Showing posts with label விஸ்வகர்மன். Show all posts
Showing posts with label விஸ்வகர்மன். Show all posts

Sunday, 20 December 2020

துவாரகையைச் சீரமைத்த தேவதச்சன் | விஷ்ணு பர்வம் பகுதி – 155 – 99

(புனர்விஷேஷதோ த்வாரவதீநிர்மாணம்)

The celestial architect builds Dwaraka | Vishnu-Parva-Chapter-155-099 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : துவாரகை விஷ்வகர்மனால் மிகச்சிறப்பாக நிர்மாணிக்கப்படல்; கிருஷ்ணனின் மனைவியருக்கு மாளிகைகள் அமைத்தல்; செய்குன்றுகள், ஆறுகள், குளங்கள், வனங்கள், உபவனங்கள் ஆகியவை அமைத்தல்...


A palace in Dwaraka

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "கிருஷ்ணன், தேவர்களின் வசிப்பிடத்திற்கு ஒப்பானதும், அனைத்துப் பக்கங்களிலும் எதிரொலிகளால் நிறைந்ததும், மணி மலை, விளையாட்டு இல்லங்கள், தோட்டங்கள், காடுகள், சபாமண்டபங்கள், கோபுரங்கள் ஆகியவற்றைக் கொண்டதுமான துவாரகா நகரத்தைக் கருடனின் முதுகில் அமர்ந்தவாறே கண்டான்.(1,2)

Monday, 14 September 2020

துவாரகை நகரமைப்பு | விஷ்ணு பர்வம் பகுதி – 115 – 059

(த்வாரவதீநகரநிர்மாணம்)

The laying out of Dwarka | Vishnu-Parva-Chapter-115-059 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : விஷ்வகர்மன் துவாரகை நகரத்தைப் பெரியதாக அமைத்தல்; தேவசபையான சுதர்மம் துவாரகைக்குக் கொண்டு வரப்பட்டது; யாதவர்களை சுகமாகக் கவனித்துக் கொண்ட கிருஷ்ணன்; ரேவதியை மணந்த பலராமன்...

Ancient Dwaraka

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தெளிந்த விடியலில் சூரியன் உதித்தபோது, யதுகுல ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, அந்தக் காலைக்கான தன் தூய்மைச் சடங்குகளைச் செய்துவிட்டு, காட்டுப்புறத்தில் சிறிது நேரம் அமர்ந்து ஒரு கோட்டை கட்டுவதற்கான இடத்தைத் தேடத் தொடங்கினான். யது குலத்தின் முக்கிய உறுப்பினர்கள் அவனைப் பின்தொடர்ந்தனர்.(1,2) பிறகு ரோஹிணி நட்சத்திர ஆதிக்கம் கொண்ட ஒரு மங்கல நாளில் பிராமணர்களுக்கு ஏராளமான கொடைகளை அளித்து, அவர்களைக் கொண்டு மங்கலச் சடங்குகளைச் செய்தான். அதன் பிறகு கோட்டை கட்டும் பணியைத் தொடங்கினான்.(3)

Tuesday, 24 March 2020

சூரியனின் சந்ததி | ஹரிவம்ச பர்வம் பகுதி – 09

(வைவஸ்வதோத்பத்தி)

Account of the Sun's Offspring - Emergence of Vaivasvata Manu | Harivamsa-Parva-Chapter-09 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : சூரியனின் பிறப்பு; வைவஸ்வத மனு, யமன், யமுனையின் பிறப்பு; சஜனையின் நிழலில் பிறந்த சாயாதேவி; சாவர்ணி மனு, சனீஸ்வரன் பிறப்பு; சூரியனின் கடுமையைக் குறித்துச் செதுக்கிய விஸ்வகர்மன்; அஸ்வினி தேவர்களின் பிறப்பு; விஷ்ணுவின் சக்கரத்தை வடிவமைத்த விஸ்வகர்மன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! பகைவரை அடக்குபவனே, கசியபர், தக்ஷனின் மகளான அதிதியிடம் விவஸ்வானை {சூரியனைப்} பெற்றார். அவன் {துவாஷ்டிரியின் / விஸ்வகர்மாவின் மகளான} ஸஜனா {ஸஞ்சனா} தேவியை மணந்தான்.(1) அந்த அழகிய மங்கை ஸுரேணு என்ற பெயரில் மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்டாள். உயர் ஆன்மா கொண்டவனும், தெய்வீகமானவனுமான மார்த்தாண்டனின் (சூரியனின்) மனைவியும், அழகும், இளமையும் கொண்டவளுமான அவள், தன் கணவனின் அழகில் நிறைவடைந்தாளில்லை[1]. இந்தப் பூமியில் உள்ள பெண்களின் மத்தியில், ஸஜனை பெரும் தவச் சக்திகளைக் கொடையாகப் பெற்றிருந்தாள். சூரியனின் கதிர்களால் எரிந்த உடலுடன் கூடிய அவள் அழகாகத் தெரியவில்லை.(2-4) கசியபர் அறியாமையில் இருந்தவளிடம் (அதிதியிடம்) அன்புடன் "உன் கரு[2] இறக்கவில்லை" என்று சொன்னதால், அவன் மார்த்தாண்டன் என்றழைக்கப்பட்டான்.(5)

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்