Showing posts with label அஸ்தி. Show all posts
Showing posts with label அஸ்தி. Show all posts

Wednesday, 22 July 2020

மதுராவைத் தாக்க ஆயத்தமான ஜராசந்தன் | விஷ்ணு பர்வம் பகுதி – 89 – 034

(ஜராஸந்தேன மதுரோபரோதம்)

Jarasandha prepares to attack Madhura | Vishnu-Parva-Chapter-89-034 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் :  கம்ஸனின் மாமனாரான ஜராசந்தன் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து மதுராவை முற்றுகையிட்டது...

Jarasandha and his daughters Asti and prapti

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "கிருஷ்ணன், ரோஹிணியின் மகனுடன் {பலராமனுடன்} சேர்ந்து யாதவர்களால் நிறைந்திருக்கும் மதுரா நகரில் சில நாட்களை மகிழ்ச்சியாகக் கழித்தான்.(1) இளமை அழகுடனும், அரச செழிப்புடனும் அவனது மேனி படிப்படியாக மிளிர்ந்தது, காடுகளால் அலங்கரிக்கப்பட்ட மதுரா எங்கும் அவன் திரியத் தொடங்கினான்.(2) இவ்வகையில் சில நாட்கள் கடந்ததும், ராஜகிருஹத்தின் மன்னனான ஜராசந்தன், தன் மகள்கள் இருவரின் மூலம் கம்ஸனின் மரணத்தைக் கேள்விப்பட்டான்.(3) பலம்வாய்ந்த ஜராசந்தன் இதைக் கேட்டதும் பெரும் கோபமடைந்தான். பலம்வாய்ந்தவனான ஜராசந்தன், கம்ஸனுக்குத் தான் பட்ட கடனை அடைக்கும் வகையிலும், யதுக்கள் அனைவரையும் கொல்லும் வகையிலும், ஆறு பிரிவுகளுடன்[1] கூடிய தன் படையுடன் உடனே புறப்பட்டான்.(4,5)

Friday, 17 July 2020

கம்ஸனுடைய மனைவியரின் புலம்பல் | விஷ்ணு பர்வம் பகுதி – 86 – 031

(கம்ஸயோஷிதாம் விலாபம்)

Lamentations of Kansa's wives | Vishnu-Parva-Chapter-86-031 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் :  கம்ஸனின் மனைவியரான அஸ்தியும், பிராப்தியும், அன்னையான பத்மாவதியும் அழுது புலம்பியது...

Krishna and Kamsa

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "கம்ஸனின் மனைவியர்[1], கொல்லப்பட்டவனாக ஒளிமங்கும் கோள்களைப் போல வீழ்ந்து கிடக்கும் தங்கள் கணவனைச் சூழ்ந்து கொண்டனர்.(1) அவனது மனைவியர், சிங்கம்போன்ற தங்கள் அரசக் கணவன் கொல்லப்பட்டுப் பூமியில் கிடப்பதைக் கண்டு அழுது புலம்பத் தொடங்கினர்.(2) {அவர்கள்} "ஓ! நீண்ட கரங்களைக் கொண்டவரே, வீர நோன்புகளை எப்போதும் நோற்கும் உம்மைப் போன்ற வீரனின் மனைவியான நாங்கள் அனைவரும், நீர் கொல்லப்பட்டதால் நண்பர்கள் அற்றவர்களாகவும், நம்பிக்கைகள் சிதைக்கப்பட்டவர்களாகவும் ஆனோம்.(3) ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, உமக்கு விதிக்கப்பட்ட இந்த மரணத்தைக் கண்டு நாங்கள் நம் உறவினர்களோடு சேர்ந்து அவலநிலையில் அழுது புலம்புகிறோம்.(4) ஓ! பெரும்பலம்வாய்ந்த தலைவா, நீர் மரணமடைந்ததால் உம்மால் கைவிடப்பட்ட நாங்கள் வேரறுந்தவராக இருக்கிறோம்.(5) ஐயோ, கலவியாசையால் பீடிக்கப்பட்டுக் கோபத்தில் கொடிகளைப் போல நடுங்கும் எங்களை இனி படுக்கையறைக்கு அழைத்துச் செல்லப்போவது யார்?[2](6)

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்