Tuesday, 1 March 2022

மீண்டும் துவாரகை | பவிஷ்ய பர்வம் பகுதி – 106

(ஷ்ரீக்ருஷ்ணஸ்ய த்வாரவதீகமநம்)

Return to Dwaraka | Bhavishya-Parva-Chapter-106 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்:  புஷ்கரையில் கிருஷ்ணனைத் துதித்த முனிவர்கள்; துவாரகை திரும்பிய கிருஷ்ணன்...


Balarama and Krishna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, மஹாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணன், பிற யாதவர்களுடன் சேர்ந்து துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றான். வழியில் புஷ்கரையில் நின்று அங்கே வசித்து வந்த பெரும் முனிவர்களைச் சந்தித்தான்.(1)

பொறாமையற்றவர்களான அந்தப் பெரும் முனிவர்கள், யதுவின் புகழ்பெற்ற வழித்தோன்றலான கிருஷ்ணனைக் கண்டு, அவனுக்கு அர்க்கியத்தையும், பிற மங்கலப் பொருட்களையும் கொடுத்தனர்.{2} பிறகு அவர்கள், கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தையும் அறிந்த ஜகத்பதியான ஜனார்த்தனனிடம், "விஷ்ணுவே, நினைத்தற்கரிய ஆற்றல்படைத்தவன் நீயே.{3} போரில் ஹம்சனையும், டிம்பகனையும் கொன்றவன் நீயே. ஈசுவரனே, தேவர்களின் தலைவனாலும் {இந்திரனாலும்} கொல்லப்பட முடியாத ராக்ஷசன் விசக்ரனைக் கொன்றவன் நீயே.{4} உண்மையில் உன்னைத் தவிர வேறு எவனாலும் அவனைக் கொன்றிருக்க முடியாது என நாங்கள் நம்புகிறோம்.

ஹரியே, எங்கள் தினப்படி ஆன்ம அறுவடைக்குத் தேவையான பரிவாரங்கள் அனைத்தும் இனி தடையில்லாமல் எங்களுக்குக் கிடைக்கும்.{5} உண்மையில், உன் தாமரைப் பாதங்களை நினைவுகூர்வதாலேயே நாங்கள் தூய்மை அடைந்து விடுவோம். உன்னைத் தியானிப்பவனின் வாழ்வில் நேரும் துன்பங்கள் அனைத்தையும் அகற்றுபவன் நீயே.{6} தொடர்ந்து நினைவுகூரப்படுவதன் மூலம் உன் தாமரைப் பாதங்கள் பரம புண்ணியத்தை அருள்கின்றன. ஹரியே, தவம் செய்யும் எங்களை நீயே பாதுகாக்கிறாய்.{7}

புனித அக்ஷரமான ஓம் எனும் ஓங்கார வஷட்காரத்தின் உருவகமாக நீயே இருக்கிறாய். யஜ்ஞம் {வேள்வி} நீயே, உயிரினங்கள் அனைத்தின் முப்பாட்டன் நீயே. ஜோதியாகத் திகழும் பிரம்மத்தின் பிறப்பிடமான நீயே பிரம்மனாகவும், ருத்திரனாகவும் இருக்கிறாய். உயிரினங்கள் அனைத்தினுள்ளும் உயிராகவும், ஆன்மாவாகவும் வசிக்கும் பரமாத்மா நீயே. ஜகத்பதியே, வேள்வி செய்வதன் மூலமும், கொடையளிக்கும் ஈகையின் மூலமும் நீயே வழிபடப்படுகிறாய்.{8,9}(2-9) அண்டத்தைப் படைக்கும் பிரம்மம் நீயே. எனவே நாங்கள் உன்னைப் பக்தியுடன் வணங்குகிறோம். தேவா, உன்னிடம் பகை பாராட்டும் அனைவரையும் அழித்து அண்டத்தைக் காப்பாயாக" என்றனர் {முனிவர்கள்}.(10)

ஹரியும், "நன்று. அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றான். அங்கே அவன் விருஷ்ணி குலத்தாருடன் பெரும் மகிழ்ச்சியுடன் வசித்திருந்தான்.(11) ஜனமேஜயா, நீ கேட்டுக் கொண்டதற்கு இணங்க தேவதேவனான கிருஷ்ணனின் கடந்த காலத்தை உனக்கு விளக்கிச் சொன்னேன். இன்னும் நீ வேறென்ன கேட்க விரும்புகிறாய்?" என்றார் {வைசம்பாயனர்}.(12)

பவிஷ்ய பர்வம் பகுதி – 106ல் உள்ள சுலோகங்கள் : 12

மூலம் - Source

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்