Showing posts with label தமகோஷன். Show all posts
Showing posts with label தமகோஷன். Show all posts

Tuesday, 18 August 2020

மதுரா வந்த கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 101 – 045

(ராமக்ருஷ்ணயோர்மதுராகமனம்)

Krishna's arrival at Mathura | Vishnu-Parva-Chapter-101-045 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கரவீரபுரத்திலிருந்து மதுரா திரும்பிய ராமனும், கிருஷ்ணனும்; அவர்களுக்குக் கிடைத்த அமோக வரவேற்பு...

Krishna and Balarama

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வசுதேவனின் வீர மகன்கள் {பலராமன், கிருஷ்ணன்} இருவரும் தமகோஷனுடன் சேர்ந்து வழியில் பயணிகளின் விதிகளுக்கு இணங்க ஐந்து இரவுகளை ஓரிரவைப் போலக் கழித்தனர். மதுரா நகரை அவர்கள் அடைந்த போது, உக்ரசேனனின் தலைமையிலான யாதவர்கள் அனைவரும் அவர்களை வரவேற்பதற்காக நகரத்தைவிட்டு வெளியே வந்தனர்.(1-3) மதுராவைச் சேர்ந்த வணிகர்கள், குடிமக்கள், அமைச்சர்கள், சிறுவர்கள், முதியவர்கள் அனைவரும் அவர்களை வரவேற்பதற்காக வெளியே வந்தனர்.(4)

Monday, 17 August 2020

சிருகாலனுடன் போர் | விஷ்ணு பர்வம் பகுதி – 100 – 044

(சிருகாலாக்யராஜவதம்)

Battle with Shrigala | Vishnu-Parva-Chapter-100-044 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணன், பலராமன், தமகோஷன் ஆகியோர் படையுடன் கரவீரபுரம் சென்றது; போரில் கொல்லப்பட்ட சிருகாலன்; சிருகாலனின் மகன் சக்ரதேவன் கரவீரபுரத்தின் அரியணை ஏறியது...

Krishna_kills_Shrigala Mughal painting, c. 1585 from the Court of Akbar

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "போரில் பயங்கரனும், இந்திரனைப் போன்ற ஆற்றலைக் கொண்டவனுமான சிருகாலன், அவர்களின் {கிருஷ்ணன், பலராமன், தமகோஷன் ஆகியோரின்} வருகையை அறிந்தும், நகரத்தை அவர்கள் தாக்கப் போகிறார்கள் என்று நினைத்தும் (நகரத்தை விட்டு) வெளியே வந்தான்.(1) ஆயுதங்களால் நிறைந்திருப்பதும், தேர்ச்சக்கரத்தின், அச்சின் ஒலியைப் புன்னகையாகக் கொண்டதும், பலவண்ண ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டதும், கடலைப் போன்று ஒலியெழுப்புவதும், வேகமாகச் செல்லும் குதிரைகளால் இழுக்கப்படுவதும், வலுவான பொன் அச்சுகளால் பளபளப்பாக இருப்பதும், கருடனைப் போலச் செல்வதும், சூரியக் கதிர்களுக்கு ஒப்பான கடிவாளங்களால் செலுத்தப்படுவதும், இந்திரனின் தேருக்கு ஒப்பானதும் சூரியனைப் போன்ற பிரகாசமிக்கதுமான தேரொன்றில் ஏறி அந்த நகரத்தைவிட்டு அவன் வெளியே வந்தான்.(2-6)

Sunday, 16 August 2020

பகைவனைச் சந்தித்த கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 99 – 043

(ஜராஸந்தபராபவம்)

Krishna meets his enemy | Vishnu-Parva-Chapter-99-043 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : தெய்வீக ஆயுத ஞானத்தை மீண்டும் மீண்டும் அடைந்த கிருஷ்ணனும், பலராமனும்; உக்கிரமடைந்த கோமந்த மலை போர் தொடக்கம்; தரதனைக் கொன்ற பலராமன்; ஜராசந்தனை வீழ்த்தியது; தமகோஷன் கிருஷ்ணன் உரையாடல்...

Gomanta mount war

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மலையில் இருந்து இறங்கி வந்த வசுதேவனின் மகன்கள் {பலராமன், கிருஷ்ணன்} இருவரையும் கண்ட மன்னர்களின் படைவீரர்கள் பீதியடைந்தனர், விலங்குகள் கலக்கமடைந்தன.(1) அவர்களின் கரங்களில் ஆயுதங்களேதும் இல்லாவிட்டாலும், கடலைக் கலங்கடிக்கும் மகரங்கள் இரண்டைப் போல அவர்கள் கோபத்தில் அங்கே திரிந்து கொண்டிருந்தனர்.(2) அவ்வாறு அவர்கள் போரிட விரும்பி அங்கே திரிந்து கொண்டிருந்தபோது, ஆயுதங்களைக் கையாள்வது தொடர்பான புராதன நுண்ணறிவு அவர்களுக்குள் எழுந்தது.(3) மதுராவில் நடந்த போரின்போது அவர்கள் ஏற்கனவே அடைந்திருந்த ஆயுதங்கள், கூடியிருந்த மன்னர்களின் கண்களுக்கு முன்பாகவே தழலென எரிந்து கொண்டு வானில் இருந்து இறங்கின. பேருடல் படைத்தவையும், மனிதர்களின் தசைகளை உண்ணும் விருப்பத்துடன் கூடியவையும், அந்த இரு யாதவர்களால் அடையப்பட்டவையுமான அந்த ஆயுதங்கள் தாகம் நிறைந்தவையாக வானில் இருந்து பாய்ந்து வந்தன. அவை தெய்வீக மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும், காந்தியால் பத்து திக்கிற்கும் ஒளியூட்டிக் கொண்டும், வானுலாவிகளை {பறவைகளை} அச்சுறுத்திக் கொண்டும் இருந்தன. அரச இறைச்சியை உண்ணும் நோக்கில் இரை தேடும் விலங்குகளும் பின்தொடர்ந்து வந்தன.(4-8)

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்