Showing posts with label சால்வன். Show all posts
Showing posts with label சால்வன். Show all posts

Sunday, 6 September 2020

கிருஷ்ணனைக் கொல்ல ஒப்புக்கொண்ட காலயவனன் | விஷ்ணு பர்வம் பகுதி – 111 – 055

(காலயவனவாக்யம்)

Kalayavana agrees to kill Krishna | Vishnu-Parva-Chapter-111-055 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனைக் கொல்லும் திட்டத்திற்கு சால்வனிடம் இணங்கி மதுராவுக்குப் புறப்பட்ட காலயவனன்...

Kala Yavana & King Salva

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பேரரசன் ஜராசந்தனின் ஆணையின் பேரில் மன்னன் சால்வன் இதைச் சொன்ன பிறகு, யவனர்களின் மன்னனான காலயவனன், பெரும் மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினான்.(1)

Saturday, 5 September 2020

காலயவனனைச் சந்தித்த சால்வன் | விஷ்ணு பர்வம் பகுதி – 110 – 054

(காலயவநம் ப்ரதி ஜராஸம்தஸம்தேசம்)

JShalya meets Kalayavana | Vishnu-Parva-Chapter-110-054 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : காலயவனனிடம் தூது சென்ற சால்வன்; ஜராசந்தனின் சொற்களைக் கேட்ட காலயவனன்...

King Salva Visits Kala Yavana

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "யவனர்களின் மன்னன் காலயவனன் பெருஞ்சக்தி வாய்ந்தவனாகவும், அரச கடமைகளைப் பின்பற்றித் தன் நகரில் வசிப்பவர்களை ஆட்சி செய்பவனாகவும் இருந்தான்.(1) அவன் ஞானியாகவும், மூன்று வர்க்கங்களை[1] அறிந்தவனாகவும், ஆறு குணங்களில்[2] திறம்பெற்றவனாகவும், ஏழு வகைக் குற்றங்களை[3] அறியாதவனாகவும்[4],(2) அனைத்துச் சாதனைகளுடன் கூடியவனாகவும், ஸ்ருதிகளை நன்கறிந்தவனாகவும், பக்திமானாகவும், வாய்மை நிறைந்தவனாகவும், புலன்களைக் கட்டுப்படுத்தியவனாகவும், போர் விதிகளை அறிந்தவனாகவும், கோட்டைகளைக் கைப்பற்றுவதில் திறன்வாய்ந்தவனாகவும்,(3) பெரும் பலம் கொண்ட வீரனாகவும், {ஒப்பற்ற பலம் கொண்டவனாகவும்}, தன் அமைச்சர்களைக் கௌரவிப்பவனாகவும் இருந்தான். ஒரு நாள் அவன், தன் அமைச்சர்களுடன் சேர்ந்து சுகமாக அமர்ந்து கொண்டிருந்தான்,(4) அப்போது, யவனர்களில் கல்விமான்களும், நுண்ணறிவுமிக்கவர்களும் தெய்வீகக் கருப்பொருட்கள் பலவற்றைக் குறித்துத் தங்களுக்குள் விவாதித்தபடியே அவனைப் புகழ்ந்து கொண்டிருந்தனர்.(5)

Thursday, 3 September 2020

காலயவனனை அழைக்க முன்மொழிந்த ஜராசந்தன் | விஷ்ணு பர்வம் பகுதி – 109 – 053

(காலயவநம் ப்ரதி ஶாலவகமநம்)

Jarasandha's proposal to invite Kalayavana | Vishnu-Parva-Chapter-109-053 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : ஜராசந்தனுடைய அனுமதியின் பேரில் காலயவனனிடம் தூது சென்ற சால்வன்...

shri-krishna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வசுதேவனின் மகன் {கிருஷ்ணன்} புறப்பட்ட பிறகு, ஆபரணங்களால் அங்கங்கள் பளபளத்தவர்களும், தங்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப விரும்பியவர்களுமான மன்னர்கள், இதை (தங்கள் நோக்கத்தை ஜராசந்தனுக்குத்) தெரிவிக்கும் பொருட்டுப் பீஷ்மகனின் சபா மண்டபத்திற்குத் திரும்பிச் சென்றனர்.(1) அப்போது மன்னர்களில் முதன்மையானவனும், அறவிதிகளை நன்கறிந்தவனுமான பீஷ்மகன், சூரியனையும், சந்திரனையும் போன்ற பிரகாசத்துடன் அழகிய இருக்கைகளில் சுகமாக அமர்ந்திருந்த அந்த மன்னர்களிடம்,(2) "ஓ! மன்னர்களே, சுயம்வரத்திற்கு நேர இருக்கும் பேரழிவை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். என் பிழையின் விளைவாக ஏற்பட்ட பலனுக்காக நீங்கள் என்னை மன்னிப்பீராக" என்றான்"[1].(3)

Sunday, 30 August 2020

தந்தவக்ரன் பேச்சு | விஷ்ணு பர்வம் பகுதி – 106 – 050

(தந்தவக்த்ரஸ்ய பாஷணம் பீஷ்மகஸ்ய நிர்ணயஶ்ச)

Dantavakra's speech | Vishnu-Parva-Chapter-106-050 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : தந்தவக்தரன், சால்வன் ஆகியோரின் பேச்சைக் கேட்டுக் கிருஷ்ணனின் பெருமையைக் கூறிய பீஷ்மகன்...

Dandavakra speech

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பெருஞ்சக்திவாய்ந்த சுனீதன் {தமகோஷன்} இவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்ட பிறகு, கரூஷ நாட்டு மன்னனான வீரன் தந்தவக்ரன் {தந்தவக்த்ரன் / தந்தவக்தரன்}[1],(1) "ஓ! மன்னர்களே, மகத மன்னனும் {ஜராசந்தனும்}, சுனீதனும் நம் நலத்திற்காகச் சொன்னவை முறையெனவே நான் நினைக்கிறேன்.(2) தீய எண்ணம், செருக்கு, வெற்றிக்கான விருப்பம் ஆகியவற்றால் இந்த அமுதச் சொற்களை என்னால் பழிக்க முடியாது.(3) குடிமையியலால் {நீதி சாத்திரங்களால்} அங்கீகரிக்கப்பட்டவையும் கடல்போன்றவையுமான இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சொற்களை இந்த மன்னர்களுக்கு மத்தியில் வேறு யாரால் சொல்ல முடியும்?(4)

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்