Showing posts with label பிரத்யும்னன். Show all posts
Showing posts with label பிரத்யும்னன். Show all posts

Wednesday, 3 March 2021

ருத்ராக்னிளுடன் போரிட்ட கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 179 – 123

(யுத்தேயக்னிகணாபயானம் ஜ்வரோத்பத்திஸ்தேன க்ருஷ்ணஸ்ய யுத்தம் ச)

Krishna goes to Sonitpura and fights with Rudra's followers on the way | Vishnu-Parva-Chapter-179-123 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பாணபுரி அக்னிகளுடனும், பெரும் முனிவர் அங்கீரசுடனும் போரிட்ட கிருஷ்ணன்...


Krishna and Pradyumna against Shiva

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "சங்குகள், பேரிகைகளின் {தூரியங்களின்} முழக்கம், சூதர்கள், மாகதர்கள், வந்திகளின் ஆயிரக்கணக்கான பாடல்கள்,(1) வெற்றியை அறிவிக்கும் மனிதர்களின் வாழ்த்தொலிகள் ஆகியவை ஒலித்தபோது ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, சந்திரனையும், சூரியனையும், சுக்ரனையும் போலத் தோன்றினான்.(2) ஓ! மன்னா, வினதையின் மகன் {கருடன்} வானத்தில் உயர்ந்தபோது, ஹரியின் சக்தியால் அவனுடைய அழகு பெருகி அபரிமிதமானது.(3) தாமரைக் கண்ணனான கேசவன், பாணனைக் கொல்ல விரும்பி எட்டுக் கரங்களைக் கொண்டதும், மலைக்கு ஒப்பானதுமான ஒரு வடிவத்தை ஏற்றான். அந்த நேரத்தில் சாரங்கபாணியான ஜனார்த்தனன், எண்ணற்ற தலைகளைக் கொண்டவனானான்.(4) அவன், வலக்கைகள் நான்கில் வாள், சக்கரம், கதாயுதம், கணைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தான், இடக்கைகள் நான்கில் தோல் கேடயம், சாரங்கவில், வஜ்ரம், சங்கு ஆகியவற்றைக் கொண்டிருந்தான்.(5) {சாரங்கபாணி ஆயிரம் தலைகளைக் கொண்டிருந்தான்}. சங்கர்ஷணன், ஆயிரம் வடிவங்களை ஏற்று,(6) வெண்மையான ஆயுதங்களை ஏந்தி, சிகரங்களுடன் கூடிய கைலாச மலையைப் போல உயிரினங்கள் அனைத்தினாலும் தடுக்கப்பட முடியாதவனாக உதயச் சந்திரனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(7) உயரான்மப் பிரத்யும்னன், போரில் தன் ஆற்றலை வெளிப்படுத்தும் நோக்கில், சனத்குமாரனைப் போன்ற தோற்றத்தை ஏற்றான்.(8) அதன்பிறகு, பெருஞ்சக்திவாய்ந்த வினதையின் மகன் {கருடன்}, வலுவாகச் சிறகடித்து எண்ணற்ற மலைகளை நடுங்கச் செய்தபடியும், காற்றின் பாதையைத் தடுத்தபடியும் பறந்து சென்றான்.(9) மனோ வேகத்துடன் கூடிய அவன் சித்தர்கள், சாரணர்கள் ஆகியோரின் புனிதமிக்கப் பாதையைக் கடந்து சென்றான்.(10)

Monday, 25 January 2021

ஆஹ்நிகத் துதி | விஷ்ணு பர்வம் பகுதி – 166 – 110

(பலதேவாஹ்நிகம்)

Baladeva's mantra for protecting Pradyumna | Vishnu-Parva-Chapter-166-110 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பிரத்யும்னனின் பாதுகாப்புக்காக பலராமனால் சொல்லப்பட்ட துதி; நீண்ட வாழ்நாள், செல்வம், வெற்றி ஆகியவற்றைக் கொடுக்கும் ஆஹ்நிக ஸ்தோத்திரம்...


Balarama

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! வெற்றியாளர்களில் முதன்மையானவனே, பிரத்யும்னன் சம்பரனைக் கொன்றுவிட்டு துவாரகா நகரை அடைந்தபோது மாலை வேளைக்கான ஓர் அற்புத மந்திரம் ஓதப்பட்டது.(1) பிரத்யும்னனின் பாதுகாப்புக்காக அந்நேரத்தில் பலதேவனால் ஓதப்பட்ட மாலை நேர மந்திரத்தை {ஆஹ்நிக ஸ்தோத்திரத்தை}[1] நான் சொல்லப் போகிறேன்.(2) இதை ஒருவன் மாலை வேளையில் ஓதினால் ஆன்மா தூய்மையடைந்தவன் ஆவான். பலதேவன், வாசுதேவன், அறப்பற்றுள்ள ரிஷிகள், முனிவர்கள் ஆகியோரால் இஃது ஓதப்பட்டது.(3)

Friday, 22 January 2021

மாயாவதியுடன் துவாரகை சென்ற பிரத்யும்னன் | விஷ்ணு பர்வம் பகுதி – 165 – 109

(மாயாவத்யா ஸஹ பிரத்யும்னஸ்ய துவாரகாகமனம்)

Pradyumna goes to Dwaraka and his parents recognize him | Vishnu-Parva-Chapter-165-109 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : மாயாவதியுடன் துவாரகையை அடைந்த பிரத்யும்னன்; மட்டற்ற மகிழ்ச்சியடைந்த ருக்மிணி...


Pradyumna Mayavati Rukmini

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பெருஞ்சக்திவாய்ந்த மாயாவியான சம்பரன், தன் மாயைகள் அனைத்தும் முடிந்ததும், எட்டாம் பிறைநாளில் {அஷ்டமியில்} போரில் கொல்லப்பட்டான்.(1) பிரத்யும்னன், அசுரர்களின் முதன்மையான அவனை ரிக்ஷவந்த நகரத்தில் கொன்றுவிட்டுத் தன்னுடன் மாயாவதியை அழைத்துக் கொண்டு தன் தந்தையின் நகருக்கு {துவாரகைக்குப்} புறப்பட்டுச் சென்றான்.(2) வேகமாகச் செல்லவல்லவனான அந்த வீரன், தன் மாயா சக்தியின் மூலம் வானத்தில் எழுந்து தன் தந்தையின் சக்தியால் பாதுகாக்கப்படும் அழகிய துவாராவதி நகரை அடைந்தான்.(3) மன்மதனை (காமனைப்) போன்ற அந்த இளைஞன், மாயாதியுடன் சேர்ந்து வானத்தில் இருந்து கேசவனின் அந்தப்புரத்திற்குள் இறங்கினான்.(4) இவ்வாறு பிரத்யும்னன் கீழே இறங்கி வந்தபோது, கேசவனின் ராணிகள் ஆச்சரியத்தாலும், மகிழ்ச்சியாலும், அச்சத்தாலும் நிறைந்தனர்.(5) காமனுக்கு ஒப்பான அந்த இளைஞனையும், அவனது மனைவியையும் கண்ட பிறகு அவர்களது முகங்களில் மகிழ்ச்சி பெருகியது; அவர்கள் தங்கள் கண்களால் அவனது முகத்தில் உள்ள அமுதத்தைப் பருகுபவர்களைப் போலத் தெரிந்தனர்.(6) நாணம் நிறைந்த அந்தப் பிள்ளையின் முகத்தையும், அடிமேல் அடியெடுத்து வைத்து அடக்கத்துடன் நடக்கும் நடையும் கண்ட அவர்கள் அனைவரும் அவனிடம் அன்பால் நிறைந்தனர்.(7)

Thursday, 21 January 2021

சம்பர வதம் | விஷ்ணு பர்வம் பகுதி – 164 – 108

(ஷம்பரவதம்)

Shamvara's death | Vishnu-Parva-Chapter-164-108 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பார்வதியைத் துதித்த பிரத்யும்னன்; சம்பரனின் முத்கரத்தைத் தாமரை மாலையாகப் பெற்ற வரம்; பிரத்யும்னன் ஏவிய வைஷ்ணவாஸ்த்திரம்; சம்பரன் வதம்...


Pradyuma killed Shamvara

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "கோபத்தில் நிறைந்த சம்பரன் தன் முத்கரத்தை எடுத்தான். ஓ! பரதனின் வழித்தோன்றலே, சம்பரன் தன் முத்கரத்தை எடுத்தபோது பனிரெண்டு சூரியர்களும் அங்கே உதித்தனர் {அந்த ஆயுதம் பனிரெண்டு சூரியன்களுக்கு ஒப்பான ஒளியுடன் இருந்தது},(1) மலைகள் அசைந்தன, பூமி நடுங்கினாள். பெருங்கடலின் நீர் கரையைக் கடந்தது, தேவர்கள் கலக்கமடைந்தனர்,(2) வானம் கழுகுகளால் நிறைந்திருந்தது, எரிகொள்ளிகள் விழுந்தன, கடுங்காற்று வீசியது, இந்திரன் குருதி மழையைப் பொழிந்தான்.(3) இந்தத் தீய சகுனங்கள் அனைத்தையும் கண்ட வீரன் பிரத்யும்னன், உடனே தன் தேரில் இருந்து இறங்கினான். பிறகு தன் கரங்களைக் குவித்தபடி,(4) சங்கரனின் அன்புக்குரிய மனைவியான பார்வதியை நினைவுகூர்ந்து, தலைவணங்கியபடியே அவளது மகிமைகளைத் துதிக்கத் தொடங்கினான்.(5)

Wednesday, 20 January 2021

சம்பர வதங்குறித்த நாரதர் சொல் | விஷ்ணு பர்வம் பகுதி – 163 – 107

(ஷம்பரவதே நாரதவாக்யம்)

Shamvara comes to the battle-field | Vishnu-Parva-Chapter-163-107 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : சம்பராசுரனுக்கும் பிரத்யும்னனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; பிரத்யும்னனின் முற்பிறவி வரலாறு...


War between Asura Shamvara and Pradyumna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! மன்னா, அப்போது கோபத்தில் நிறைந்திருந்த சம்பரன் தன் தேரோட்டியிடம், "ஓ! வீரா, விரைவில் என் தேரை பகைவனிடம் {பிரத்யும்னனிடம்} கொண்டு செல்வாயாக.(1) எனக்குத் தீங்கிழைத்தவனைக் கணைகளால் நான் கொல்லப் போகிறேன்" என்றான்.

Sunday, 17 January 2021

சம்பரன் மகன்களுடன் போரிட்ட பிரத்யும்னன் | விஷ்ணு பர்வம் பகுதி – 162 – 106

(பிரத்யும்நேந ஷம்பரஸைந்யவித்ராவணம்)

Battle between Pradyumna and Shamvara's sons | Vishnu-Parva-Chapter-162-106 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : சம்பரனின் நூறு மகன்களைக் கொன்ற பிரத்யும்னன்; கேதுமாலி, துர்தரன், சத்ருஹந்தன், பிரமர்த்தனன் ஆகியோரின் அழிவு...


Pradyuman

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அதன்பிறகு ருக்மிணியின் மகனுக்கும், சம்பரனின் மகன்களுக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் போர் நடந்தது.(1) கோபத்தில் நிறைந்திருந்த அந்தப் பெருந்தைத்தியர்கள், பிரத்யும்னன் மீது கணைகளையும், சக்திகளையும், பராசங்களையும், தோமரங்களையும், குண்டங்களையும், புசுண்டிகளையும், கதாயுதங்களையும் அடுத்தடுத்து பொழியத் தொடங்கினர்.(2) கோபத்தில் தூண்டப்பட்டிருந்த கிருஷ்ணனின் மகனும் போரில் தன் வில்லில் இருந்து ஏவப்பட்ட ஐந்து ஐந்து கணைகளால் அவர்கள் ஒவ்வொருவரையும் துளைத்தான்.(3) இதனால் பெருங்கோபம் கொண்டவர்களும், உறுதிமிக்கவர்களுமான அந்த அசுரர்கள், பிரத்யும்னனைக் கொல்வதற்காக ஆயுதங்களின் வலைப்பின்னலை உண்டாக்கினர்.(4) கோபத்தால் தூண்டப்பட்ட அனங்கனும் {மன்மதனான பிரத்யும்னனும்} தன் வில்லை எடுத்துக் கொண்டான். அவன் பெருஞ்சக்திவாய்ந்த சம்பரனின் மகன்கள் பத்து பேரைக் கொன்றான்.(5) பெருஞ்சக்திவாய்ந்த கேசவனின் மகன், அடுத்தக் கணத்தில் கோபத்தில் நிறைந்தவனாக ஒரு பல்லத்தால் சித்திரசேனனின் தலையை அறுத்தான்.(6) சம்பரனின் எஞ்சிய மகன்கள் போர் வெறியோடு விரைந்து கணைகளை ஏவத் தொடங்கினர். அனங்கனைக் கொல்வதற்காக அவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் கணைகளை ஏவிப் போரிட்டனர். (7)

Thursday, 31 December 2020

பிரத்யும்னன் கடத்தப்பட்டான் | விஷ்ணு பர்வம் பகுதி – 161 – 105

(பிரத்யும்நஹரணம்)

An account of Pradyumna | Vishnu-Parva-Chapter-161-105 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பிரத்யும்னனின் முற்பிறவி வரலாறு; சம்பரனால் கடத்தப்பட்ட பிரத்யும்னன்; ரதிதேவியான மாயாவதியின் காதல்...


Mayavati and Pradyuman

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "பிரத்யும்னன் சம்பரனைக் கொன்றான் என்று முன்பு நீர் சொன்னீர். பிரத்யும்னன் அவனை எவ்வாறு கொன்றான் என்பதை இப்போது எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)

Saturday, 19 December 2020

வஜ்ரநாப வதம் | விஷ்ணு பர்வம் பகுதி – 154 – 98

(வஜ்ரநாபவதம்)

The destruction of Vajranabha | Vishnu-Parva-Chapter-154-098 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : வஜ்ரநாபனுக்கும், பிரத்யும்னனுக்கும் இடையில் நடந்த கடும்போரில் இருவரும் மயக்கமடைந்தது; சக்கர ஆயுதத்தால் வஜ்ரநாபனைக் கொன்ற பிரத்யும்னன்; சுநாபனின் மரணம்; நான்காகப் பிரிக்கப்பட்ட வஜ்ரநாபனின் நாடு...


Pradyumna killing Vajranabha

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "உலகின் விழியான சூரியன் உதித்து மூன்று முஹூர்த்தங்கள் கடந்ததும், பாம்புகளின் பகைவனான கருடனைச் செலுத்திக் கொண்டு தேவன் ஹரி அங்கே வந்தான்.(1) ஓ! குருவின் வழித்தோன்றலே, பறவைகளின் மன்னனான கருடன், அன்னப்பறவைகளையும், காற்றையும், மனத்தையும் விட வேகமாகச் ஆகாய லோகத்தில் இருக்கும் சக்ரனிடம் சென்றான்.(2) தலைவன் கிருஷ்ணன், வாசவனின் அருகில் வந்ததும் தைத்தியர்களின் அச்சத்தைப் பெருகச் செய்யும் பாஞ்சஜன்ய சங்கத்தை முழக்கினான்.(3) பகைவரைக் கொல்பவனான பிரத்யும்னன் அவ்வொலியைக் கேட்டு தன் தந்தையின் அருகில் வந்தபோது, கேசவன் அவனிடம், "விரைவாக வஜ்ரநாபனைக் கொல்" என்றான்.(4) மீண்டும் அவன், "கருடனின் முதுகில் ஏறி அங்கே செல்வாயாக" என்றான். தேவர்களில் முதன்மையான இந்திரனையும், உபேந்திரனையும் வணங்கிவிட்டு அவ்வாறே அவன் செய்தான் {கருடனின் முதுகில் ஏறிச் சென்றான்}.(5)

Friday, 18 December 2020

தேவலோகத்தை வெல்ல விரும்பிய வஜ்ரநாபன் | விஷ்ணு பர்வம் பகுதி – 153 – 97

(பிரத்யும்னதைத்யயுத்தம்)

Vajranabha wants to conquer the celestial region | Vishnu-Parva-Chapter-153-097 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : வஜ்ரநாபனை அறிவுறுத்திய கசியபர்; வஜ்ரநாபன் தன் மகள்களின் பிள்ளைகளைக் கொல்லச் சொன்னது; பிரத்யும்னன், கதன், சாம்பன் ஆகியோர் அசுரர்களை அழித்தது...


Pradyumna and Ananta against Asuras

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஒப்பற்றவரான கசியபரின் வேள்வி {ஸத்ரயாகம்} நிறைவடைந்ததும், தேவர்களும், அசுரர்களும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(1) மூவுலகங்களை வெல்ல விரும்பிய வஜ்ரநாபன், அந்த வேள்வியின் முடிவில் கசியபரிடம் சென்றான். அவர் அவனிடம்,(2) "ஓ! வஜ்ரநாபா, கேட்பதற்குத் தகுந்தவையாக என் சொற்களை நீ நினைத்தால் நான் சொல்வதைக் கேட்பாயாக. {மகனே, மக்களால் சூழப்பட்டவனாக வஜ்ரபுரத்தில் வசிப்பாயாக}.(3) உங்கள் அனைவரிலும் சக்ரன் {இந்திரன்} மூத்தவனும், திறன்களில் முதன்மையானவனும் ஆவான்; அவன் பெருந்தவச் சக்திகளுடன் கூடியவனாகவும், இயல்பிலேயே பலவானாகவும், பிராமணர்களிடம் அர்ப்பணிப்புமிக்கவனாகவும்,(4) நன்றி நிறைந்தவனாகவும், மொத்த உலகின் மன்னனாகவும், நல்லோருக்கும், அறவோருக்கும் புகலிடமாகவும் திகழ்கிறான். {மூவுலகங்களின் மன்னனான அவனே அனைத்து உயிரினங்களின் நன்மையில் எப்போதும் முனைப்புடன் இருக்கிறான்}.(5) ஓ! வஜ்ரநாபா, உன்னால் அவனை {இந்திரனை} வெல்ல முடியாது, {இம்முயற்சியில்} நீயே கொல்லப்படுவாய். பாம்பின் கோபத்தைத் தூண்டியவன் தானே {பாம்பை மிதித்தவன்} அழிவடைவதைப் போல நீயும் உடனே அழிக்கப்படுவாய்" என்றார் {கசியபர்}.(6)

Thursday, 17 December 2020

பிரத்யும்னன் பேச்சு | விஷ்ணு பர்வம் பகுதி – 152 – 96

(பிரத்யும்னபாஷணம்)

A description of the rainy season | Vishnu-Parva-Chapter-152-096 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : மழைக்காலம்; கிருஷ்ணனின் சந்திரவம்ச அவதாரம்; பிரபாவதியின் பெருமை சொன்ன பிரத்யும்னன்...


Pradyumna and Prabhavati

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "முழுநிலவைப் போன்ற முகத்தைக் கொண்ட காமன் {பிரத்யும்னன்}, மழைக்காலத்தில் மேகங்களால் நிறைந்த வானைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அழகிய கண்களைக் கொண்ட பிரபாவதியிடம்,(1) "ஓ! அழகிய பெண்ணே, கூந்தலில் மறைந்திருக்கும் உன் முகத்தைப் போலவே அழகிய கதிர்களைக் கொண்ட சந்திரன் மேகங்களால் மறைக்கப்பட்டிருப்பதைப் பார்.(2) ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, உன்னுடைய அழகிய பொன்னாபரணத்தைப் போலவே மேகங்களில் இருக்கும் மின்னல் அழகாகத் தெரிவதைப் பார். ஓ! அழகிய அங்கங்களைக் கொண்டவளே, மழைத்தாரைகளைப் பொழிந்து முழங்கும் மேகங்கள் உன்னுடைய ஆரங்களை {முத்துமாலைகளைப்} போல இருக்கின்றன.(3) நீர்த்துளிகளில் நுழையும் கொக்குகள் உன் பல்வரிசையைப் போல ஒளிர்கின்றன. ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, தாமரைகள் மூழ்கியிருப்பதால் ஓடைகள் நிறைந்த தடாகங்கள் அழகாகத் தெரியவில்லை.(4) கொக்குகளால் அலங்கரிக்கப்பட்டுத் தூய்மையான அழகிய பற்களைப் போலத் தெரியும் மேகங்கள், காட்டில் ஒன்றோடொன்று மோத இருக்கும் பெருந்தந்தங்களுடைய யானைகளைப் போலத் தெரிகின்றன.(5)

Wednesday, 9 December 2020

பிரத்யும்னன் பிரபாவதி திருமணம் | விஷ்ணு பர்வம் பகுதி – 151 – 95

(பிரபாவதீபாணிக்ரஹணம்)

Pradyumna appears before Prabhavati and marries her | Vishnu-Parva-Chapter-150-095 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பிரபாவதியை காந்தர்வ மணம்புரிந்த பிரத்யும்னன்; வஜ்ரநாபனின் தம்பி சுநாபனின் மகள்களான சந்திரவதி கதனையும், குணவதி சாம்பனையும் மணந்தது...


Pradyumna weds Prabhavati in Gandharva form of marriage

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அதன்பிறகு, கிருஷ்ணனின் மகனான பிரத்யும்னன், "இந்தக் கன்னிகை முற்றிலும் என்னால் பீடிக்கப்பட்டிருக்கிறாள்" என்று நினைத்து அங்கிருந்த அன்னத்திடம் மகிழ்ச்சியாக,(1) "மாலையுடன் இருக்கும் {ஆறு பாதங்களுடன் கூடிய} வண்டுகள் பிறவற்றுடன் சேர்ந்து நானும் ஒரு வண்டின் வேடத்தில் இங்கே இருக்கிறேனெனத் தைத்தியனின் மகளிடம் சொல்வாயாக.(2) இப்போது நான் அவள் வசத்தில் இருக்கிறேன். அவள் விரும்பியவாறு என்னுடன் இருக்கலாம்" என்றான்[1]. ரதியின் கணவனான அவன் {காமனான பிரத்யும்னன்} இதைச் சொல்லிவிட்டு தன் சொந்த வடிவில் அங்கே தோன்றினான்.(3) அந்த நேரத்தில் அந்த வீடு நுண்ணறிவுமிக்க மதனனின் {மன்மதனான பிரத்யும்னனின்} மேனியொளியால் ஒளியூட்டப்பட்டிருந்தது. சந்திரனின் எழில்மிகு கதிர்கள் வெட்கமடைந்தன.(4) பர்வ நாள் ஒன்றில் {பௌர்ணமியில்} நீர்நிலைகளின் தலைவன் (பெருங்கடல்) இரவின் தலைவனுடன் (சந்திரனுடன்) எழுவதைப் போலப் பிரபாவதியின் காதல் கடல் அந்தக் காமனைக் கண்டதும் பெருகிற்று.(5)

Friday, 4 December 2020

நடிகர்களாக வஜ்ரபுரத்தை அடைந்த யாதவர்கள் | விஷ்ணு பர்வம் பகுதி – 150 – 94

(வஜ்ரநாபபுரே ப்ரத்யும்னப்ரவேஷம்)

The Yadavas arrive at the city of Asuras as actors | Vishnu-Parva-Chapter-150-094 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : நடிகர்களின் திறமைக்கேற்ற பாராட்டும், பரிசும்; பிரத்யும்னன் குறித்துப் பிரபாவதியிடம் கூறிய சுசீமுகீ; மலர்மாலையில் மறைந்து வண்டாக வந்த பிரத்யும்னன்; பிரபாவதியின் சந்திரோபாலம்பணம்...


Ramayana play in front of Vajranabha by Pradyumna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பின்னர் மன்னன் வஜ்ரநாபன் நகரங்களில் வாழும் அசுரர்களிடம், "அவர்களுக்கு {நடிகர்களுக்கு} மிகச் சிறந்த அறைகளைக் கொடுங்கள்.(1) அவர்களை விருந்தினர்களாக நடத்தி, மக்களுக்கு விருப்பமான பல்வேறு ரத்தினங்களையும், பல்வேறு ஆடைகளையும் அவர்களுக்குக் கொடுங்கள்" என்று ஆணையிட்டான்.(2)

Thursday, 3 December 2020

வஜ்ரபுரம் சென்ற தெய்வீக அன்னங்கள் | விஷ்ணு பர்வம் பகுதி – 149 – 93

(வஜ்ரநாபபுரம் ப்ரதி ப்ரத்யும்நாதீனாம் கமனம்)

The celestial swans go to the city of Vajra | Vishnu-Parva-Chapter-149-093 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : வஜ்ரநகரம் சென்ற அன்னங்கள்; சுசீமுகீ என்ற அன்னப்பறவையைத் தோழியாக அடைந்த பிரபாவதி; பிரத்யும்னன் குறித்து பிரபாவதியிடமும், பத்ரநாபன் குறித்து வஜ்ரநாபனிடமும் சொன்ன அன்னம்; துவாரகை திரும்பிய அன்னங்கள்; நடிகனாகப் பிரத்யும்னன்...


Prabhavati and Shuchimukhi

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! மன்னா, அந்த அன்னப்பறவைகள் முன்பிருந்தே வஜ்ரபுரத்திற்குச் செல்வது வழக்கம். எனவே வாசவனின் சொற்களைக் கேட்ட உடனே அங்கே அவை சென்றன.(1) ஓ! வீரா, அந்தப் பறவைகள், தீண்டதகுந்த மென்மையான தங்கத் தாமரைகளும், நீலோத்பலங்களும் நிறைந்த அழகிய தடாகங்களில் இறங்கின. அவை ஏற்கனவே அங்கே பல முறை வந்திருந்தாலும் இப்போது தங்கள் இனிய செம்மொழியால் {மதுரமான ஸம்ஸ்க்ருத அபூர்வ பாஷையில் பேசி} அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின.(2,3) ஓ! ஜனமேஜய மன்னா, அந்தத் தெய்வீக அன்னப்பறவைகள் இனிய சொற்களைப் பேசி வஜ்ரநாபனின் அந்தப்புரத் தடாகங்களில் திரிந்து அவனுக்கு மிகப் பிடித்தமானவையாகின.

Wednesday, 2 December 2020

பிரபாவதி - வஜ்ரநாபவதம் | விஷ்ணு பர்வம் பகுதி – 148 – 92

(வஜ்ரநாபவதவ்ருத்தாந்தம்)

The destruction of Vajranabha - An account of Prabhavati | Vishnu-Parva-Chapter-148-092 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : வஜ்ரநாபன் பெற்ற வரங்கள்; பத்ரநாபன் பெற்ற வரம்; பிரபாவதியிடம் அன்னப்பறவையைத் தூதனுப்பிய இந்திரன்...


Indra Speaking to Dhartarashtra Swans

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! முனிவரே, ஓ! அறவோரில் முதன்மையானவரே, பானுமதி அபகரிக்கப்பட்டதையும், கேசவனின் வெற்றிப்பேற்றையும், ஒப்பற்ற சக்தி கொண்ட விருஷ்ணிகள் கடலில் தேவர்களைப் போல விளையாடியதையும்,(1) தேவலோகத்தில் இருந்து சாலிக்யம் கொண்டு வரப்பட்டதையும், இன்னும் பல அற்புதக் காரியங்களையும் நான் கேட்டேன்.(2) நிகும்பன் அழிக்கப்பட்டதைச் சொன்னபோது வஜ்ரநாபன் குறித்து நீர் குறிப்பிட்டீர். ஓ! முனிவரே, இப்போது அதைக் கேட்க நான் ஆவலாக இருக்கிறேன்" என்றான்.(3)

பானுமதியை அபகரித்த நிகும்பன் | விஷ்ணு பர்வம் பகுதி – 147 – 091

(பானுமதீஹரணம் நிகும்பவதஷ்ச)

Nikumbha carries away Bhanumati | Vishnu-Parva-Chapter-147-091 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பிரத்யும்னன் செயலுக்குப் பழிதீர்க்க பானுமதியை அபகரித்த நிகும்பன்; நிகும்பனுடன் நடந்த கடும்போர்; நிகும்பன் வதம்; பானுமதியை சகாதேவனுக்கு மணமுடித்துக் கொடுத்தது...


Bhanumathi carried away by Nikumbha

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அறம்சார்ந்த யாதவர்கள் இவ்வாறு விளையாடிக் கொண்டிருந்தபோது, கொடியவனும், அணுகப்படமுடியாதவனும், தேவர்களின் பகைவனுமான தானவன் நிகும்பன், தன்னழிவை விரும்பி, ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்து பானுமதி என்ற பெயரைக் கொண்டவளான பானுவின்[1] அழகிய மகளை அபகரித்தான்.(1,2) ஓ! வீரா, முற்காலத்தில் அவனது சகோதரனான வஜ்ரநாபனின் மகள் பிரபாவதியைப் பிரத்யும்னன் கடத்தியிருந்தான், வஜ்ரநாபனும் கொல்லப்பட்டான். மாயைகளில் திறன்மிக்க அவன் {நிகும்பன்}, இந்தப் பழைய பகையை நினைத்து, தன்னை மறைத்துக் கொண்டு யாதவப் பெண்களைக் குழம்பச் செய்து பானுமதியை அபகரித்துச் சென்றான்.(3,4)

Sunday, 29 November 2020

சாலிக்ய காந்தர்வம் | விஷ்ணு பர்வம் பகுதி – 146 – 090

(சா²லிக்யக்ரீடா³)

The sport of Yadavas continued | Vishnu-Parva-Chapter-146-090 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : நீர் விளையாட்டுத் தொடர்ந்தது; கிருஷ்ணனும், பலராமனும் இரு தரப்பாகப் பிரிந்து விளையாடியது; அவர்களுடன் இணைந்து கொண்ட அர்ஜுனன்; சாலிக்ய காந்தர்வமெனும் தெய்வீகப் பாடல்...


Krishna and his family

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "சந்தனம் பூசிய பெருங்கரங்களைக் கொண்ட பேரழகன் பலன் {பலராமன்}, காதம்பரி மது உண்டு தன் மீதும், தன் உடல் இயக்கத்தின் மீதுமான கட்டுப்பாட்டை இழந்து கண்கள் சிவந்தவனாக ரேவதியுடன் விளையாடத் தொடங்கினான்.(1) சந்திரக்கதிர்களைப் போன்று வெண்மையான தெய்வீக ராமன், மேகத்துக்கு ஒப்பான கருவண்ண ஆடை உடுத்தி, போதையில் கண்கள் உருள மேகத்தில் ஒளிரும் முழு நிலவைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(2) அழகிய தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டவனும், இடது காதில் மட்டும் குண்டலம் கொண்டவனுமான ராமன், புன்னகைத்தபடியே சாய்வுப்பார்வையில் தன் அன்புக்குரிய துணைவியின் முகத்தை மீண்டும் மீண்டும் பார்த்து பெரும் மகிழ்ச்சியை அடைந்தான்.(3)

Saturday, 21 November 2020

கிருஷ்ணாசுரப் போர் | விஷ்ணு பர்வம் பகுதி – 141 – 085

(அநிருத்தவிக்ரம ராஜ்ஞாம் பந்தநம்)

War between Krishna and Asuras | Vishnu-Parva-Chapter-141-085 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : யாதவப் படையின் மகரவியூகம்; தானவர் நகர முற்றுகை; பிரத்யும்னன் செய்த ஏற்பாடு; ஷட்புரத்துக்குள் நுழைதல்; பிரம்மதத்தரைத் தேற்றிய பிரத்யும்னன்...

The Maya of Pradyumna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மக்களின் பார்வைக்குள் தெளிந்த சூரியன் வந்த கணத்திற்குள் பலதேவன், கிருஷ்ணன், சாத்யகி ஆகியோர் தார்க்ஷியனின் {கருடனின்} முதுகில் மகிழ்ச்சியுடன் ஏறினர்.(1) போரிடும் விருப்பம் உள்ள அந்த வீரர்கள் {மூவரும்}, உடும்புத் தோலுறைகள், கவசம், விரலுறைகள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு வில்வ இலைகளுக்கும், நீருக்கும் தலைவனான {வில்வோதகனான} சிவ தேவனை வழிபட்டனர்.(2) ஓ! குரு குலப் புலியே {ஜனமேஜயனே}, ருத்திரனிடம் வரமும், அவனது சொற்களால் கங்கையைப் போன்ற புனிதமும் பெற்ற ஆவர்த்தகையெனும் புனித ஆற்றின் நீரில் அவர்கள் நீராடினர்.(3) கௌரவங்களை அளிப்பவனும், நல்லோரின் புகலிடமுமான தலைவன் கிருஷ்ணன், அந்த நேரத்தில் படையின் முன்னணியில் பிரத்யும்னனை நிறுத்தி, பாண்டவர்களை யஜ்ஞத்திற்குப் பொறுப்பாக்கி {வேள்வியைக் காப்பதில் அவர்களை ஈடுபடுத்தி},(4) எஞ்சிய படைவீரர்களைக் குகையின் வாயிலில் நிறுத்திவிட்டு, ஜயந்தனையும், பிரவரனையும் மனத்தில் நினைத்தான்.(5) ஓ! பரதனின் வழித்தோன்றலே, {அவன் அவ்வாறு} நினைத்த உடனேயே அவர்களும் அங்கே வந்தனர். அந்தத் தலைவனால் {கிருஷ்ணனால்} மட்டுமே அவர்களைக் காண முடிந்தது, அவர்கள் பிரத்யும்னனுக்கு மேல் {ஆகாயத்தில்} நிறுத்தப்பட்டனர்.(6)

Friday, 20 November 2020

யாகத்தடை செய்த அசுரர்கள் | விஷ்ணு பர்வம் பகுதி – 140 – 084

(யஷவிஸ்தரோ துஷ்டநிக்ரஹஷ்ச)

The Asuras obstructing a Yajna | Vishnu-Parva-Chapter-140-084 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பிரம்மதத்தர் செய்த யாகம்; யாகத்தைக் காத்த வசுதேவன்; யாகக் காணிக்கையில் பங்கு கேட்ட அசுரர்கள்; பிரம்மதத்தரின் மகள்களைக் கடத்திச் சென்ற அசுரர்கள்; அசுரர்களுக்கு அலோசனை வழங்கிய நாரதர்...

Narada Muni

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அந்த நேரத்தில், ஓ மன்னா, யாஜ்ஞவல்கியரின் சீடரும், நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும் நன்கு அறிந்தவரும், அறநெறி சார்ந்தவரும்,(1) பிரம்மதத்தன் என்ற பெயரைக் கொண்டவருமான வாஜஸ்நேய பிராமணர் ஒருவர்,(2) ஷத்புர நகரத்தில் முனிவர்களால் அடையப்பட்ட ஆவர்த்தகை எனும் நல்லாற்றின் புனிதக்கரையில் ஓராண்டு காலம் நீளும் யஜ்ஞம் செய்யும் தீக்ஷை பெற்றார்[1].(3) 

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்