Showing posts with label பிரம்மதத்தன். Show all posts
Showing posts with label பிரம்மதத்தன். Show all posts

Monday, 31 January 2022

பிரம்மதத்தன் மித்ரஸஹர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 79

(ஹம்ஸடிம்பகோத்பத்தி)

Hamsa and Dimbhaka | Bhavishya-Parva-Chapter-79 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: மன்னன் பிரம்மதத்தனுக்கும், பிராமணர் மித்ரஸஹருக்கும் இடையில் இருந்த நட்பு; ஹம்சன், டிம்பகன், ஜனார்த்தனன் பிறப்பு...


Brahmadatta and his wives

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, சால்வதேசத்தைத் தன் ராஜ்ஜியமாகவும், பிரம்மதத்தன் என்ற பெயரையும் கொண்ட ஓர் உத்தம மன்னன் இருந்தான். மன்னா, அவன் அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்ட தூய இதயம் படைத்தவனாகவும் இருந்தான்.(1) அவன் எப்போதும் தன் மனத்தையும், புலன்களையும் கவனமாகக் கட்டுப்படுத்திக் கொண்டு ஐவகை வேள்விகளை {பஞ்சயஜ்ஞங்களைச்} செய்து வந்தான். வேதங்களில் சொல்லப்படும் பிரம்மத்தைக் குறித்த அறிவியலை நன்கறிந்தவனாகவும் அவன் இருந்தான். எப்போதும் வேள்விகளில் ஈடுபடுபவனாக இருந்ததால் அவனது இருப்பே உயிரினங்கள் அனைத்திற்கும் மங்கலகரமானதாக இருந்தது.(2)

Friday, 20 November 2020

யாகத்தடை செய்த அசுரர்கள் | விஷ்ணு பர்வம் பகுதி – 140 – 084

(யஷவிஸ்தரோ துஷ்டநிக்ரஹஷ்ச)

The Asuras obstructing a Yajna | Vishnu-Parva-Chapter-140-084 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பிரம்மதத்தர் செய்த யாகம்; யாகத்தைக் காத்த வசுதேவன்; யாகக் காணிக்கையில் பங்கு கேட்ட அசுரர்கள்; பிரம்மதத்தரின் மகள்களைக் கடத்திச் சென்ற அசுரர்கள்; அசுரர்களுக்கு அலோசனை வழங்கிய நாரதர்...

Narada Muni

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அந்த நேரத்தில், ஓ மன்னா, யாஜ்ஞவல்கியரின் சீடரும், நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும் நன்கு அறிந்தவரும், அறநெறி சார்ந்தவரும்,(1) பிரம்மதத்தன் என்ற பெயரைக் கொண்டவருமான வாஜஸ்நேய பிராமணர் ஒருவர்,(2) ஷத்புர நகரத்தில் முனிவர்களால் அடையப்பட்ட ஆவர்த்தகை எனும் நல்லாற்றின் புனிதக்கரையில் ஓராண்டு காலம் நீளும் யஜ்ஞம் செய்யும் தீக்ஷை பெற்றார்[1].(3) 

Tuesday, 14 April 2020

உலகைத் துறந்த பிரம்மதத்தன் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 24

(பித்ரு கல்பம் - 8 | பித்ருகல்ப ஸமாப்தி - பிரம்மதத்த சரிதம்)

Brahmadatta retires from the world | Harivamsa-Parva-Chapter-24 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : எறும்புகளின் மொழியைக் கேட்டுச் சிரித்த பிரம்மதத்தன்; அவனது அற்புத சக்தியை நிரூபிக்குமாறு கேட்ட சன்னதி; எல்லாம்வல்ல நாராயணனைக் கண்ட பிரம்மதத்தன்; ஸ்லோகங்களைச் சொன்ன பிராமணர்; அனைத்தையும் துறந்து மனைவியுடன் காட்டுக்குச் சென்ற பிரம்மதத்தன்; முக்தியை அடைந்தது...

மார்க்கண்டேயர் {பீஷ்மரிடம்}, "தவசியும், துறவியுமான அந்த வைப்ராஜர்களில் {வாத்துகளில்} ஒருவன், விஷ்வக்ஸேனன் என்ற பெயரில் பிரம்மதத்தனுக்கு மகனாகப் பிறந்தான்[1].(1) ஒரு காலத்தில், சச்சியின் துணையுடன் கூடிய இந்திரனைப் போலப் பிரம்மதத்தன் தன் மனைவியின் துணையுடன் காட்டில் இன்பமாக விளையாடிக் கொண்டிருந்தான்.(2) அப்போது, பெண் எறும்பை வேண்டும் ஓர் எறும்பின் ஒலியையும், மேலும் அது வெளிப்படுத்திய நிறைவின்மையையும் கேட்டான்.(3) அப்பாவியான அந்தப் பெண் எறும்பு, தன் கணவனின் வேண்டுதலைக் கேட்டு வெளிப்படுத்திய வெறுப்பையும் கேட்டு பிரம்மதத்தன் உரக்கச் சிரித்தான்.(4)

பறவைகளின் கதை | ஹரிவம்ச பர்வம் பகுதி – 23

(பித்ரு கல்பம் - 7 | ஹம்ஸ வர்ணனம்)

The story of the birds | Harivamsa-Parva-Chapter-23 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : பறவைகளின் யோக நிலையைக் கண்டு நாணமடைந்த மன்னன் விப்ராஜன்; தன் மகன் அணுஹனை அரியணையில் ஏற்றியது; பிரம்மதத்தனைப் பெற்ற அணுஹன்; பிரம்மதத்தனின் அமைச்சர்கள்; ஸ்ரோத்ரிய பிராமணர்களாகப் பிறந்த மற்ற நான்கு வாத்துகள்; தந்தையைப் பிரம்மதத்தனிடம் செல்லுமாறு தூண்டிவிட்டு நற்கதியை அடைந்த நால்வர்...

மார்க்கண்டேயர் {பீஷ்மரிடம்}, "எப்போதும் யோகம் பயில்பவையும், மானஸத் தடாகத்தில் திரிபவையும், பத்மகர்ப்பன், அரவிந்தாக்ஷன், க்ஷீரகர்ப்பன், ஸுலோசனன், உருபிந்து, ஸுபிந்து, ஹைமகர்ப்பன் என்ற பெயர்களைக் கொண்ட அந்த ஏழு வாத்துகளும் {அன்னப்பறவைகளும்}, எப்போதும் காற்றையும், நீரையும் உண்டு தங்கள் உடல்களைப் பேணி வாழ்பவையாக இருந்தன[1].(1,2) அந்த நேரத்தில், மன்னன் {விப்ராஜன்} தன் மேனி எழிலில் ஒளிர்ந்து கொண்டிருப்பவனும், தன்னுடைய பெண் துணைவிகளால் சூழப்பட்டவனுமாக, நந்தனம் எனும் இன்பத் தோட்டத்தில் தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போல அந்தக் காட்டில் திரிந்து கொண்டிருந்தான்.(3) அந்தப் பறவைகளின் பேராவல் மற்றும் வேறு புற அடையாளங்கள் ஆகியவற்றின் மூலம் அவை யோகியர் என்பதை அந்த மன்னன் {விப்ராஜன்} கண்டான். பிறகு வெட்கத்தாலும்[2], அதை நினைத்துப் பார்த்தும் தன் நகரத்திற்குத் திரும்பிச் சென்றான்.(4)

Monday, 13 April 2020

பறவைகளின் பாதை | ஹரிவம்ச பர்வம் பகுதி – 22

(பித்ரு கல்பம் - 6 | சக்ரவாக வர்ணனம்)

The course of the birds | Harivamsa-Parva-Chapter-22 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : அமைச்சர்களாக இருப்போம் என்ற சொன்ன இரண்டு அன்னப்பறவைகள்; மூன்றையும் சபித்த மற்ற நான்கு பறவைகள்; சாபம் விலகும் வழியையும் சொன்னது...

மார்க்கண்டேயர், "அப்போது அவனுடைய[1] தோழர்களான இரு சக்கரவாகப் பறவைகள்[2] அவனிடம், "நாங்கள் எப்போதும் உனக்கு நன்மையைச் செய்யும் உன்னுடைய அமைச்சர்களாக இருப்போம்" என்றனர்.(1) "அவ்வாறே ஆகட்டும்" என்று சொன்ன அவனுடைய மனது யோகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அவர்கள் அந்த ஒப்பந்தத்திற்குள் நுழைந்ததும், ஸுசிவாக்[3] அவர்களிடம்,(2) "ஒரு யோகியின் பாதையில் இருந்து விலகி, ஆசையால் பீடிக்கப்பட்டு நீ இத்தகைய வரத்தை வேண்டுகிறாய். இந்தக் காரியத்தில் நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக.(3) நிச்சயம் நீ காம்பில்யத்தின் மன்னனாவாய், இந்த இருவரும் உன் அமைச்சர்களாவார்கள்[4]" என்றான்.(4)

ஏழு பிராமணர்கள் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 21

(பித்ரு கல்பம் - 5 | சிராத்த மஹாத்மியம்)

An account of the seven Brahmanas | Harivamsa-Parva-Chapter-21 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : பரத்வாஜரின் மகன்களான ஏழு பிராமணர்கள் மறுபிறவியில் கௌசிகரின் மகன்களாகப் பிறந்தது; கர்க்கரின் பசுவைக் கொன்று உண்டு, புலி கொன்றுவிட்டதாக அவரிடம் பொய் சொன்னது; ஏழு பிறவிகளில் அவர்கள் அடைந்த வெவ்வேறு நிலைகள்; ஆறாம் பிறவியில் அவர்களில் ஒருவன் மன்னன் விப்ராஜனைப் போலச் செழிப்படைய விரும்பியது...

மார்க்கண்டேயர், "மக்கள் சிராத்தம் செய்கின்றனர், யோகிகளும் அதையே செய்கின்றனர். அதன் {சிராத்தம் செய்வதன் மூலம் உண்டாகும்} மிகச் சிறந்த பலன்களை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(1) ஓ! பரதனின் வழித்தோன்றலே {பீஷ்மா}, பிரம்மதத்தன் தன் ஏழாம் பிறவியில் எதை அடைந்தானோ, அதைக் கொண்டே அறம் குறித்த அறிவு படிப்படியாக ஏற்பட்டது.(2) ஓ! பாவங்களைக் களைந்தவனே, பெரும் நுண்ணறிவுமிக்கவனே, அறப் புறக்கணிப்புக்குப் பரிகாரமாக {பீடயம் - கோ ஹிம்ஸை - பசுவைக் கொல்லும் கொடுஞ்செயல் செய்ததனால் உண்ட கீழ்மைக்குப் பரிகாரமாக} சிராத்தம் செய்வதன் மூலம் பிராமணர்கள் பழங்காலத்தில் எதை அடைந்தனர் என்பதைக் கேட்பாயாக[1].(3)

Sunday, 12 April 2020

பிரம்மதத்தனும் வினோதப் பறவையும் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 20

(பித்ரு கல்பம் - 4 | பூஜனீயோபாக்யானம் - சடகாக்யானம்)

Account of Brahmadatta and the strange bird | Harivamsa-Parva-Chapter-20 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : பிருஹத்க்ஷத்ரனின் குலத்தில் தோன்றிய நீபனின் நூறு மகன்கள்; நீபனின் குலத்தில் தோன்றிய அணுஹனின் மகன் பிரம்மதத்தன்; பிரம்மதத்தனின் குலத்தில் தோன்றிய மற்றொரு நீபனால் அந்த நீப குலத்துக்கு நேர்ந்த பேரழிவு; அஜமீடனின் குலத்தில் தோன்றிய கிருதன்; கிருதனின் மகன் உக்ராயுதன்; உக்ராயுதனால் அழிந்த நீபர்கள்; சத்யவதியைத் தனக்கு மனைவியாகக் கொடுக்குமாறு பீஷ்மரை மிரட்டிய உக்ராயுதன்; உக்ராயுதனிடம் இருந்த சக்கராயுதம்; உக்ராயுதனைக் கொன்ற பீஷ்மர்; பிரம்மதத்தன் மற்றும் பூஜனி என்ற பறவையின் கதை...

மார்க்கண்டேயர் {பீஷ்மரிடம்}, "அந்தத் தேவன் {சனத்குமாரர்} மறைந்ததும், அந்தத் தலைவனின் சொற்களுக்கிணங்க நான் தெய்வீகப் பார்வையுடன் கூடிய பகுத்தறிவு ஞானத்தை {பவ்யவிஜ்ஞானத்தை} அடைந்தேன்.(1) ஓ! கங்கையின் மைந்தா, அந்தத் தலைவர் (சனத்குமாரர்) என்னிடம் சொன்னவர்களும், கௌசிக வழித்தோன்றல்களுமான அந்தப் பிராமணர்கள் அனைவரையும் நான் குருக்ஷேத்திரத்தில் கண்டேன்.(2) அவர்களில் ஏழாவது பிராமணரே, மன்னன் பிரம்மதத்தனானான். அவனது பெயர், குணம் மற்றும் செயல்பாடு ஆகியவற்றின் மூலம் அவன் பித்ருதத்தன் {பித்ருவர்தி} என்ற பெயரில் கொண்டாடப்படலானான்.(3) மன்னர்களில் முதன்மையானவனான அணுஹன் {அணுஹு}, காம்பில்யம் என்ற பெயரைக் கொண்ட ஒரு சிறந்த நகரத்தில், சுகரின் மகளான கிருத்வியிடம் {கீர்த்திமதியிடம்} அந்த ஏகாதிபதியை {பிரம்மதத்தனைப்} பெற்றான்" என்றார்".(4)

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்