Showing posts with label பிரபாவதி. Show all posts
Showing posts with label பிரபாவதி. Show all posts

Friday, 18 December 2020

தேவலோகத்தை வெல்ல விரும்பிய வஜ்ரநாபன் | விஷ்ணு பர்வம் பகுதி – 153 – 97

(பிரத்யும்னதைத்யயுத்தம்)

Vajranabha wants to conquer the celestial region | Vishnu-Parva-Chapter-153-097 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : வஜ்ரநாபனை அறிவுறுத்திய கசியபர்; வஜ்ரநாபன் தன் மகள்களின் பிள்ளைகளைக் கொல்லச் சொன்னது; பிரத்யும்னன், கதன், சாம்பன் ஆகியோர் அசுரர்களை அழித்தது...


Pradyumna and Ananta against Asuras

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஒப்பற்றவரான கசியபரின் வேள்வி {ஸத்ரயாகம்} நிறைவடைந்ததும், தேவர்களும், அசுரர்களும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(1) மூவுலகங்களை வெல்ல விரும்பிய வஜ்ரநாபன், அந்த வேள்வியின் முடிவில் கசியபரிடம் சென்றான். அவர் அவனிடம்,(2) "ஓ! வஜ்ரநாபா, கேட்பதற்குத் தகுந்தவையாக என் சொற்களை நீ நினைத்தால் நான் சொல்வதைக் கேட்பாயாக. {மகனே, மக்களால் சூழப்பட்டவனாக வஜ்ரபுரத்தில் வசிப்பாயாக}.(3) உங்கள் அனைவரிலும் சக்ரன் {இந்திரன்} மூத்தவனும், திறன்களில் முதன்மையானவனும் ஆவான்; அவன் பெருந்தவச் சக்திகளுடன் கூடியவனாகவும், இயல்பிலேயே பலவானாகவும், பிராமணர்களிடம் அர்ப்பணிப்புமிக்கவனாகவும்,(4) நன்றி நிறைந்தவனாகவும், மொத்த உலகின் மன்னனாகவும், நல்லோருக்கும், அறவோருக்கும் புகலிடமாகவும் திகழ்கிறான். {மூவுலகங்களின் மன்னனான அவனே அனைத்து உயிரினங்களின் நன்மையில் எப்போதும் முனைப்புடன் இருக்கிறான்}.(5) ஓ! வஜ்ரநாபா, உன்னால் அவனை {இந்திரனை} வெல்ல முடியாது, {இம்முயற்சியில்} நீயே கொல்லப்படுவாய். பாம்பின் கோபத்தைத் தூண்டியவன் தானே {பாம்பை மிதித்தவன்} அழிவடைவதைப் போல நீயும் உடனே அழிக்கப்படுவாய்" என்றார் {கசியபர்}.(6)

Thursday, 17 December 2020

பிரத்யும்னன் பேச்சு | விஷ்ணு பர்வம் பகுதி – 152 – 96

(பிரத்யும்னபாஷணம்)

A description of the rainy season | Vishnu-Parva-Chapter-152-096 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : மழைக்காலம்; கிருஷ்ணனின் சந்திரவம்ச அவதாரம்; பிரபாவதியின் பெருமை சொன்ன பிரத்யும்னன்...


Pradyumna and Prabhavati

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "முழுநிலவைப் போன்ற முகத்தைக் கொண்ட காமன் {பிரத்யும்னன்}, மழைக்காலத்தில் மேகங்களால் நிறைந்த வானைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அழகிய கண்களைக் கொண்ட பிரபாவதியிடம்,(1) "ஓ! அழகிய பெண்ணே, கூந்தலில் மறைந்திருக்கும் உன் முகத்தைப் போலவே அழகிய கதிர்களைக் கொண்ட சந்திரன் மேகங்களால் மறைக்கப்பட்டிருப்பதைப் பார்.(2) ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, உன்னுடைய அழகிய பொன்னாபரணத்தைப் போலவே மேகங்களில் இருக்கும் மின்னல் அழகாகத் தெரிவதைப் பார். ஓ! அழகிய அங்கங்களைக் கொண்டவளே, மழைத்தாரைகளைப் பொழிந்து முழங்கும் மேகங்கள் உன்னுடைய ஆரங்களை {முத்துமாலைகளைப்} போல இருக்கின்றன.(3) நீர்த்துளிகளில் நுழையும் கொக்குகள் உன் பல்வரிசையைப் போல ஒளிர்கின்றன. ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, தாமரைகள் மூழ்கியிருப்பதால் ஓடைகள் நிறைந்த தடாகங்கள் அழகாகத் தெரியவில்லை.(4) கொக்குகளால் அலங்கரிக்கப்பட்டுத் தூய்மையான அழகிய பற்களைப் போலத் தெரியும் மேகங்கள், காட்டில் ஒன்றோடொன்று மோத இருக்கும் பெருந்தந்தங்களுடைய யானைகளைப் போலத் தெரிகின்றன.(5)

Wednesday, 9 December 2020

பிரத்யும்னன் பிரபாவதி திருமணம் | விஷ்ணு பர்வம் பகுதி – 151 – 95

(பிரபாவதீபாணிக்ரஹணம்)

Pradyumna appears before Prabhavati and marries her | Vishnu-Parva-Chapter-150-095 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பிரபாவதியை காந்தர்வ மணம்புரிந்த பிரத்யும்னன்; வஜ்ரநாபனின் தம்பி சுநாபனின் மகள்களான சந்திரவதி கதனையும், குணவதி சாம்பனையும் மணந்தது...


Pradyumna weds Prabhavati in Gandharva form of marriage

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அதன்பிறகு, கிருஷ்ணனின் மகனான பிரத்யும்னன், "இந்தக் கன்னிகை முற்றிலும் என்னால் பீடிக்கப்பட்டிருக்கிறாள்" என்று நினைத்து அங்கிருந்த அன்னத்திடம் மகிழ்ச்சியாக,(1) "மாலையுடன் இருக்கும் {ஆறு பாதங்களுடன் கூடிய} வண்டுகள் பிறவற்றுடன் சேர்ந்து நானும் ஒரு வண்டின் வேடத்தில் இங்கே இருக்கிறேனெனத் தைத்தியனின் மகளிடம் சொல்வாயாக.(2) இப்போது நான் அவள் வசத்தில் இருக்கிறேன். அவள் விரும்பியவாறு என்னுடன் இருக்கலாம்" என்றான்[1]. ரதியின் கணவனான அவன் {காமனான பிரத்யும்னன்} இதைச் சொல்லிவிட்டு தன் சொந்த வடிவில் அங்கே தோன்றினான்.(3) அந்த நேரத்தில் அந்த வீடு நுண்ணறிவுமிக்க மதனனின் {மன்மதனான பிரத்யும்னனின்} மேனியொளியால் ஒளியூட்டப்பட்டிருந்தது. சந்திரனின் எழில்மிகு கதிர்கள் வெட்கமடைந்தன.(4) பர்வ நாள் ஒன்றில் {பௌர்ணமியில்} நீர்நிலைகளின் தலைவன் (பெருங்கடல்) இரவின் தலைவனுடன் (சந்திரனுடன்) எழுவதைப் போலப் பிரபாவதியின் காதல் கடல் அந்தக் காமனைக் கண்டதும் பெருகிற்று.(5)

Friday, 4 December 2020

நடிகர்களாக வஜ்ரபுரத்தை அடைந்த யாதவர்கள் | விஷ்ணு பர்வம் பகுதி – 150 – 94

(வஜ்ரநாபபுரே ப்ரத்யும்னப்ரவேஷம்)

The Yadavas arrive at the city of Asuras as actors | Vishnu-Parva-Chapter-150-094 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : நடிகர்களின் திறமைக்கேற்ற பாராட்டும், பரிசும்; பிரத்யும்னன் குறித்துப் பிரபாவதியிடம் கூறிய சுசீமுகீ; மலர்மாலையில் மறைந்து வண்டாக வந்த பிரத்யும்னன்; பிரபாவதியின் சந்திரோபாலம்பணம்...


Ramayana play in front of Vajranabha by Pradyumna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பின்னர் மன்னன் வஜ்ரநாபன் நகரங்களில் வாழும் அசுரர்களிடம், "அவர்களுக்கு {நடிகர்களுக்கு} மிகச் சிறந்த அறைகளைக் கொடுங்கள்.(1) அவர்களை விருந்தினர்களாக நடத்தி, மக்களுக்கு விருப்பமான பல்வேறு ரத்தினங்களையும், பல்வேறு ஆடைகளையும் அவர்களுக்குக் கொடுங்கள்" என்று ஆணையிட்டான்.(2)

Thursday, 3 December 2020

வஜ்ரபுரம் சென்ற தெய்வீக அன்னங்கள் | விஷ்ணு பர்வம் பகுதி – 149 – 93

(வஜ்ரநாபபுரம் ப்ரதி ப்ரத்யும்நாதீனாம் கமனம்)

The celestial swans go to the city of Vajra | Vishnu-Parva-Chapter-149-093 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : வஜ்ரநகரம் சென்ற அன்னங்கள்; சுசீமுகீ என்ற அன்னப்பறவையைத் தோழியாக அடைந்த பிரபாவதி; பிரத்யும்னன் குறித்து பிரபாவதியிடமும், பத்ரநாபன் குறித்து வஜ்ரநாபனிடமும் சொன்ன அன்னம்; துவாரகை திரும்பிய அன்னங்கள்; நடிகனாகப் பிரத்யும்னன்...


Prabhavati and Shuchimukhi

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! மன்னா, அந்த அன்னப்பறவைகள் முன்பிருந்தே வஜ்ரபுரத்திற்குச் செல்வது வழக்கம். எனவே வாசவனின் சொற்களைக் கேட்ட உடனே அங்கே அவை சென்றன.(1) ஓ! வீரா, அந்தப் பறவைகள், தீண்டதகுந்த மென்மையான தங்கத் தாமரைகளும், நீலோத்பலங்களும் நிறைந்த அழகிய தடாகங்களில் இறங்கின. அவை ஏற்கனவே அங்கே பல முறை வந்திருந்தாலும் இப்போது தங்கள் இனிய செம்மொழியால் {மதுரமான ஸம்ஸ்க்ருத அபூர்வ பாஷையில் பேசி} அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின.(2,3) ஓ! ஜனமேஜய மன்னா, அந்தத் தெய்வீக அன்னப்பறவைகள் இனிய சொற்களைப் பேசி வஜ்ரநாபனின் அந்தப்புரத் தடாகங்களில் திரிந்து அவனுக்கு மிகப் பிடித்தமானவையாகின.

Wednesday, 2 December 2020

பிரபாவதி - வஜ்ரநாபவதம் | விஷ்ணு பர்வம் பகுதி – 148 – 92

(வஜ்ரநாபவதவ்ருத்தாந்தம்)

The destruction of Vajranabha - An account of Prabhavati | Vishnu-Parva-Chapter-148-092 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : வஜ்ரநாபன் பெற்ற வரங்கள்; பத்ரநாபன் பெற்ற வரம்; பிரபாவதியிடம் அன்னப்பறவையைத் தூதனுப்பிய இந்திரன்...


Indra Speaking to Dhartarashtra Swans

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! முனிவரே, ஓ! அறவோரில் முதன்மையானவரே, பானுமதி அபகரிக்கப்பட்டதையும், கேசவனின் வெற்றிப்பேற்றையும், ஒப்பற்ற சக்தி கொண்ட விருஷ்ணிகள் கடலில் தேவர்களைப் போல விளையாடியதையும்,(1) தேவலோகத்தில் இருந்து சாலிக்யம் கொண்டு வரப்பட்டதையும், இன்னும் பல அற்புதக் காரியங்களையும் நான் கேட்டேன்.(2) நிகும்பன் அழிக்கப்பட்டதைச் சொன்னபோது வஜ்ரநாபன் குறித்து நீர் குறிப்பிட்டீர். ஓ! முனிவரே, இப்போது அதைக் கேட்க நான் ஆவலாக இருக்கிறேன்" என்றான்.(3)

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்