Sunday 6 September 2020

கிருஷ்ணனைக் கொல்ல ஒப்புக்கொண்ட காலயவனன் | விஷ்ணு பர்வம் பகுதி – 111 – 055

(காலயவனவாக்யம்)

Kalayavana agrees to kill Krishna | Vishnu-Parva-Chapter-111-055 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனைக் கொல்லும் திட்டத்திற்கு சால்வனிடம் இணங்கி மதுராவுக்குப் புறப்பட்ட காலயவனன்...

Kala Yavana & King Salva

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பேரரசன் ஜராசந்தனின் ஆணையின் பேரில் மன்னன் சால்வன் இதைச் சொன்ன பிறகு, யவனர்களின் மன்னனான காலயவனன், பெரும் மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினான்.(1)

காலயவனன் {சால்வனிடம்}, "ஓ! நான் உயர்வாகக் கௌரவிக்கப்பட்டவனானேன், அருளப்பட்டவனுமானேன்; கிருஷ்ணனை வெல்வதற்கு எண்ணற்ற மன்னர்கள் என்னை வேண்டிக் கொண்டதன் மூலம் என் வாழ்வு வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டது.(2) மூவுலகங்களிலும், ஏன் தேவர்களாலும், அசுரர்களாலும் வெல்லப்பட முடியாதவனான கிருஷ்ணனை வீழ்த்தும் பணியில் இம்மன்னர்கள் என்னை நியமித்திருக்கிறார்கள். நான் வெற்றியை அடையும் வகையில் அவர்கள் எனக்கு ஆசி வழங்கியிருக்கின்றனர்.(3) இந்த மன்னர்கள் மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் என் வெற்றியைத் தீர்மானித்திருக்கும் போது, நீர் போன்ற அவர்களின் சொற்பொழிவால் நான் வெற்றியடைவேன்.(4) மன்னர்களின் வேண்டுகோளுக்கிணங்க பேரரசர் ஜராசந்தர் இட்ட ஆணை எதுவாக இருப்பினும் நான் அதைச் செய்வேன். இதில் நான் தோல்வியடைந்தாலும், அஃது என் வெற்றிக்கு ஒப்பானதாகவே இருக்கும்.(5) ஓ! மன்னா {சால்வா}, இன்று நாளும், நட்சத்திரங்களும் மங்கலமாக இருக்கின்றன. போர்க்களத்தில் கிருஷ்ணனை வீழ்த்த இன்றே இந்த மங்கலமான கணத்திலேயே மதுராவுக்குப் புறப்படப் போகிறேன்" என்றான் {காலயவனன்}".(6)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "யவனர்களின் தலைவன் {காலயவனன்}, பெருஞ்சக்திவாய்ந்த சௌப மன்னன் சால்வனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, விலைமதிப்புமிக்க ரத்தினங்களையும், ஆடைகளையும் கொடுத்து அவனை முறையாகக் கௌரவித்தான்.(7) அதன்பிறகு அவன், தாராளமான ஆசிகளை அடைவதற்காகத் தன் விருந்தினர்களுக்கும், பிராமணர்களும் பல்வேறு வகையான செல்வங்களைக் கொடையளித்து, நெருப்பில் முறையாக ஆகுதிகளைக் காணிக்கையளித்தான். அவன் நலம்பயக்கும் சடங்குகளைச் செய்த பிறகு, ஜனார்த்தனனை வெல்வதற்காகத் தன் படையுடன் புறப்பட்டுச் சென்றான்.(8,9) ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, மன்னன் சால்வனும், தன் விருப்பம் முழுமையாக நிறைவடைந்தவனாக யவனர்களின் மன்னனை ஆரத்தழுவிக் கொண்டு, மகிழ்ச்சிமிக்க இதயத்துடன் தன் நகருக்குப் புறப்பட்டுச் சென்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(10)

விஷ்ணு பர்வம் பகுதி – 111 – 055ல் உள்ள சுலோகங்கள் : 10
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்