Thursday 24 February 2022

புஷ்கரஞ்சென்ற கிருஷ்ணன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 95

(ஸ்ரீகிருஷ்ணஸ்ய புஷ்கரம் ப்ரதி கமநம்)

Krishna goes to Pushkara | Bhavishya-Parva-Chapter-95 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: புஷ்கரைக்குச் சென்ற கிருஷ்ணனும், யாதவர்களும்...


Krishna at pushkara

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "சிநியின் பேரனான சாய்தகி, துவாரகைக்குத் திரும்பி ஹம்சடிம்பகர்களுடனான தன் சந்திப்பைக் கிருஷ்ணனிடம் விரிவாகக் கூறினான்.(1) அதன்பிறகு ஒரு நல்ல காலை வேளையில் கேசிசூதனனும், கதாதாரியும், சக்கரபாணியுமான கேசவன் தன் படைத்தலைவனிடம் பின்வருமாறு ஆணையிட்டான்.(2)

{கிருஷ்ணன்}, "தேர்கள், யானைகள், குதிரைகள் அனைத்தையும் போருக்கு ஆயத்தம் செய்வாயாக. இசைக்கலைஞர்களை அழைத்து, பேரிகைகளையும், பணவங்களையும் எடுத்து வரச் சொல்வாயாக. பராசங்கள், பரிகங்கள், சூலங்கள் முதலியவற்றுடன் படைவீரர்கள் நல்ல ஆயுதபாணிகளாவதை உறுதி செய்வாயாக. குதிரைகளையும், யானைகளையும், ரதங்களையும் கொடிகளாலும், மதிப்புமிக்க ஆபரணங்களாலும் நன்கு அலங்கரிப்பாயாக" {என்றான்}.

படைத்தலைவன், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு புருஷோத்தமனின் {கிருஷ்ணனின்} ஆணைகளை மேற்கொள்ளப் புறப்பட்டுச் சென்றான். யாதவ வீரர்கள் கவசங்களைத் தரித்துத் தங்கள் விற்களை எடுத்துக் கொண்டு ரதங்களில் ஏறினர்.(3-5) மன்னா {ஜனமேஜயா}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், வில்லைத் தரித்திருந்தவனுமான சாத்யகி, பெருங்கோபத்துடனும், போரிடும் ஆவலுடனும் காணப்பட்டான்.(6) முதன்மையான யாதவர்கள் பிறரும், தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, சிங்கநாதம் செய்தவாறே புறப்படத் தயாராகினர்.(7)

ஹரி {கிருஷ்ணன்}, முறிக்கப்பட முடியாத சாரங்க வில்லை எடுத்துக் கொண்டு, தாருகனால் நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏறி நகரை {துவாரகையை} விட்டுப் புறப்பட்டுச் சென்றான்.(8) அந்நேரத்தில் அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, உடும்புத் தோலுறைகளால் பாதுகாக்கப்பட்ட தன் நான்கு கரங்களிலும் சங்கு, சக்கரம், கதாயுதம், சூலம் ஆகியவற்றையும், கணைகளையும் தரித்திருந்தான். மழை மேகம்போன்ற கருவண்ணனான அவன் மஞ்சள் ஆடைகளை உடுத்தியிருந்தான். தாமரை மலர் மாலையால் அவனது மார்பு அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவன் தன் தேரில் அமர்ந்தபோது, குறிப்பிட்ட மந்திரங்களைச் சொல்லி விப்ரர்கள் துதித்தனர்.(9,10) சூதர்களும், மாகதர்களும் கிருஷ்ணனின் தேர் சாலையில் கடந்து செல்லும்போது அவனது நற்குணங்களைச் சொல்லும் பாடல்களைப் பாடித் துதித்தனர். தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்த பிறகு யாதவர்களின் படை வடக்கு நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.(11)

கேசவன், பயங்கர ஒலியை எழுப்பும் தன் பாஞ்சஜன்யத்தை முழக்கினான். அந்தப் பேரொலியைக் கேட்டதும் பகைவரனைவரின் இதயங்களிலும் அச்சம் நுழைந்தது.(12) மன்னா, அந்த முதன்மையான சங்கு, நிலம் முழுவதிலும், ஆகாயம் முழுவதிலும் பரவுமளவுக்குப் பயங்கர ஒலியை வெளியிட்டது.(13) கிருஷ்ணனின் முன்னுதாரணத்தைப் பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான யாதவ வீரர்களும் தங்கள் தங்களுக்குரிய சங்குகளையும், மிருதங்கங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பேரிகைகளையும் முழக்கினர்.(14) உண்மையில் பேரிகைகள் மற்றும் பிற இசைக்கருவிகளின் ஒன்றுபட்ட ஒலி மழைக்கால மேகமுழக்கத்திற்கு ஒப்பாக இருந்தது. இவ்வாறே அந்த யாதவப்படை புண்ணியத்தலமான புஷ்கரையை அடைந்தது.(15) இராஜேந்திரா {ஜனமேஜயா}, அதன்பிறகு அந்த யாதவ வீரர்கள், ஹம்சடிம்பகர்களின் வரவுக்காகப் புஷ்கரத் தடாகக் கரையில் காத்திருந்தனர்.(16) யாதவர்கள், அந்தப் புஷ்கரக் கரையில் முகாமிட்டுத் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்தனர்.(17)

பகவான் கோவிந்தன் அந்தப் புண்ணியத் தடாகத்தின் அழகைப் புகழ்ந்தவாறே தன் கைகளையும், முகத்தையும் கழுவிக் கொண்டு அங்கே வசிக்கும் முனிவர்கள் அனைவருக்கும் தன் வணக்கத்தைத் தெரிவித்தான். பிறகு அவன், ஹம்சடிம்பகர்களின் வரவுக்காக அந்தக் கரையில் அமர்ந்து காத்திருந்தான். அந்நேரத்தில் அந்த விஷ்ணு பிராமணர்கள் ஓதும் வேத மந்திரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(18,19)

பவிஷ்ய பர்வம் பகுதி – 95ல் உள்ள சுலோகங்கள் : 19

மூலம் - Source

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்