(பித்ரு கல்பம் - 5 | சிராத்த மஹாத்மியம்)
An account of the seven Brahmanas | Harivamsa-Parva-Chapter-21 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : பரத்வாஜரின் மகன்களான ஏழு பிராமணர்கள் மறுபிறவியில் கௌசிகரின் மகன்களாகப் பிறந்தது; கர்க்கரின் பசுவைக் கொன்று உண்டு, புலி கொன்றுவிட்டதாக அவரிடம் பொய் சொன்னது; ஏழு பிறவிகளில் அவர்கள் அடைந்த வெவ்வேறு நிலைகள்; ஆறாம் பிறவியில் அவர்களில் ஒருவன் மன்னன் விப்ராஜனைப் போலச் செழிப்படைய விரும்பியது...
மார்க்கண்டேயர், "மக்கள் சிராத்தம் செய்கின்றனர், யோகிகளும் அதையே செய்கின்றனர். அதன் {சிராத்தம் செய்வதன் மூலம் உண்டாகும்} மிகச் சிறந்த பலன்களை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(1) ஓ! பரதனின் வழித்தோன்றலே {பீஷ்மா}, பிரம்மதத்தன் தன் ஏழாம் பிறவியில் எதை அடைந்தானோ, அதைக் கொண்டே அறம் குறித்த அறிவு படிப்படியாக ஏற்பட்டது.(2) ஓ! பாவங்களைக் களைந்தவனே, பெரும் நுண்ணறிவுமிக்கவனே, அறப் புறக்கணிப்புக்குப் பரிகாரமாக {பீடயம் - கோ ஹிம்ஸை - பசுவைக் கொல்லும் கொடுஞ்செயல் செய்ததனால் உண்ட கீழ்மைக்குப் பரிகாரமாக} சிராத்தம் செய்வதன் மூலம் பிராமணர்கள் பழங்காலத்தில் எதை அடைந்தனர் என்பதைக் கேட்பாயாக[1].(3)
