(பித்ரு கல்பம் - 3 | யோகாப்ரம்சாநிரூபணம்)
Bharadwaja's Family | Harivamsa-Parva-Chapter-19 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : தவத்தகுதி குறைந்த பரத்வாஜரின் மகன்கள்; மானஸத்தின் அக்கரையில் இருந்தது; அவர்கள் மேன்மையடையும் வழிகளை மார்க்கண்டேயரிடம் சொன்ன சனத்குமாரர்...
{ஸனத்குமாரர் சொன்னதாக} மார்க்கண்டேயர், "ஓ! குழந்தாய், முந்தைய யுகத்தில், பரத்வாஜரின் மகன்களான பிராமணர்கள் யோகப்பயிற்சிகளை மேற்கொண்டாலும், தங்கள் அத்துமீறல்களால் மாசடைந்தார்கள்.(1) யோகப் பயிற்சிகளில் தொடர்ந்து வரம்புமீறி தகுதி குறைந்தவர்களாக ஆனதால், மானஸம் என்றழைக்கப்படும் பெருந்தடாகத்தின் அக்கரையில் நனவற்ற நிலையில் நீடித்திருந்தார்கள்.(2) (தாங்கள் செய்த) அத்துமீறல்களைக் கழுவிக் கொண்டோம் என்ற நினைவால் கலக்கமடைந்து, (பிரம்மத்துடன்) ஐக்கியமடையத் தவறிய அவர்கள், காலக் குணங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டவர்களானார்கள்[1].(3) அவர்கள் யோக பாதையில் இருந்து விலகிச் சென்றாலும், தேவர்களின் நிலத்தில் அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தனர். அவர்கள் குருக்களின் நிலத்தில் மனிதர்களில் முதன்மையானவர்களாகக் குசிகனின் மகன்களாகப் பிறப்பார்கள்.(4) அவர்கள் பித்ருக்களுக்காக உயிரினங்களைக் கொல்வதன் மூலம் அறப் பயிற்சிகளைத் தொடர்வார்கள். மேலும் (இவ்வாறே) தகுதி குறைந்தவர்களாக இன்னும் இழிந்த பிறவிகளையும் அடைவார்கள்.(5)


