Wednesday 7 July 2021

பலியின் செழிப்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 41

(பலிர்விஜயே ஷ்ரிய꞉ ஸ்வயமாகமநகதநம்)

Bali's prosperity | Bhavishya-Parva-Chapter-40 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : பலியை வந்தடைந்த செழிப்பின் தேவியான ஸ்ரீதேவி...

Bali, Mahabali, Bali Chakravarthi , Maveli

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "{அதிதியின் மகன்களான} தேவர்கள் {திதியின் மகன்களான} தைத்தியர்களால் வீழ்த்தப்பட்டனர், அதன்படி தைத்தியர்களே உலகங்களை ஆக்கிரமித்தனர். மயன், சம்பரன் ஆகியோர் பெருஞ்சக்திவாய்ந்த பலியின் வெற்றியை அறிவித்தனர்.{1} அந்த நேரத்தில் திசைகள் தெளிவடைந்தன, பக்திச் செயல்பாடுகள் செழித்தன, அநீதி ஒடுக்கப்பட்டது, சூரியன் தன் பாதையில் முறையாகப் பயணித்தான்.{2}

பிரஹ்லாதன், சம்பரன், மயன், அனுஹ்லாதன் ஆகியோர் கவனமாகத் திசைகள் அனைத்தையும் பாதுகாத்தனர்.{3} மக்கள் நல்வழிகளில் சென்றனர், அதனால் பாவம் மறைந்து அறம் பெருகியது. சித்தர்கள் தவம் பயின்றனர்.{4,5} தர்மம் நான்கு கால்களுடன் செழித்தது, அதர்மம் (பாவம்) ஒற்றைக்காலுடன் நின்றது.(6) மன்னர்கள் தங்கள் குடிமக்களை முறையாகப் பாதுகாத்தனர், அனைத்து வகையினரும் தங்கள் தங்களுக்குரிய கடமைகளைப் பின்பற்றினர்.{7} பலி, அசுரர்கள் அனைவராலும் ஒருமனதாகத் தேவர்களின் அரசில் நிறுவப்பட்டான்.{8|

அவர்கள் {அசுரர்கள்} மகிழ்ச்சி கூச்சலிடத் தொடங்கிய போது வரமளிப்பவளான செழிப்பின் தேவி {ஸ்ரீதேவி}, தன் கையில் தாமரை மலருடன் பலியின் முன்பு தோன்றி,{9} "ஓ! பெருஞ்சக்திவாய்ந்தவர்களில் முதன்மையானவனே, ஓ! பேரொளி படைத்த தைத்திய மன்னன் பலியே, தேவர்களை வீழ்த்தியதால் நான் உன்னிடம் நிறைவடைந்திருக்கிறேன்.{10} உனக்கு நன்மை நேரட்டும்.{10} போரில் உன் ஆற்றலை வெளிப்படுத்தித் தேவர்களின் மன்னனை நீ வீழ்த்தினாய். அற்புதம் நிறைந்த உன் சக்தியைக் கண்டே நான் உன்னிடம் வந்திருக்கிறேன்.{11} ஓ! தானவர்களில் முதன்மையானவனே, ஹிரண்யகசிபுவின் குலத்தில் பிறந்த நீ அசுரர்களின் மன்னனாக நியமிக்கப்பட்டிருக்கிறாய். எனவே, இத்தகைய அருஞ்செயலை நீ செய்ததில் வியப்பேதுமில்லை.{12} மூவுலகங்கள் அனைத்தையும் அனுபவித்த அந்தத் தைத்திய மன்னனையும் {ஹிரண்யகசிபுவையும்} நீ விஞ்சிவிட்டாய். மேலும் நீ எப்போதும் அறம்சார்ந்தவனாகவும், பக்திமானாகவும் இருக்கிறாய்.{13} எனவே, ஓ! அளவற்ற ஆற்றல் படைத்தவனே, நீயே மூவுலகங்களையும் ஆள்வாயாக" என்றாள் {ஸ்ரீதேவி}.

வரமளிப்பவளும், அழகிய தேவியுமான லக்ஷ்மி இவ்வாறு அந்தத் தைத்திய மன்னனிடம் சொல்லிவிட்டுக் காட்சியில் இருந்து மறைந்தாள்[1]"என்றார் {வைசம்பாயனர்}.(14-18)

[1] சித்திரசாலை பதிப்பில் இந்த அத்தியாயத்தில் 18 ஸ்லோகங்கள் இருக்கின்றன. மன்மதநாததத்தரில் 14 தான் குறிக்கப்பட்டிருக்கிறது. மேலே கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள் சித்திரசாலை பதிப்பின் மூலத்தைக் கண்டு அனுமானத்தின் அடிப்படையில் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

பவிஷ்ய பர்வம் பகுதி – 41ல் உள்ள சுலோகங்கள் : 18

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்