Showing posts with label சித்திரலேகை. Show all posts
Showing posts with label சித்திரலேகை. Show all posts

Sunday, 14 March 2021

அநிருத்தன் உஷை திருமண வரவேற்பு | விஷ்ணு பர்வம் பகுதி – 187 – 131

(உஷயா ஸஹாநிருத்தஸ்ய விவாஹ꞉ உஷாஹரணஸமாப்திஷ்ச)

Aniruddh's wedding and reception | Vishnu-Parva-Chapter-187-131 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : துவாரகையில் மட்டற்ற மகிழ்ச்சியடைந்த பெண்கள்; உஷை அநிருத்தனுடன் இன்புற்றிருத்தல்; விஷ்ணு மஹாத்மியம்; பலஸ்ருதி...


Krishna with Aniruddha and Usha

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அப்போது, பெருந்தோள்களைக் கொண்ட ஆஹுகன் {உக்ரசேனன்}, பேரொளி படைத்த கிருஷ்ணனிடம், தன் விழிகள் விரிய, "ஓ! யதுவின் வழித்தோன்றலே, நான் சொல்வதைக் கேட்பாயாக.(1) ஓ! என் குழந்தாய், நீ {அநிருத்தனும், நீயும்} நலத்துடன் திரும்பியதைக் கண்டோம். அவன் முறையாகக் கவனிக்கப்படுகிறான். அநிருத்தன் மீண்டதற்கும், திருமணம் செய்து கொண்டதற்கும் பெரும் விழா ஒன்றை {திருமண வரவேற்பை} ஏற்பாடு செய்வாயாக.(2) பெருமைமிகு உஷை, அநிருத்தனுடன் சேர்ந்தவளாகவும், தோழிகளால் சூழப்பட்டவளாகவும் பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறாள்.(3) உயரான்மக் கும்பாண்டனின் பெருமைமிகு மகள் {ராமா / ராமை / ரமை} உஷையின் தோழியாகச் சேர்க்கப்பட வேண்டும். வைதர்ப்பி {விதர்ப்ப மன்னனின் மகள்}[1] செழித்திருக்கட்டும்.(4) எழில்மிகு கும்பாண்டன் மகளைச் சாம்பனுக்கும், எஞ்சிய கன்னிகையரை பிற இளவரசர்களுக்கும் முறையாக {திருமணம் முடித்துக்} கொடுப்பாயாக.(5)

Wednesday, 24 February 2021

அநிருத்தன் உஷை காந்தர்வத் திருமணம் | விஷ்ணு பர்வம் பகுதி – 176 – 120

(அநிருத்தஸ்யோஷயா ஸஹ காந்தர்வேந விவாஹோ பாணதத்ஸைந்யாப்யாம் யுத்தம் ச)

Chitralekha unites Aniruddha with Usha; Anirudda's fight with Vana's Soldiers | Vishnu-Parva-Chapter-176-120 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : தாமஸ வித்தையால் அநிருத்தனை உஷையிடம் கொண்டு வந்த சித்ரலேகை; பாணனுக்கும், அநிருத்தனுக்கும் இடையில் நடந்த போர்; துவாரகைக்கு வந்த நாரதர்...


Usha and Aniruddha

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "சித்திரலேகை துவாரகா நகரை வந்தடைந்து, வாசுதேவனின் அரண்மனையின் அருகில் இருந்து கொண்டு, பாணன் நகருக்கு அநிருத்தன் வந்த வழிமுறையை அறிந்து கொள்ளும் வழிவகைகள் குறித்துச் சிந்தித்தாள்.(1) அவள் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபோது, நீரில் தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நாரத முனிவரை அவள் கண்டாள்.(2) சித்திரலேகை அவரைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் கண்கள் விரிய அவரை அணுகினாள். அவள் அவரை வணங்கிவிட்டு அவரது முன்னிலையில் தலைவணங்கி நின்றாள்.(3)

Thursday, 18 February 2021

தன் காதலனை அழைத்து வர சித்திரலேகையை அனுப்பி வைத்த உஷை | விஷ்ணு பர்வம் பகுதி – 175 – 119

(உஷாயா꞉ ஸ்வப்நதர்ஷநமநிருத்தாநயநார்தம் சித்ரளேகாயா த்வாரகாகமநம் ச)

Usha meets her lover while asleep and exhorts her friends to bring him | Vishnu-Parva-Chapter-175-119 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : உஷையைத் தேற்றிய தோழியர்; சித்ரலேகையிடம் தன் கனவைக் கூறிய உஷை; அநிருத்தனே உஷையின் துணையென நிச்சயித்த சித்ரலேகை...


Usha and apsara Chitralekha

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "{சோணிதபுரத்துப் பெண்களில் முக்கியமானவர்கள் ஓர் அற்புத நிகழ்வால் பீடிக்கப்பட்டனர்}. அதன்பிறகு வைசாக மாதத்தின் வளர்பிறை பனிரெண்டாம் நாளில் {சித்திரை மாத வளர்பிறை துவாதசியில்} அழகிய உஷை தன் தோழியர் சூழ உறங்கிக் கொண்டிருந்தாள். தேவியின் சொற்களால் தூண்டப்பட்டும், அழுதுகொண்டும் அந்த அழகிய கன்னிகை அசைவற்றவளாகக் கிடந்த போது, ஏற்கனவே சொல்லப்பட்டதைப் போல ஒரு மனிதன் கனவில் தோன்றி அவளை அறிந்தான். {அவனிடம் இருந்து விடுபடுவதற்காகத் துடிக்கும் உடலுடன் அழுது கொண்டிருந்த அவளை அவன் பெண்ணாக உணரச் செய்தான்}. அவள் திடீரெனக் குருதியால் குளித்தவளாகும் அளவுக்கு அந்த மனிதன் அவளை அறிந்தான்.(1-3)

Saturday, 13 February 2021

உமையிடம் உஷை பெற்ற வரம் | விஷ்ணு பர்வம் பகுதி – 174 – 118

(பார்வத்யா꞉ ஸகாஷாத் உஷாயா வரளாப)

Bhava's sport and Vana's daughter obtains a boon | Vishnu-Parva-Chapter-174-118 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : அப்சரஸ் சித்திலேகை; பாணனின் மகள் உஷை; பார்வதி தேவியின் அருள்; உஷையின் காமம்...


Vana's daughter Usha

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஒரு காலத்தில் ஓர் அழகிய ஆற்றங்கரையில் தலைவன் பவன் {உமாதேவியுடன் உலவியபடி} விளையாடிக் கொண்டிருந்தான்.(1) அனைத்துப் பருவகாலங்களும் செழிக்கும் அந்த அழகிய காட்டில் அனைத்துப் பக்கங்களிலும் நூற்றுக்கணக்கான அப்சரஸ்களுடன் சேர்ந்து கந்தர்வர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.(2) பாரிஜாத, சந்தானக மலர்களின் நறுமணத்துடன் கூடிய வானத்தைப் போல அந்த ஆற்றங்கரை மணங்கமழ்ந்து கொண்டிருந்தது.(3)

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்