(கம்ஸவதம்)
Trial of arms | Vishnu-Parva-Chapter-85-030 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : மற்போரில் சாணூரனையும், முஷ்டிகனையும் வீழ்த்திய கிருஷ்ணன்; கம்ஸனைக் கொன்றது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வைசம்பாயனர், "தாமரைக் கண்ணனும், தேவகியின் மகனுமான கிருஷ்ணன் தன் தோள்களைத் தட்டும் ஒலியால் பூமியை நடுங்கச் செய்தபடியே தன் அண்ணனுடன் {பலராமனுடன்} சேர்ந்து அரங்கத்திற்குள் நுழைந்தான். அவனது ஆடை காற்றில் அசைந்து கொண்டிருந்தது,(1) அவனது உடல் யானையின் தந்தங்களால் காயமடைந்திருந்தது, அவனது அங்கங்கள் மதநீராலும், குருதியாலும் மறைக்கப்பட்டிருந்தன;(2) சிங்கத்தைப் போல் பாய்ந்த அவன் கம்ஸனுக்கு அழிவைக்கொண்டு வரும் மேகத்தைப் போல அங்கே விரைவாக நுழைந்தான். யானைத் தந்தங்களால் அலங்கரிக்கப்பட்ட கைகளுடன் இருந்த அவன் குறைகளைக் காண்பதில் மிகக் கவனமாக இருந்தான். இவ்வாறு அவர்கள் பெருஞ்சக்தியுடன் நுழைவதைக் கண்ட உக்ரஸேனனின் மகன் {கம்ஸன்} முகம் ஒளியிழந்தவனாகக் கோபத்துடன் அவர்களைப் பார்த்தான்.(3,4)

