(கம்ஸஸ்ய ஜன்மாதிவ்ருத்தம்)
Arrangements for the match | Vishnu-Parva-Chapter-83-028 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கம்ஸனின் வண்ணானைக் கொன்ற கிருஷ்ணன்; பூமாலை கட்டும் குணகன்; திரிவிக்ரையின் கூன் நிமிர்த்திய கிருஷ்ணன்; வில் ஒடித்த கிருஷ்ணன்; செய்தியை அறிந்த கம்ஸன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "போஜ குலத்தைச் சேரந்தவனான கம்ஸன், வில் முறிக்கப்பட்ட இந்நிகழ்வைக் குறித்துத் தியானித்துப் பெருந்துன்பத்தால் பீடிக்கப்பட்டவனாகவும், மனமுடைந்தவனாகவும் இருந்தான்.(1) அவன், "மனிதர்களால் பாதுகாக்கப்படும் இரும்பாலான வில்லை முறிக்கவும், {அரங்கைவிட்டு} வெளியேறவும் ஒரு சிறுவனால் எவ்வாறு இயலும்?(2) நாரதர் முன்னறிவித்தபடியே, தேவகியின் ஆறு வீர மகன்களை அழிக்கும் பெரும் நிந்தனைக்குரிய, பயங்கரமான செயலை அச்சத்தின் காரணமாக நான் செய்ததன் விளைவால் உண்டான விதியை இப்போது ஆண்மையினால் எவனாலும் தாக்குப்பிடிக்க முடியாது" என்று நினைத்தான்.(3,4)
