(துந்துவதம்)
Account of Raivata and his sons - Elimination of demon Dundhu | Harivamsa-Parva-Chapter-11 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : சிராவஸ்தி என்ற நகரை நிர்மாணித்த சிராவன்; பிருஹதாஷ்வன் கானகம் புக விரும்பியது; உதங்கர் தடுத்தது; பிருஹதாஷ்வனின் மகன் குவலாஷ்வன்; துந்துவைக் கொன்ற குவலாஷ்வன்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, ரேவதியும், குகுத்மியான ரைவதனும்[1] பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தாலும் ஏன் முதுமையை அடையாமல் இருந்தனர்.(1) மேரு மலைக்குச் சென்ற பிறகும் கூட ஸர்யாதியின் பேரன் இந்த உலகில் இன்னும் வாழ்வது ஏன்? இவையனைத்தையும் நான் உண்மையாகவே கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான்.(2)
