(புருவம்சானுகீர்த்தனம்)
An account of the Richeyu's family | Harivamsa-Parva-Chapter-32 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : துஷ்யந்தன் சகுந்தலை; பரதன் செய்த வேள்வி; பரதனின் சந்ததி; வாராணஸியின் மன்னன் திவோதாஸன்; அஜமீடன், ஜன்ஹு, குசிகன்; அஜமீடனின் வழித்தோன்றல்களான பாஞ்சாலர்கள்; சந்தனு, கிருபர், கிருபி, அஜமீடனின் வழித்தோன்றல்களான கௌரவர்கள்; குருவின் வழியில் வந்த சேதிநாட்டு உபரிசரவஸு; வஸுவின் வழியில் வந்த மகதர்கள்; பிரதீபனின் வழியில் வந்த பாஹ்லீகர்கள்; பூரு வம்சத்தில் வந்த பாண்டிய, சோழ, சேர நாட்டினர்; யயாதியின் மூன்றாம் மகனான த்ரஹ்யுவின் வழி வந்தவர்களான காந்தார நாட்டினர்; நான்காம் மகனான அனுவின் சந்ததி...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "{ரௌத்ராஸ்வனின் ஆறாவது மகனான} மன்னன் ரிசேயு வெல்லப்பட முடியாதவனாகவும், ஒப்பாரற்றவனாகவும் இருந்தான். தக்ஷகனின் மகளான ஈவலனை {ஜ்வலனை} அவனுடைய மனைவியானாள்.(1) புனிதமானவளான அந்த அரசி, புனிதப் பேரரசன் மதினாரனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு {மதினாரனுக்குப்} பெரும்பக்திமான்களான மூன்று மகன்கள் இருந்தனர்.(2) அவர்களில் முதல்வன் தங்ஸுவும் {தம்ஸுவும்}, இரண்டாமவன் பிரதிரதனும், மற்றும் இளையவன் ஸுபாஹுவும் ஆவர். அவனுக்கு {மதினாரனுக்கு} கௌரி என்ற பெயரைக் கொண்டவளும், மாந்தாதாவின் தாயுமான நன்கறியப்பட்ட மகள் ஒருத்தியும் இருந்தாள்.(3) அவர்கள் அனைவரும் வேதங்களை நன்கறிந்தவர்களாகவும், பிரம்மஞானத்தைக் கொண்டவர்களாகவும், வாய்மை நிறைந்தவர்களாகவும், ஆயுதப் பயன்பாட்டை நன்கறிந்தவர்களாகவும், பலம் நிறைந்தவர்களாகவும், போரில் திறன் நிறைந்தவர்களாகவும் இருந்தனர்.(4)
