Showing posts with label பலராமன். Show all posts
Showing posts with label பலராமன். Show all posts

Monday, 28 February 2022

நந்தனும் யசோதையும் | பவிஷ்ய பர்வம் பகுதி – 105

(நந்தயஷோதயோர்கோவர்தநே ஷ்ரீக்ருஷ்ணதர்ஷநம்)

Nanda and Yashoda | Bhavishya-Parva-Chapter-105 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்:  நந்தகோபரும், யசோதையும், ஆயர்பாடி மக்களும் கோவர்த்தன மலையில் கிருஷ்ணனையும், பலராமனையும் சந்தித்தது...


Balarama Nanda Krishna Yashoda

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "யசோதையும், நந்தகோபனும் நீண்ட நாட்களாகக் கிருஷ்ணனைக் காண விரும்பினர். எனவே, அவன் தன் தமையனுடன் {பலராமனுடன்} கோவர்த்தன மலைக்கு வந்திருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டதும் அவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். கோபர்கள், கோபிகைகள் ஆகியோர் அனைவரையும் திரட்டிக் கொண்டும், வெண்ணெய், தயிர், சுண்டவைக்கப்பட்ட பால், பாயஸம், காட்டு மலர்கள், மயில் இறகுகளாலான கைவளைகள் ஆகியவற்றையும், இன்னும் பிற பரிசுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டும் அவர்கள் கோவர்த்தன மலைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.(1-3)

டிம்பகன் ஆத்ம தியாகம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 104

(டிம்பகஸ்யாத்மத்யாகம்)

Dimbhaka Commits Suicide | Bhavishya-Parva-Chapter-104 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்:  அண்ணனின் பிரிவு தாளாமல் தன் நாவைப் பிடுங்கி உயிர்த்தியாகம் செய்த டிம்பகன்...


Drowning under water

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "டிம்பகன், பெருஞ்சக்திவாய்ந்த தன் அண்ணன் ஹம்சன் பெரும்போரில் கொல்லப்பட்டான் என்பதைக் கேட்டதும், பலராமனுடன் போர் புரிவதை நிறுத்திவிட்டு யமுனையின் கரைக்குச் சென்றான். கலப்பைதாரியான பலராமன் வேகமாக ஓடி அவனை விரட்டிச் சென்றான்.(1,2) மன்னா {ஜனமேஜயா}, ஹம்சன் குதித்த அதே இடத்தில் டிம்பகனும் யமுனையின் நீரில் குதித்தான். அதன் விளைவாக யமுனையின் நீர் கலங்கியது.(3)

Sunday, 27 February 2022

ஹிடிம்பன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 101

(ஹிடிம்பேந ஸாகம் வஸுதேவோக்ரஸேநயோர்யுத்தம் பலபத்ரேண ஹிடிம்பபராபவஷ்ச)

Hidimba | Bhavishya-Parva-Chapter-101 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: ஹிடிம்பனுடன் போரிட்ட வசுதேவரும், உக்ரசேனனும்; ஹிடிம்பனை வீழ்த்திய பலராமன்...


Balarama and hidimba

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வசுதேவரும், உக்ரசேனனும் நரைமுடியும், சுருங்கிய தோலும் கொண்ட கிழவர்களாக இருந்தாலும், அவர்களும் மகிழ்ச்சியாக அந்தப் போரில் ஈடுபட்டனர்.(1) ஞானத்திலும், அதன் நடைமுறை பயன்பாட்டிலும் முன்னேற்றம் அடைந்தவர்களான அவர்கள் இருவரும், அரச வகையின் கடமைகளை முழுமையாக அறிந்திருந்தனர். ராக்ஷசனான அந்தத் துராத்மாவிற்கு {ஹிடிம்பனுக்கு} எதிரான போரில் அவர்கள் இருவரும் ஒன்றுகூடிப் போரிட்டனர்.(2) ராக்ஷசேந்திரனும், துராத்மாவுமான ஹிடிம்பன் மீது ஆயிரக்கணக்கான கணைகளை ஏவி அவனை அவர்கள் துன்புறுத்தினர்.(3)

Saturday, 26 February 2022

டிம்பகன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 100

(ஸாத்யகிடிம்பகயோர்யுத்தம்)

Dimbhaka | Bhavishya-Parva-Chapter-100 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: சாத்யகிக்கும் டிம்பகனுக்கும் இடையில் நடந்த போர்; டிம்பகனின் மகிமை...


Dimbhaka

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அதே நேரத்தில் நிகரான சக்தி படைத்தவர்களும், கொண்டாடப்பட்ட க்ஷத்திரியர்களுமான டிம்பகனும், சாத்யகியும் கடும்போர் செய்து கொண்டிருந்தனர்.(1) அவ்விருவரும், முதன்மையான குருக்களிடம் போர்க்கலையினைக் கற்றுக் தேர்ச்சியடைந்தவர்கள் என்பதால், பெருஞ்சீற்றத்துடனும் திறனுடனும் போரிட்டனர். அவ்விருவரும் போரிட்டுக் கொண்டிருந்தபோது சாத்யகி, டிம்பகனின் மார்பு, முகம், வயிறு ஆகியவற்றை நோக்கிப் பத்துக் கணைகளை ஏவினான். பெரும்பலத்தில் பெருஞ்செருக்கு கொண்டிருந்தவனும், க்ஷத்திரியர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுபவனுமான டிம்பகனும் அடுத்தடுத்து சாத்யகியின் மீது ஐயாயிரம் கணைகளை ஏவினான். எனினும், அந்தப் பெரும் விருஷ்ணி வீரன் {சாத்யகி}, உரக்க முழங்கியபடியே அந்தக் கணை மழையை அழித்தான்.(2-4)

பலபத்ரன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 99

(ஹம்ஸபலபத்ரயோர்யுத்தம்)

Balabadhra | Bhavishya-Parva-Chapter-99 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: பலராமனுக்கும் ஹம்சனுக்கும் இடையில் நடந்த போர்...


Balarama and Krishna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அதன்பிறகு, வில்லாளிகளில் முதன்மையானவனும், தர்மாத்மாவுமான பலதேவன் {பலராமன்}, பத்துக் கணைகளை ஹம்சன் மீது ஏவினான்.(1) ஹம்சன், அவன் மீது ஐந்து கணைகளை ஏவி பதிலடி கொடுத்தாலும், கலப்பைதாரியான பலராமன், தன்னை நோக்கி வரும் கணைகளை மேலும் பத்துக் கணைகளால் தவிடுபொடியாக்கினான். பிறகு அவன் ஹம்சனின் நெற்றியில் ஒரு கணையால் பலமாகத் தாக்கினான்.(2) அந்தக் கணையானது, ஹம்சனை சுயநனவற்றவனாக்கித் தேரில் அமரச் செய்தது. சுயநனவு மீண்ட ஹம்சன், ஒரு கணையோடையை ஏவி, பலராமனுக்கு ஆழமான காயங்களை ஏற்படுத்தி, வானத்தில் பார்வையாளர்களாக நின்றிருந்த தேவர்களை வியப்படையச் செய்தான். அவன் {ஹம்சன்} இந்த அருஞ்செயலைச் செய்துவிட்டுச் சிங்கமுழக்கம் செய்தான்.(3,4)

Monday, 17 January 2022

ஓடி ஒளிந்த ஏகலவ்யன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 77

(ஏகலவ்யநிர்யாணம்)

Ekalavya disappear | Bhavishya-Parva-Chapter-77 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: பலராமனிடம் தாக்குப்பிடிக்க முடியாமல் கடல் தாண்டி தனித்தீவில் ஓடி ஒளிந்த ஏகலவ்யன்; யாதவர்களின் சபையில் உரையாற்றிய கிருஷ்ணன்...


Krishna after killing Paundraka in his palace

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    "அதே வேளையில் போர்க்களத்தில் பலசாலிகளில் சிறந்த பலராமன், ஏகலவ்யனின் மார்பைத் தாக்கி சிங்கம்போலக் கர்ஜித்தான்.(1) அதற்குப் பதிலடியாக ஏகலவ்யனும், பலத்தின் செருக்கில் வெறிக் கொண்டிருந்த வலிமைமிக்கப் பலராமனின் மார்பைத் தன் கதாயுதத்தால் தாக்கினான்.(2) ஏகலவ்யனின் கதாயுதத்தால் தாக்கப்பட்ட விருஷ்ணி குல பலராமன், அலட்சியமாகத் தன் இரு கைகளாலும் அதைப் பற்றி, அந்த நிஷாத மன்னன் {ஏகலவ்யன்} வெற்றியில் நம்பிக்கை அனைத்தையும் இழந்து, சீற்றமிக்கக் கடுஞ்சுறாக்களின் வசிப்பிடமான பெருங்கடலின் கரைக்குத் தப்பியோடும் வகையில் அவனைப் பலமாகத் தாக்கினான்.(3,4)

Friday, 14 January 2022

துவாரகை திரும்பிய கிருஷ்ணன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 75

(துவாரகாயாம் ப்ரத்யாகதஸ்ய ஸ்ரீகிருஷ்ணஸ்ய பௌண்ட்ரகேண ஸஹ யுத்தம்)

Krishna returns to Dwaraka | Bhavishya-Parva-Chapter-75 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: பதரிகாசிரமத்தில் இருந்து துவாரகைக்குத் திரும்பி வந்த கிருஷ்ணன்; பௌண்டரகனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த விவாதம்...


Krishna on Garuda

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    "அந்த நாள் தொடங்கியதும் தேவகியின் மகனான பகவான் ஜகந்நாதன், பதரிகாசிரமத்தில் இருந்து துவாரகை திரும்பத் தீர்மானித்தான்.(1) மன்னா {ஜனமேஜயா}, முதலில் அவன் அங்கு வசித்திருந்த முனிவர்கள் அனைவரையும் வணங்கி விடை பெற்றுக் கொண்டு அதன் பிறகு கருடன் மீதேறி துவாரகைக்குப் புறப்பட்டான்.(2) மனிதர்களின் மன்னா, கிருஷ்ணன் துவாரகாபுரியை நெருங்கியபோது, அங்கே நடந்து கொண்டிருக்கும் போரினால் ஏற்படும் பெருங்கலவரத்தின் ஒலியைக் கேட்டான்.(3)

அதைக் கேட்ட கிருஷ்ணன், "இஃதென்ன கலவரம்? போர் ஏதும் நடக்கிறதா? என் அண்ணன் பலராமனின் குரலையும், சாத்யகியின் குரலையும் என்னால் கேட்க முடிகிறது.(4) பௌண்டரகன் துவாரகையைத் தாக்கியிருக்கக் கூடும். தீய மனம் கொண்ட அந்த மன்னனுடன் யாதவர்கள் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். போர் நடப்பதே இந்தக் கலவரத்திற்கான காரணம் என்பது திண்ணம்" என்று நினைத்தான்.(5,6)

Thursday, 13 January 2022

நால்வரின் கதாயுதப்போர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 74

(பௌண்ட்ரகயுத்தம்)

Four heroes fight with clubs | Bhavishya-Parva-Chapter-74 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: ஏகலவ்யனுக்கும், பலராமனுக்கும் இடையிலும், பௌண்டரகனுக்கும், சாத்யகிக்கும் இடையிலும் நடந்த கதாயுதப் போர்...


Battle with clubs between Satyaki and Paundraka

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    "அந்த இரவில் ஊனுண்ணும் பல வகை உயிரினங்கள் போர்க்களத்திற்கு வந்து பயங்கரமாகச் சிரித்தபடியே கொல்லப்பட்ட போர்வீரர்களின் சடலங்களை உண்டன.(1) பச்சை மாமிசம் உண்பவர்களும், சடலங்களில் இருந்து குருதியைப் பருகுபவர்களுமான பிசாசங்களும், ராட்சசர்களும் அங்கிருந்தனர்.(2) மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, காக்கைகள், பருந்துகள், கழுகுகள், வல்லூறுகள், நரிகள் உள்ளிட்ட ஊனுண்ணும் பலவகைப் பறவைகளும், விலங்குகளும் கூட அந்தப் போர்க்களத்திற்கு வந்து, கொல்லப்பட்ட போர்வீரர்களையும், தேரோட்டிகளையும் உண்டு மகிழ்ந்தன. அந்தப் பெரும் விழாவில் அவை பிசாசங்களுடனும், ராட்சசர்களுடனும் சேர்ந்து மெய்மறந்து கூத்தாடின.

Wednesday, 12 January 2022

ஏகலவ்யனின் படை | பவிஷ்ய பர்வம் பகுதி – 73

(ஏலலவ்யஸைந்யவதம்)

The troops of Ekalavya | Bhavishya-Parva-Chapter-73 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: ஏகலவ்யனுக்கும் பலராமனுக்கும் இடையில் நடந்த போர்; பலராமனால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான நிஷாதர்கள்...


Balarama

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    "அதேவேளையில் வேடர்களின் மன்னனான {நிஷாதிபதியான} ஏகலவ்யன், தன் வில்லையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு கோபத்துடன் பலபத்ரனை {பலராமனை} எதிர்த்து வந்தான்.(1) அவன் பத்துக் கணைகளால் பலராமனைத் தாக்கிவிட்டு, க்ஷத்திரியர்கள் பிறர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மேலும் பத்துக் கணைகளால் அவனது வில்லையும் முறித்தான்.(2) அதற்குப் பதிலடியாக அந்த ஜகத்பதி {பலராமன்} ஏவிய பத்துக் கணைகள், ஏகலவ்யனின் தேரோட்டியைக் காயப்படுத்தியது. அடுத்ததாக அவன் ஏவிய முப்பது கணைகள் அந்தத் தேரின் பெரும்பகுதியை நொறுக்கியது.(3)

Wednesday, 13 October 2021

துவாரகையைப் பாதுகாப்பீர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 50

(துவாரவதீரக்ஷணே யாதவான் ப்ரதி ஸ்ரீக்ருஷ்ணஸ்ய வசநம்)

Krishna addresses Yadavas to protect Dvaravati | Bhavishya-Parva-Chapter-50 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : சாத்யகி, உத்தவர், பலராமன் ஆகியோரிடம் துவாரகாபுரியின் பாதுகாப்பை ஒப்படைத்த கிருஷ்ணன்...

Udhhava and Krishna

ஸ்ரீ பகவான் {கிருஷ்ணன்} சொன்னான்: "ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே, என் அன்புக்குரிய சாத்யகி, நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பாயாக. கவசத்துடனும், கதாயுதம், வில் மற்றும் கணைகளுடனும் நகரைப் பாதுகாப்பதை உன் தனிப்பொறுப்பாகக் கொள்வாயாக.(1) ஓ! யது வம்சத்தின் பலம்வாய்ந்த வீரா, இஃது எண்ணற்ற க்ஷத்திரியர்களின் வசிப்பிடமாகும். நீ அவர்களின் தலைவன் என்பதால் இரவில் உறக்கத்தையும் கைவிட்டு இந்நகரைப் பாதுகாக்க வேண்டியது உன் கடமையாகும்.(2) இப்போதைக்கு சாத்திரங்களைக் கற்பதிலும், அவற்றின் பொருளை விளக்குவதிலும் இருந்து விலகுவாயாக. சாத்திரங்களின் அடிப்படையில் உன் நண்பர்களுடன் வாதம் செய்வதை இப்போதைக்குக் கைவிடுவாயாக.(3) நீ பலமிக்கவன், திறன்மிக்கப் போர்வீரன், ஞானமுடையவன், தனுர்வேத விற்பன்னன். இந்நகரத்தின் புகழ் கெடாமல் இருக்க உன்னால் ஆனதில் சிறந்ததைச் செய்வாயாக" {என்றான் கிருஷ்ணன்}.(4)

Wednesday, 3 March 2021

ருத்ராக்னிளுடன் போரிட்ட கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 179 – 123

(யுத்தேயக்னிகணாபயானம் ஜ்வரோத்பத்திஸ்தேன க்ருஷ்ணஸ்ய யுத்தம் ச)

Krishna goes to Sonitpura and fights with Rudra's followers on the way | Vishnu-Parva-Chapter-179-123 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பாணபுரி அக்னிகளுடனும், பெரும் முனிவர் அங்கீரசுடனும் போரிட்ட கிருஷ்ணன்...


Krishna and Pradyumna against Shiva

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "சங்குகள், பேரிகைகளின் {தூரியங்களின்} முழக்கம், சூதர்கள், மாகதர்கள், வந்திகளின் ஆயிரக்கணக்கான பாடல்கள்,(1) வெற்றியை அறிவிக்கும் மனிதர்களின் வாழ்த்தொலிகள் ஆகியவை ஒலித்தபோது ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, சந்திரனையும், சூரியனையும், சுக்ரனையும் போலத் தோன்றினான்.(2) ஓ! மன்னா, வினதையின் மகன் {கருடன்} வானத்தில் உயர்ந்தபோது, ஹரியின் சக்தியால் அவனுடைய அழகு பெருகி அபரிமிதமானது.(3) தாமரைக் கண்ணனான கேசவன், பாணனைக் கொல்ல விரும்பி எட்டுக் கரங்களைக் கொண்டதும், மலைக்கு ஒப்பானதுமான ஒரு வடிவத்தை ஏற்றான். அந்த நேரத்தில் சாரங்கபாணியான ஜனார்த்தனன், எண்ணற்ற தலைகளைக் கொண்டவனானான்.(4) அவன், வலக்கைகள் நான்கில் வாள், சக்கரம், கதாயுதம், கணைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தான், இடக்கைகள் நான்கில் தோல் கேடயம், சாரங்கவில், வஜ்ரம், சங்கு ஆகியவற்றைக் கொண்டிருந்தான்.(5) {சாரங்கபாணி ஆயிரம் தலைகளைக் கொண்டிருந்தான்}. சங்கர்ஷணன், ஆயிரம் வடிவங்களை ஏற்று,(6) வெண்மையான ஆயுதங்களை ஏந்தி, சிகரங்களுடன் கூடிய கைலாச மலையைப் போல உயிரினங்கள் அனைத்தினாலும் தடுக்கப்பட முடியாதவனாக உதயச் சந்திரனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(7) உயரான்மப் பிரத்யும்னன், போரில் தன் ஆற்றலை வெளிப்படுத்தும் நோக்கில், சனத்குமாரனைப் போன்ற தோற்றத்தை ஏற்றான்.(8) அதன்பிறகு, பெருஞ்சக்திவாய்ந்த வினதையின் மகன் {கருடன்}, வலுவாகச் சிறகடித்து எண்ணற்ற மலைகளை நடுங்கச் செய்தபடியும், காற்றின் பாதையைத் தடுத்தபடியும் பறந்து சென்றான்.(9) மனோ வேகத்துடன் கூடிய அவன் சித்தர்கள், சாரணர்கள் ஆகியோரின் புனிதமிக்கப் பாதையைக் கடந்து சென்றான்.(10)

Monday, 25 January 2021

ஆஹ்நிகத் துதி | விஷ்ணு பர்வம் பகுதி – 166 – 110

(பலதேவாஹ்நிகம்)

Baladeva's mantra for protecting Pradyumna | Vishnu-Parva-Chapter-166-110 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பிரத்யும்னனின் பாதுகாப்புக்காக பலராமனால் சொல்லப்பட்ட துதி; நீண்ட வாழ்நாள், செல்வம், வெற்றி ஆகியவற்றைக் கொடுக்கும் ஆஹ்நிக ஸ்தோத்திரம்...


Balarama

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! வெற்றியாளர்களில் முதன்மையானவனே, பிரத்யும்னன் சம்பரனைக் கொன்றுவிட்டு துவாரகா நகரை அடைந்தபோது மாலை வேளைக்கான ஓர் அற்புத மந்திரம் ஓதப்பட்டது.(1) பிரத்யும்னனின் பாதுகாப்புக்காக அந்நேரத்தில் பலதேவனால் ஓதப்பட்ட மாலை நேர மந்திரத்தை {ஆஹ்நிக ஸ்தோத்திரத்தை}[1] நான் சொல்லப் போகிறேன்.(2) இதை ஒருவன் மாலை வேளையில் ஓதினால் ஆன்மா தூய்மையடைந்தவன் ஆவான். பலதேவன், வாசுதேவன், அறப்பற்றுள்ள ரிஷிகள், முனிவர்கள் ஆகியோரால் இஃது ஓதப்பட்டது.(3)

Saturday, 19 September 2020

ருக்மவதியின் திருமணம் | விஷ்ணு பர்வம் பகுதி – 118 – 062

(பிரத்யும்நவிவாஹோ ருக்மிவதம்)

Marriage of Rukshmavati | Vishnu-Parva-Chapter-118-062 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : ருக்மியின் மகளான சுபாங்கி கிருஷ்ணனின் மகனான பிரத்யும்னனைத் திருமணம் செய்து கொண்டது; கிருஷ்ணனின் பேரனான அநிருத்தன் ருக்மியின் பேத்தியான ருக்மவதியைத் திருமணம் செய்து கொண்டது; பகடையால் உயிரை இழந்த ருக்மி...

Rukmi and Kalinga being killed by Balaraama

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வெகு காலம் கழிந்ததும், பகைவர்களைக் கொல்பவனான பலம்வாய்ந்த ருக்மி, தன் மகள் {சுபாங்கி சுயம்வரத்தில்} கணவனைத் தேர்ந்தெடுக்க உள்ளதாக அறிவித்தான்.(1) செல்வந்தர்களும், பலம்வாய்ந்தவர்களுமான மன்னர்களும், இளவரசர்கள் பலரும் பல்வேறு நாடுகளில் இருந்து ருக்மியால் அழைக்கப்பட்டு அவனுடைய வீட்டுக்கு வந்தனர்.(2) மற்ற இளவரசர்களுடன் சேர்ந்து {கிருஷ்ணனின் மகனான} பிரத்யும்னனும் அங்கே சென்றான். ருக்மியின் மகள் அவனைக் கண்டதும் அவனையே மணந்து கொள்ள விரும்பினாள். அருளுடனும், பிரகாசத்துடனும் கூடிய அவளும் தன் அழகுக்காகப் பூமியில் கொண்டாடப்பட்டாள். எனவே, கேசவனின் மகன், அழகிய கண்களைக் கொண்ட அவளை மணந்து கொள்ள விரும்பினான்[1].(3,4) பலம்வாய்ந்த மன்னர்கள் அனைவரும் சுயம்வர மண்டபத்தில் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, விதர்ப்ப மன்னனின் மகள் {சுபாங்கி} பகைவரைக் கொல்பவனான பிரத்யும்னனைத் (தன் கணவனாகத்) தேர்ந்தெடுத்தாள்.(5)

Thursday, 20 August 2020

விரஜம் சென்ற பலதேவன் | விஷ்ணு பர்வம் பகுதி – 102 – 046

(ராமஸ்ய கோகுல்கமனம் யமுனாகர்ஷணம்)

Baladeva visits Vraja | Vishnu-Parva-Chapter-102-046 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : ஆயர்பாடியான கோகுலத்திற்குச் சென்று மகிழ்ந்த பலராமன்; யமுனையைக் கலப்பையால் பிருந்தாவனத்திற்கு இழுத்தது; மீண்டும் மதுரா திரும்பியது...

Balarama and Yamuna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இவ்வாறு சில நாட்கள் கடந்ததும், கோபர்களின் {ஆயர்களின்} நட்பை நினைவுகூர்ந்த ராமன் {பலராமன்}, கிருஷ்ணனின் ஒப்புதலுடன் தனியாக விரஜத்திற்கு {ஆயர்பாடிக்குச்} சென்றான்.(1) பகைவரைக் கொல்பவனும், அழகிய {காட்டு மலர்களாலும், தழைகள் முதலியவற்றாலுமான} காட்டு உடையை உடுத்திக் கொண்டவனுமான கிருஷ்ணனின் தமையன் {பலராமன்}, விரைந்து விரஜத்திற்குள் நுழைந்ததும், முன்பு தன்னால் அனுபவிக்கப்பட்ட பெரிய காட்டையும், நறுமணம் கமழும் தடாகங்களையும் முதலில் கண்டான்.(2,3) அவன் கோபர்களின் வயதுக்கும், ஒழுக்கத்திற்கும் தக்க நடந்து கொண்ட இனிய நடத்தையால் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்து, கோபிகைகளுடன் அழகிய உரையாடல்கள் பலவற்றை நிகழ்த்தினான்.(4,5)

Tuesday, 18 August 2020

மதுரா வந்த கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 101 – 045

(ராமக்ருஷ்ணயோர்மதுராகமனம்)

Krishna's arrival at Mathura | Vishnu-Parva-Chapter-101-045 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கரவீரபுரத்திலிருந்து மதுரா திரும்பிய ராமனும், கிருஷ்ணனும்; அவர்களுக்குக் கிடைத்த அமோக வரவேற்பு...

Krishna and Balarama

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வசுதேவனின் வீர மகன்கள் {பலராமன், கிருஷ்ணன்} இருவரும் தமகோஷனுடன் சேர்ந்து வழியில் பயணிகளின் விதிகளுக்கு இணங்க ஐந்து இரவுகளை ஓரிரவைப் போலக் கழித்தனர். மதுரா நகரை அவர்கள் அடைந்த போது, உக்ரசேனனின் தலைமையிலான யாதவர்கள் அனைவரும் அவர்களை வரவேற்பதற்காக நகரத்தைவிட்டு வெளியே வந்தனர்.(1-3) மதுராவைச் சேர்ந்த வணிகர்கள், குடிமக்கள், அமைச்சர்கள், சிறுவர்கள், முதியவர்கள் அனைவரும் அவர்களை வரவேற்பதற்காக வெளியே வந்தனர்.(4)

Sunday, 16 August 2020

பகைவனைச் சந்தித்த கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 99 – 043

(ஜராஸந்தபராபவம்)

Krishna meets his enemy | Vishnu-Parva-Chapter-99-043 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : தெய்வீக ஆயுத ஞானத்தை மீண்டும் மீண்டும் அடைந்த கிருஷ்ணனும், பலராமனும்; உக்கிரமடைந்த கோமந்த மலை போர் தொடக்கம்; தரதனைக் கொன்ற பலராமன்; ஜராசந்தனை வீழ்த்தியது; தமகோஷன் கிருஷ்ணன் உரையாடல்...

Gomanta mount war

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மலையில் இருந்து இறங்கி வந்த வசுதேவனின் மகன்கள் {பலராமன், கிருஷ்ணன்} இருவரையும் கண்ட மன்னர்களின் படைவீரர்கள் பீதியடைந்தனர், விலங்குகள் கலக்கமடைந்தன.(1) அவர்களின் கரங்களில் ஆயுதங்களேதும் இல்லாவிட்டாலும், கடலைக் கலங்கடிக்கும் மகரங்கள் இரண்டைப் போல அவர்கள் கோபத்தில் அங்கே திரிந்து கொண்டிருந்தனர்.(2) அவ்வாறு அவர்கள் போரிட விரும்பி அங்கே திரிந்து கொண்டிருந்தபோது, ஆயுதங்களைக் கையாள்வது தொடர்பான புராதன நுண்ணறிவு அவர்களுக்குள் எழுந்தது.(3) மதுராவில் நடந்த போரின்போது அவர்கள் ஏற்கனவே அடைந்திருந்த ஆயுதங்கள், கூடியிருந்த மன்னர்களின் கண்களுக்கு முன்பாகவே தழலென எரிந்து கொண்டு வானில் இருந்து இறங்கின. பேருடல் படைத்தவையும், மனிதர்களின் தசைகளை உண்ணும் விருப்பத்துடன் கூடியவையும், அந்த இரு யாதவர்களால் அடையப்பட்டவையுமான அந்த ஆயுதங்கள் தாகம் நிறைந்தவையாக வானில் இருந்து பாய்ந்து வந்தன. அவை தெய்வீக மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும், காந்தியால் பத்து திக்கிற்கும் ஒளியூட்டிக் கொண்டும், வானுலாவிகளை {பறவைகளை} அச்சுறுத்திக் கொண்டும் இருந்தன. அரச இறைச்சியை உண்ணும் நோக்கில் இரை தேடும் விலங்குகளும் பின்தொடர்ந்து வந்தன.(4-8)

Thursday, 13 August 2020

மன்னர்களுக்கு ஜராசந்தனின் ஆணை | விஷ்ணு பர்வம் பகுதி – 98 – 042

(கோமந்ததாஹம்)

Jarasandha's instructions to the kings | Vishnu-Parva-Chapter-98-042 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கோமந்த மலை போர் தொடக்கம்; ஜராசந்தன் ஆணை; தமகோஷன் விவேகம்; மலைக்குத் தீ வைத்த ஜராசந்தன் படை...

Mountain siege

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பெரும்பிரகாசம் கொண்டவனும், பலம்நிறைந்தவனும், நோன்புகளை நோற்பவனும், மன்னர்களின் தலைவனுமான ஜராசந்தன், கடல் போல அசையும் நால் வகைப் படைகள் சூழ அங்கே வந்து சேர்ந்தான். எங்கும் தடையின்றிச் செல்லக்கூடிய திறன்மிக்கப் போர்வீரர்களால் பயிற்றுவிக்கப்பட்ட, உற்சாகமிக்கக் குதிரைகளால் இழுக்கப்படுபவையும், போருக்குப் பயன்படுத்தக்கூடியவையுமான தேர்களும், மணிகளால் அலங்கரிக்கப்பட்டவையும், போரில் செருக்கு மிக்கப் போர்வீரர்களுக்கான பொன் அம்பாரிகளைச் சுமக்கக் கூடியவையும், மேகங்களைப் போன்றவையுமான யானைகளும், நுண்ணறிவுமிக்கச் சாரதிகளால் செலுத்தப்படுபவையும், காற்றைப் போன்ற வேகம் கொண்டவையும், குதித்து ஓடுபவையுமான குதிரைகளும், வாள்கள், குத்துவாள்கள், தோல் கவசங்கள் ஆகியவற்றுடன் கூடியவர்களும், வானம் வரையிலான உயரத்திற்குக் குதிக்கக்கூடியவர்களுமான எண்ணற்ற வீரர்களைக் கொண்ட காலாட்படையும் அவனிடம் இருந்தன. மன்னர்களின் கூட்டம் அவனைப் {ஜராசந்தனைப்} பின்தொடர்ந்து வந்தது.(1-6) அந்தச் சிறந்த மலையின் குகைகள் அனைத்திலும், திக்குகள் அனைத்திலும், மேக முழக்கங்களுக்கு ஒப்பான தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியும், மதங்கொண்ட யானைகளின் பிளிறலும், குதிரைகளின் கனைப்பொலியும், காலாட்படையினரின் சிங்க முழக்கங்களும் எதிரொலித்துக் கொண்டிருந்தபோது பேரரசன் ஜராசந்தனின் படையானது கடல் போலத் தெரிந்தது.(7,8) உள்ளங்கைகளையும், தோள்களையும் தட்டிக் கொண்டு இருந்த மகிழ்ச்சிமிக்கப் போர்வீரர்களுடன் கூடிய அந்த மன்னர்களின் படைகள், மேகங்களின் படையைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தன.(9) காற்றின் வேகம் கொண்ட பலவண்ணத் தேர்களையும், மேகங்களுக்கு ஒப்பான யானைகளையும், வெண்மேகங்களுக்கு ஒப்பான குதிரைகளையும், நன்கு உடுத்தியிருந்த காலாட்படை வீரர்களையும் கொண்ட அந்தப் படையானது, மழைக்கால முடிவில் கடலை முத்தமிடும் மேகங்களைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(10-11)

Sunday, 9 August 2020

மது பருகிய பலராமன் | விஷ்ணு பர்வம் பகுதி – 97 – 041

(ஜராஸந்தாபிகமனம்)

Balarama gets Vishnu | Vishnu-Parva-Chapter-97-041 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : மது அருந்திய பலராமன்; வாருணி, காந்தி, கமலா தேவிகளைச் சந்தித்தது; விஷ்ணுவின் கிரீடத்தைக் கிருஷ்ணனுக்குச் சூடிய கருடன்; படையெடுத்து வந்த ஜராசந்தன்...

Balarama

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஜமதக்னியின் மகனான ராமர் {பரசுராமர்} சென்ற பிறகு, யது குலத்தைத் தழைக்கச் செய்பவர்களான ராமனும் {பலராமனும்}, கிருஷ்ணனும் தாங்கள் விரும்பிய தோற்றங்களை ஏற்றுக் கொண்டு அழகிய கோமந்த மலைச்சிகரத்தில் திரியத் தொடங்கினர்.(1) கருநீல நிறமும், வெண்ணிறமும் கொண்ட அந்த இளைஞர்கள் இருவரும், மார்பில் காட்டு மலர்மாலைகளைச் சூடிக் கொண்டும், கருநீலத்திலும், மஞ்சள் நிறத்திலுமான ஆடைகளை அணிந்தும் மேனியில் மலையின் மண்ணைப் பூசிக்கொண்டும், மலைச்சிகரத்தின அழகிய காடுகளில் விளையாடும் நோக்கிலும், கோள்கள் எழுகையிலும், மறைகையிலும் அவற்றையும், ஒளிக்கோள்களான {ஜ்யோதிகளான} சூரியனையும், சந்திரனையும் காணும் நோக்கிலும் திரியத் தொடங்கினர்.(2-4)

Tuesday, 4 August 2020

பரசுராமரைச் சந்தித்த கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 95 – 039

(ஜாமதக்ன்யேன ராமக்ருஷ்ணயோ ஸங்கதி)

Krishna meets Parasurama | Vishnu-Parva-Chapter-95-039 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பலராமனும், கிருஷ்ணனும் தென்திசை பயணம் செய்து பரசுராமரைச் சந்தித்தது...

Lord Parashurama

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பெருஞ்சிறப்புமிக்க வஸுதேவன், விகத்ருவின் சொற்களைக் கேட்டு, மகிழ்ச்சிமிக்க இதயத்துடன், "ஓ! கிருஷ்ணா, அரசின் பேச்சாளர்களிலும், அரச ஆலோசனைகளின் பொருளை அறிந்தவர்களிலும் முதன்மையானவனும், புத்திமானுமான விகத்ரு சொல்வது உண்மையான, பொருள் நிறைந்த சொற்களுமாகும். இவன் அரச கடமைகள் தொடர்பானவற்றையும், அண்டத்திற்கு நன்மை விளைவிக்கும் உண்மைகளையும் சொல்லியிருக்கிறான். யதுக்களில் முதன்மையான இவன் சொல்வதைக் கேட்பாயாக" என்றான் {வஸுதேவன்}.(1-3)

Saturday, 25 July 2020

பலராம ஜராசந்தப் போர் | விஷ்ணு பர்வம் பகுதி – 92 – 036

(ஜராஸந்தபயானம்)

The Battle Between Krishna and Jarasandha | Vishnu-Parva-Chapter-92-036 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் :  மதுரா நகர் முற்றுகை; அதைத் தொடர்ந்த போர்; ஜராசந்தனுக்கும் பலராமனுக்கும் இடையில் நடந்த போர்; தோற்றுத் திரும்பிய ஜராசந்தன்...

Fight between Jarasandha and Balarama

[1] மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்த அத்தியாயத்தின் தலைப்பு "கிருஷ்ணனுக்கும் ஜராசந்தனுக்கும் இடையிலான போர்" என்று இருந்தாலும், இந்த அத்தியாயத்தில் பலராமனுக்கும், ஜராசந்தனுக்கும் இடையில் நடந்த போர் விளக்கப்படுவதால் தலைப்பு மாற்றப்பட்டிருக்கிறது. மேலும் மன்மதநாததத்தரின் பதிப்பில் 90ம் அத்தியாயத்திற்குப் பிறகு, 92ம் அத்தியாயமே வருகிறது. இடையில் எந்தச் செய்தியும் விடுபடவில்லை. இதில் அச்சுப்பிழை ஏற்பட்டிருக்க வேண்டும். எனினும் அடுத்தடுத்து 93, 94 என்று அத்தியாய வரிசை தொடர்வதால் அந்தப் பிழையுடனேயே இங்கும் அத்தியாய எண் கொடுக்கப்படுகிறது. இந்த எண்களைத் தொடர்ந்து வரும் விஷ்ணு பர்வத்தின் அத்தியாய எண் முறையான வரிசையின்படியே 36 என்று கொடுக்கப்படுகிறது.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "விருஷ்ணிகளுக்கும், படைத்தலைவர்களுக்கும், மகதத் தலைவனைப் {ஜராசந்தனைப்} பின்பற்றும் மன்னர்களுக்கு இடையில் பெரும்போர் நடந்தது.(1) ஓ பரதனின் வழித்தோன்றல்களில் முதன்மையானவனே {ஜனமேஜயனே}, வாசுதேவன் ருக்மியுடனும், ஆஹுகன் பீஷ்மகனுடனும், வசுதேவன் கிராதனுடனும், பப்ரு கைசிகனுடனும்,(2) சேதியின் மன்னன் {சிசுபாலனின் தந்தை தமகோஷன்} கவனுடனும் {கதனுடனும்}, சம்பு {சங்கு} தந்தவக்ரனுடனும் போரிட்டனர். இவ்வாறே மகத மன்னனுடைய படைவீர்களுக்கும், பெருஞ்சக்திவாய்ந்த அரசுகளுக்கும் எதிராக விருஷ்ணிகளின் படையைச் சார்ந்த அந்தப் பெரும் வீரர்களும், படை வீரர்களும் இருபத்தேழு நாட்கள் போரிட்டனர்.(3,4) யானைகளைச் செலுத்தியவர்கள் {எதிர் தரப்பில்} அவ்வாறே வருகிறவருடனும், குதிரைப்படை {பகைவரின்} குதிரைப்படையுடனும், காலாட் படை காலாட்படையுடனும், தேர் வீரர்கள் தேர்வீரர்களுடனும் போரிட்டனர்.(5)

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்