலனின் தந்தை தமகோஷன்} கவனுடனும் {கதனுடனும்}, சம்பு {சங்கு} தந்தவக்ரனுடனும் போரிட்டனர். இவ்வாறே மகத மன்னனுடைய படைவீர்களுக்கும், பெருஞ்சக்திவாய்ந்த அரசுகளுக்கும் எதிராக விருஷ்ணிகளின் படையைச் சார்ந்த அந்தப் பெரும் வீரர்களும், படை வீரர்களும் இருபத்தேழு நாட்கள் போரிட்டனர்.(3,4) யானைகளைச் செலுத்தியவர்கள் {எதிர் தரப்பில்} அவ்வாறே வருகிறவருடனும், குதிரைப்படை {பகைவரின்} குதிரைப்படையுடனும், காலாட் படை காலாட்படையுடனும், தேர் வீரர்கள் தேர்வீரர்களுடனும் போரிட்டனர்.(5)

Friday, 24 July 2020

ஜராசந்தனின் படை | விஷ்ணு பர்வம் பகுதி – 90 – 035

(யாதவமாகதயுத்தம்)

Jarasandha's army| Vishnu-Parva-Chapter-90-035 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் :  ஜராசந்தனின் படை அணிவகுப்பும்; அதைத் தொடர்ந்த போரும்...

The siege of Mathura by Jarasandha

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஜனார்த்தனன் தலைமையிலான யாதவர்கள் அனைவரும் தங்களுக்குள் ஆலோசித்து, மதுராவின் தோட்டங்களில் {காடுகளில்} அமைந்து வரும் மன்னர்களின் முகாம்களை ஆய்வு செய்தனர்.(1) அதன் பிறகு, கிருஷ்ணன் மகிழ்ச்சிமிக்க இதயத்துடன் ராமனிடம் {பலராமனிடம்}, "மன்னன் ஜராசந்தன் நம்மை நெருங்கிவிட்டதால் உண்மையில் தேவர்களின் நோக்கம் விரைவில் நிறைவேறப் போகிறது. காற்றைப் போல வீசிக் கொண்டிருக்கும் தேர்க்கொடிகள் காணப்படுகின்றன.(2,3) ஓ! ஐயா, அதோ வெற்றியை விரும்பும் மன்னர்களின் குடைகள் சந்திரனைப் போல வெண்மையாக ஒளிர்வதைப் பாரும்.(4) ஓ! ஐயா, மன்னர்களின் தேர்களில் அமைந்திருக்கும் வெண்குடைகளின் வரிசைகள் வானில் உலாவும் அன்னப்பறவைகளைப் போல நம்மை நோக்கி நகர்கின்றன.(5) மன்னன் ஜராசந்தன் உரிய நேரத்தில் இங்கே வந்திருக்கிறான். இவனே போரில் நமது முதல் விருந்தினனும், நம் பலத்தையும், பலவீனத்தையும் சோதிக்கும் உரைகல்லும் ஆவான்.(6) ஓ! ஐயா, பேரரசன் இங்கே வந்திருக்கையில் {ஒற்றுமையுடன்} போரை நாம் தொடங்குவோம். பகைவனுடைய படையின் பலத்தை இப்போது மதிப்பிடுவீராக" என்றான் {கிருஷ்ணன்}.(7) எவ்விதக் கவலையுமின்றி இந்தச் சொற்களைச் சொன்ன கிருஷ்ணன், ஜராசந்தனைக் கொல்லவும், அவனோடு போரிடவும் விரும்பியவனாக அவனது படையை ஆய்வு செய்யத் தொடங்கினான்.(8)

Wednesday, 22 July 2020

மதுராவைத் தாக்க ஆயத்தமான ஜராசந்தன் | விஷ்ணு பர்வம் பகுதி – 89 – 034

(ஜராஸந்தேன மதுரோபரோதம்)

Jarasandha prepares to attack Madhura | Vishnu-Parva-Chapter-89-034 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் :  கம்ஸனின் மாமனாரான ஜராசந்தன் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து மதுராவை முற்றுகையிட்டது...

Jarasandha and his daughters Asti and prapti

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "கிருஷ்ணன், ரோஹிணியின் மகனுடன் {பலராமனுடன்} சேர்ந்து யாதவர்களால் நிறைந்திருக்கும் மதுரா நகரில் சில நாட்களை மகிழ்ச்சியாகக் கழித்தான்.(1) இளமை அழகுடனும், அரச செழிப்புடனும் அவனது மேனி படிப்படியாக மிளிர்ந்தது, காடுகளால் அலங்கரிக்கப்பட்ட மதுரா எங்கும் அவன் திரியத் தொடங்கினான்.(2) இவ்வகையில் சில நாட்கள் கடந்ததும், ராஜகிருஹத்தின் மன்னனான ஜராசந்தன், தன் மகள்கள் இருவரின் மூலம் கம்ஸனின் மரணத்தைக் கேள்விப்பட்டான்.(3) பலம்வாய்ந்த ஜராசந்தன் இதைக் கேட்டதும் பெரும் கோபமடைந்தான். பலம்வாய்ந்தவனான ஜராசந்தன், கம்ஸனுக்குத் தான் பட்ட கடனை அடைக்கும் வகையிலும், யதுக்கள் அனைவரையும் கொல்லும் வகையிலும், ஆறு பிரிவுகளுடன்[1] கூடிய தன் படையுடன் உடனே புறப்பட்டான்.(4,5)

Monday, 20 April 2020

மன்னன் யயாதி | ஹரிவம்ச பர்வம் பகுதி – 30

(யயாதி சரித்ர கதனம்)

Account of the king Yayati | Harivamsa-Parva-Chapter-30 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : நஹுஷனின் மகன்கள்; யயாதி அடைந்த தெய்வீகத் தேர்; ஜராஸந்தனிடம் இருந்த அந்தத் தேரை பீமன் கிருஷ்ணனுக்கு அளித்தது; யயாதியின் மகன்கள்; யயாதியின் முதுமையை ஏற்றுக் கொண்ட பூரு; யயாதி சொன்ன அனுபவ மொழி; சொர்க்கத்தை அடைந்த யயாதி...

Golden Chariot of Indra
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பெருஞ்சக்திமிக்க நஹுஷன், தன் தந்தையின் மகளான {பித்ரு கன்னிகையான} விரஜையிடம் {ஸுஸ்வதையிடம்}[1], இந்திரனின் பிரகாசத்தைக் கொடையாகக் கொண்ட ஆறு மகன்களைப் பெற்றான்.(1) அவர்கள் யதி, யயாதி, ஸங்யாதி {ஸம்யாதி}, ஆயாதி {ஆயதி}, யாதி {பவன்} மற்றும் ஆறாவதாக ஸுயாதி ஆகியோராவர்; அவர்களில் யயாதி மன்னனான்.(2) யதி, அவர்கள் யாவரிலும் மூத்தவனாக இருந்தான். அவனுக்கு அடுத்தவனே யயாதி ஆவான். அறவோர் முதன்மையானவனாக இருந்ததால் அவன் கௌ என்ற பெயர் கொண்டவளான ககுஸ்தனின் மகளை அடைந்தான். யதி ஒரு முனிவனாக இருந்தான். இறுதி விடுதலையை {முக்தியை} அடைந்த அவன் பிரம்மத்தில் ஒன்று கலந்தான்.(3) மற்ற ஐவரில் யயாதி இவ்வுலகை வென்றான். அவன் சுக்ராச்சாரியரின் {உசானஸின்} மகளான தேவயானியையும், விருஷபர்வன் என்ற பெயரைக் கொண்ட ஓரசுரனின் மகளான சர்மிஷ்டையையும் மணந்து கொண்டான்.(4) தேவயானி, யது மற்றும் துர்வஸுவையும், சர்மிஷ்டை, திருஹ்யு, அனு மற்றும் பூருவையும் பெற்றனர்.(5)



[1] மன்மதநாததத்தரின் பதிப்பில் "தந்தையின் மகள்" என்றே இருக்கிறது. அவ்வாறெனில்தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் "பித்ருக்களின் மகள்", அதாவது "பித்ரு கன்னிகை" என்றிருக்கிறது. ஹரிவம்ச பர்வம் 18:64-67ல் "கர்தம பிரஜாபதியின் மூதாதையர்கள், பிரஜாபதியான புலஹரின் வழித்தோன்றல்களாவர். இந்தப் பித்ருக்கள் திரளாக ஸுஸ்வதர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். அவர்களின் மனத்தில் பிறந்த மகள் விரஜை என்ற பெயரில் கொண்டாடப்படுகிறாள். இவளே நஹுஷனின் மனைவியும், யயாதியின் தாயுமாவாள்" எனத் தெளிவாகக்  குறிப்பிடப்பட்டுள்ளது.

அவனிடம் {யயாதியிடம்} நிறைவடைந்த சக்ரன் {இந்திரன்}, பிரகாசமானதும், தெய்வீகமானதும், தடையில்லாமல் எங்கும் செல்லவல்லதுமான ஒரு பொற்தேரைக் கொடுத்தான். மனோ வேகம் கொண்டவையும், தெய்வீகமானவையுமான சிறந்த குதிரைகள் அதில் பூட்டப்பட்டிருந்தன. அந்தத் தேரைக் கொண்டே அவன் அனைத்துப் பணிகளையும் நிறைவடைய் செய்தான். அந்தத் தேரில் ஏறிய யயாதி, போரில் தடுக்கப்பட முடியாதவனாக ஆறே இரவுகளுக்குள் மொத்த உலகத்தையும், வாசவனுடன் கூடிய தேவர்களையும் வென்றான்.(6,7) ஓ !ஜனமேஜயா, அந்தத் தேரானது ஸுநாமன் {ஜனமேஜயன்} பிறக்கும் வரை பௌரவர்களின் உடைமையாக இருந்தது.(8) குருவின் மகனான மன்னன் பரீக்ஷித், நுண்ணறிவுமிக்கக் கார்க்கியருடைய {கர்க்கருடைய} சாபத்தின் மூலம் அந்தத் தேரைத் தொலைத்தான்[2].(9)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "அந்தத் தேரானது கௌரவ அரசவம்சத்தைச் சேர்ந்த மன்னன் வசுவின் காலம் வரை பௌரவக் குலத்தின் மதிப்புமிக்க உடைமையாக இருந்தது. கௌரவக் குலத்தைச் சேர்ந்தவனும், பரீக்ஷித்தின் மகனுமான ஜனமேஜயன் காலம் வரை அஃது இவ்வுலகில் இருந்தது ஆனால் கர்க்க முனிவரின் சாபத்தினால் அது மறைந்து போனது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், உன் காலம் வரை அனைத்துப் பௌரவர்களும் அந்தத் தேரை அனுபவித்தனர். பரீக்ஷித்தின் மகனுடைய காலம் வரை அது குருவின் வழித்தோன்றல்களுடைய நாட்டில் இருந்தது. அதன் பிறகு நுண்ணறிவுமிக்கக் கர்க்கரால் அந்தத் தேர் மறைந்து போனது" என்றிருக்கிறது. மேலும் இந்தத் தேரை சுக்ரன் யயாதிக்குக் கொடுத்ததாகவும் இருக்கிறது. இங்கே மூன்று பதிப்புகள் சொல்வதும் பிழையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இங்கே சொல்லப்படுபவன் அர்ஜுனனின் பேரனான பரிக்ஷித்தோ, கொள்ளுப்பேரனான ஜனமேஜயனாகவோ இருக்க முடியாது. மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தின் 150ம் பகுதியில் பீஷ்மர் பழங்காலத்து மன்னர்களான பரீக்ஷித் மற்றும் ஜனமேஜயன் குறித்து யுதிஷ்டிரனிடம் சொல்கிறார். அப்போது அர்ஜுனனின் பேரனான பரீக்ஷித் இல்லை. இங்கே சுட்டப்படுவது அந்தப் பழங்காலத்து பரீக்ஷித்தும் ஜனமேஜயனுமாக இருக்க வேண்டும். மேலும் அர்ஜுனனின் கொள்ளுப்பேரனான ஜனமேஜயனிடம் தான் வைசம்பாயனரால் இந்தக் கதை சொல்லப்படுகிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஓ! ஜனமேஜயா, அந்த மன்னன் {ஜனமேஜயன்} கடுமொழி பேசிய கார்க்கியரின் {கர்க்கரின்} மகனைக் கொன்றதால் பிராமணக்கொலை செய்த குற்றவுணர்வுடன் இருந்தான்.(10) அந்த அரசமுனி {ஜனமேஜயன்}, தன் மேனிமுழுவதும் கூடிய கடும் நாற்றத்துடன் {லோஹகந்தமெனும் இரும்பின் நாற்றத்துடன்} அங்கேயும், இங்கேயும் திரிந்து கொண்டிருந்தான். பிறகு, குடுமக்களாலும், கிராமவாசிகளாலும் கைவிடப்பட்டவனான அவனால் எங்கும் இன்பத்தை அனுபவிக்க முடியவில்லை.(11) இவ்வாறு துயரில் பீடிக்கப்பட்ட அவனால் எங்கும் உய்வை {நிவாரணத்தைப்} பெற முடியவில்லை. அப்போது அவன், சௌனக குலத்தில் பிறந்த தவசியான இந்தோரதரின் புகலிடத்தை நாடினான்[3].(12) இந்திரோதர், அந்த மன்னனைத் தூய்மையடையச் செய்வதற்காக ஒரு குதிரை வேள்வியைச் செய்வதில் ஈடுபட்டார்.(13) யாகம் முடிந்து அவன் நீராடியபோது, அவனுடைய உடலில் இருந்த அந்தக் கடும் நாற்றம் மறைந்து போனது. பிறகு, ஓ! மன்னா, தேவர்களின் தலைவன் {இந்திரன்} அந்தத் தெய்வீகத் தேரைச் சேதிகளின் மன்னனான வஸுவுக்கு {உபரிசர வஸுவுக்குக்} கொடுத்தான்; அவனிடம் இருந்து பிருஹத்ரதன் அதையடைந்தான்[4].(14) அந்தத் தேர் அவனிடம் இருந்து படிப்படியாக ஜராசந்தனின் கைகளுக்குச் சென்றது. குருவின் வழித்தோன்றலான பீமன் ஜராசந்தனைக் கொன்ற போது, அந்தத் தேரைப் பெரும் மகிழ்ச்சியுடன் வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்குக்} கொடுத்தான்.

[3] ஜனமேஜயன் இந்திரோதரின் புகலிடத்தை நாடிச் செல்லும் இந்தப் பகுதி மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தின் 150ம் பகுதியில் இன்னும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

[4] பிபேக்திப்ராயின் பதிப்பில், "பிருஹத்ரதன் {உபரிசர வசு என்றும் அழைக்கப்படும்} வசுவின் மகனாவான். ஜராசந்தன் இந்தப் பிருஹத்ரதனின் மகனாவான்" என்றிருக்கிறது.

யயாதி, பெருங்கடல்களுடனும், ஏழு தீவுகளான கண்டங்களுடனும் கூடிய பூமியை வென்று அதை (தன் மகன்களுக்கு மத்தியில்) பிரித்துக் கொடுத்தான். அந்த நஹுஷன் மகன் {யயாதி}, துர்வஸுவை தென்கிழக்குப் பகுதியின் மன்னனாகவும், அனு மற்றும் திருஹ்யுவை, முறையாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் மன்னர்களாகவும், மூத்தவனான யதுவை வட கிழக்கின் மன்னனாகவும், பூருவை நடுப்பகுதியின் {மத்திய பகுதியின்} மன்னனாகவும் நிறுவினான். இப்போதும் அவர்கள் {அவர்களின் சந்ததியினர்}, அவரவருக்குரிய மாகாணங்களில் உள்ள பல்வேறு நகரங்களையும், ஏழு தீவுகளான கண்டங்களுடன் கூடிய பூமியையும் நீதியுடன் ஆண்டு வருகின்றனர். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, அவர்களுடைய சந்ததியை நான் பின்னர்ச் சொல்கிறேன்.(15-20)

இவ்வாறு ஐந்து மகன்களால் அருளப்பட்டவனும், தன்னுடைய விற்கள், கணைகள் மற்றும் அரசின் பொறுப்பு ஆகியவற்றை அவர்களுக்கு {தன் மகன்களுக்குக்} கொடுத்தவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அந்த யயாதி மன்னனை முதுமை பீடித்தது. எப்போதும் வெற்றியாளனாக இருந்த அந்த மன்னன், ஆயுதங்களை இழந்தவனாகப் பூமியின் மீது தன் கண்களைச் செலுத்திய போது, மகிழ்ச்சியை உணர்ந்தான். இவ்வாறு அவன் பூமியைப் பிரித்துக் கொடுத்தபிறகு, யதுவிடம்,(21,22) "ஓ! மகனே, உன் அலுவலில் இருந்து ஓய்வு பெற்று என்னுடைய இந்த முதுமையை உன்னில் நீ ஏற்றுக் கொள்வாயாக. என் முதுமையை உனக்குக் கொடுத்துவிட்டு, உன் இளமை மற்றும் அழகு என்ற கொடையைப் பெற்றுக் கொண்டு நான் பூமியில் திரிந்து வருவேன்" என்றான்.

அதற்கு யது,(23) "நான் ஒரு பிராமணருக்குப் பிச்சை அளிப்பதாக உறுதியளித்திருக்கிறேன். இஃது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இதை உறுதி செய்யாமல் என்னால் உமது முதுமை ஏற்றுக் கொள்ள முடியாது. உணவு மற்றும் பானம் தொடர்பான பல தொல்லைகள் முதுமையில் உண்டு. எனவே, ஓ! மன்னா, உமது முதுமை ஏற்க நான் விரும்பவில்லை.(25) ஓ! மன்னா, என்னைவிட உமது அன்புக்குரிய மற்ற மகன்களை நீர் கொண்டிருக்கிறீர். எனவே, ஓ! பக்திமிக்க மன்னா, உமது மற்ற மகன்களிடம் உமது முதுமையை ஏற்றுக் கொள்ள ஆணையிடுவீராக" என்று மறுமொழி கூறினான்.(26)

யதுவால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட மன்னன் கோபத்தில் நிறைந்தான். பேசுபவர்களில் முதன்மையானவனான யயாதி, தன் மகன் மீது குற்றஞ்சாட்டும் வகையில்,(27) "ஓ! தீய புத்தி கொண்டவனே, உன் ஆசானும், உனக்கான கல்வியைக் கொடுத்தவனுமான என்னை அலட்சியம் செய்துவிட்டு, வேறு யாரை நாடி எந்த அறத்தை உன்னால் பின்பற்ற முடியும்?" என்றான்.(28) யதுவிடம் இவ்வாறு கோபத்தில் பேசி அவன், அவனைச் சபிக்கும் வகையில், "ஓ! அற்ப மூடா, உன் மகன்கள் தங்கள் அரசை இழப்பார்கள்" என்றான்.(29)

ஓ! பாரதர்களில் முதன்மையானவனே[5], இதே போலவே துர்வஸு, திருஹ்யு, அனு ஆகியோரையும் அந்த மன்னன் வேண்டினான். அவர்கள் அனைவராலும் ஒரே மாதிரியாகவே அவமதிக்கவும் பட்டான்.(30) ஓ! அரச முனிகளில் முதன்மையானவனே, எப்போதும் வெற்றியாளனாக இருந்த யயாதி, நான் உனக்கு முன்பு {மஹாபாரதம் சொல்லிக் கொண்டிருந்தபோது} விளக்கிச் சொன்னதைப் போலவே அவர்கள் அனைவரையும் சபித்தான்.(31) ஓ! பரதனின் வழித்தோன்றலே, பூருவுக்கு முன் பிறந்த தன்னுடைய நான்கு மகன்களையும் இவ்வாறு சபித்த அந்த மன்னன், அவனிடம் {பூருவிடம்},(32) "ஓ! பூரு, நீ ஏற்றுக்கொண்டால், நான் என் முதுமையை உனக்கு மாற்றி, உன் அழகையும், இளமையையும் பெற்றுக் கொண்டு இந்த உலகத்தில் திரிவேன்" என்றான்.(33)

[5] இங்கே மன்மதநாததத்தரின் பதிப்பில் பாரதர்களில் முதன்மையான மன்னன் என்று யயாதி குறிப்பிடப்படுகிறான். பரதனோ யயாதிக்கு மிகப் பிந்தையவன். மற்ற பதிப்புகளைக் கண்டதில் இது ஜனமேஜயனைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிந்தது. எனவே இங்கே நாமும் வைசம்பாயனர் ஜனமேஜயனை இவ்வாறு அழைப்பதாகக் கொண்டிருக்கிறோம்.

பலமிக்கவனும் அவனுடைய மகனுமான பூரு அவனுடைய முதுமையை ஏற்றுக் கொண்டான். யயாதியும், பூருவின் அழகுடன் கூடியவனாக உலகில் திரிந்து வந்தான்.(34) ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, அந்தத் தலைவன் {யயாதி} இன்பங்களின் எல்லையைக் கண்டபடியே சைத்ரரதக் காட்டில் விஷ்ராவ்யையுடன் {அப்சரஸான விஷ்வாசியுடன்} வாழ்ந்து வந்தான்.(35) அந்த மன்னன் இன்பங்களில் தணிவடைந்தவனாகப் பூருவிடம் வந்து தன் முதுமையைத் திரும்பப் பெற்றுக் கொண்டான்.(36) ஓ! பெரும் மன்னா, அங்கே யயாதியால் பாடப்பட்ட பாடல்களைக் கேட்பாயாக. அவற்றைக் கேட்பதன் மூலம் ஓர் ஆமை தன் அங்கங்களை இழுத்துக் கொள்வதைப் போல ஒரு மனிதன் இன்பங்களில் இருந்து தன்னை இழுத்துக் கொள்வான்.(37)

{யயாதி}, "ஆசையானது அதற்குரிய பொருளை அனுபவிப்பதனால் ஒருபோதும் தணிவதில்லை. அதற்குப் பதிலாகத் தெளிந்த நெய்யூட்டப்படும் நெருப்பைப் போன்ற விகிதத்தையே அஃது அடைகிறது.(38) பூமியிலுள்ள அரிசி, வாற்கோதுமை, பொன், விலங்குகள், பெண்கள் ஆகியன ஒரு மனிதனுக்கு நிறைவளிக்கப் போதுமானவையல்ல. இதைக் கண்டும் மனிதர்கள் தங்கள் புலன்களில் நிறைவடைவதில்லை.(39) ஒரு மனிதன், தன் செயல், எண்ணம் மற்றும் சொற்களாலும் எவ்வுயிரினத்திற்கும் தீங்கிழையாமல் இருக்கும்போது அவன் பிரம்மத்துடன் ஒன்றுகலக்கிறான்.(40) ஒரு மனிதன் எவரிடமும் அச்சங்கொள்ளவில்லை எனும்போது, எவரும் அவனிடம் அச்சங்கொள்ளவில்லை எனும்போது, அவன் எந்த ஆசையையும் {விருப்பையும்}, வன்மத்தையும் {வெறுப்பையும்} வளர்க்கவில்லை எனும்போது, அவன் பிரம்மத்துடன் ஒன்றுகலக்கிறான்.(41) உண்மையில், தீயோரால் ஒருபோதும் கைவிட முடியாததும், முதுமையை அடைந்தாலும் சிதையாததும், மரணத்தைத் தரும் நோயைப் போன்றதுமான தாகத்தை {ஆசையைத்} தணித்துக் கொள்ளும்போது அவன் மகிழ்ச்சியை அடைகிறான்(42) ஒரு மனிதன் வயதால் சிதைவடையும்போது, அவனது மயிரும், பற்களும் விழுமென்றாலும், வாழ்வு மற்றும் செல்வத்தின் மீதுள்ள ஆசை மட்டும் ஒருபோதும் {அவனிடம்} மறைவதில்லை.(43) உணர்வுப் பசிகளை நிறைவேற்றிக் கொள்வதால் இவ்வுலகில் அடையப்படும் எந்த இன்பமும், இங்கேயுள்ள எந்தத் தெய்வீக இன்பமும் என இவற்றில் யாவும், ஆசையற்றுப் போவதனால் கிட்டும் இன்பத்தின் பதினாறில் ஒரு பங்குக்கு ஈடாகாது" என்றான்.(44)

அரசமுனியான யயாதி இதைச் சொல்லிவிட்டு, தன் மனைவியுடன்[6] காட்டுக்குள் ஓய்ந்து சென்று, பல ஆண்டுகள் கடுந்தவம் செய்தான்.(45) அந்தப் பெருந்தவசி, பிருகு மலையில் தவம் செய்து, தன் உடலைக் கைவிட்டு, தன் மனைவியுடன் சொர்க்கத்தை அடைந்தான்.(45)

[6] யயாதிக்கு தேவயானி, சர்மிஷ்டை என்று இரு மனைவிகள். இங்கே மனைவி என்று ஒருமையில் சொல்லப்பட்டுள்ளது. தேவயானி, யயாதி சபிக்கப்படக் காரணமாக இருந்தவள். மேலும் அவளுடைய மகன்கள் இருவரில் ஒருவரும் யயாதியின் முதுமையே ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. சர்மிஷ்டையின் இளைய மகன் பூருவே அரியணை ஏற்கிறான். எனவே, இங்கே சுட்டப்படுபவள் சர்மிஷ்டையாகவே இருக்க வேண்டும்.

ஓ! பெரும் மன்னா, அவனுடைய குடும்பத்தில் ஐந்து அரசமுனிகள் பிறந்தனர். சூரியக் கதிர்களால் கைப்பற்றப்படுவதைப் போல அவர்களால் மொத்த பூமியும் கைப்பற்றப்பட்டது.(47) இனி, அரச முனிகள் அனைவராலும் மதிக்கப்படும் யதுவின் குடும்பத்தை {குலத்தைக்} குறித்துக் கேட்பாயாக. விருஷ்ணி குலத்தைத் தழைக்கச் செய்பவயும் நாராயணனான ஹரி இவனது {யதுவின்} குடும்பத்திலேயே தன் பிறப்பை அடைந்தான்.(48) ஓ! மன்னா, மன்னன் யயாதியின் புனித வாழ்க்கை வரலாற்றைக் கேட்பவன் எவனோ, அதைப் படிப்பவன் எவனோ, அவன் உடல்நலம், மக்கள்பேறு, நீண்ட வாழ்நாள் மற்றும் புகழ் ஆகியவற்றை அடைவான்" என்றார் {வைசம்பாயனர்}.(49)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 30ல் உள்ள சுலோகங்கள் : 49
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்