(பலிர்விஜயே ஷ்ரிய꞉ ஸ்வயமாகமநகதநம்)
Bali's prosperity | Bhavishya-Parva-Chapter-40 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : பலியை வந்தடைந்த செழிப்பின் தேவியான ஸ்ரீதேவி...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "{அதிதியின் மகன்களான} தேவர்கள் {திதியின் மகன்களான} தைத்தியர்களால் வீழ்த்தப்பட்டனர், அதன்படி தைத்தியர்களே உலகங்களை ஆக்கிரமித்தனர். மயன், சம்பரன் ஆகியோர் பெருஞ்சக்திவாய்ந்த பலியின் வெற்றியை அறிவித்தனர்.{1} அந்த நேரத்தில் திசைகள் தெளிவடைந்தன, பக்திச் செயல்பாடுகள் செழித்தன, அநீதி ஒடுக்கப்பட்டது, சூரியன் தன் பாதையில் முறையாகப் பயணித்தான்.{2}
