Saturday 8 February 2020

முகவுரை

கணேசனை[1] வணங்குவோம். வேத வியாசரை[2] வணங்குவோம். {ஓம்} நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், கல்வியின் தேவியான சரஸ்வதியையும் வணங்கி வெற்றி {ஜெயம்} என முழங்குவோம்.(1) துவைபாயனரின் {வியாசரின்} உதடுகளில் இருந்து சிந்தியதும், அற்புதமானதும், பாவங்களை அழிக்கவல்லதும், மங்கலமானதும், உயர்வானதும், புனிதமானதுமான மஹாபாரதம் ஓதப்படுவதைக் கேட்பவனுக்கு, புனிதத்தலமான புஷ்கரையில்[3] நீராடுவதால் என்ன பயன்?(2) பராசரரின் மகனும், சத்யவதியை மகிழ்ச்சியடையச் செய்பவரும், உலகம் பருகும் சொல்லமுதத்தைச் சொன்ன தாமரை வாய் கொண்டவருமான வியாசர் வெற்றியால் மகுடம் சூடப்படட்டும்.(3) வேதங்களையும், ஸ்ருதிகள் பலவற்றையும் அறிந்த ஒரு பிராமணருக்குத் தங்கக் கொம்புகளுடன் கூடிய நூறு பசுக்களைக் கொடையளிப்பதால் உண்டாகும் அதே கனியை {பலனை} புனிதக் கருப்பொருளுடன் கூடிய மஹாபாரதத்தைக் கேட்பவன் அடைகிறான்.(4)

[1] "இந்து நம்பிக்கையின்படி கணேசன் அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றித் தருபவனாவான். ஒவ்வொரு விழாவின் தொடக்கத்திலும் அவனை வழிபடுவது இந்துக்களின் வழக்கமாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[2] "வியாசர் என்பது தொகுப்பாளர் என்ற பொருளைத் தரும் ஒரு பொதுவான சொல்லாகும். இங்கே இது வேதங்கள் மற்றும் புராணங்களை வகுத்தவரைக் குறிக்கிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[3] "இஃது ஆஜ்மீர் மாவட்டம் மார்வாரில் {ஜோத்பூரில்} உள்ள ஒரு தடாகமாகும். இங்கே ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான புனிதப்பயணிகள் நீராடச் செல்கிறனர்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

ஹரிவம்சத்தை {பிரதி எடுத்து} கொடையளிப்பதால், நூறு குதிரை வேள்விகளைச் செய்வதாலோ, வற்றாத உணவுக்கொடையை அளிப்பதாலோ, இந்திரனின் கண்ணியத்தைக் காப்பதாலோ உண்டாவதை விட அதிகமான புண்ணியத்தை ஒரு மனிதன் அடைவான்.(5) வாஜ்பேயம் அல்லது ராஜசூய யாகங்களோ, யானைகளுடன் கூடிய தேர்க்கொடையாலோ கிட்டும் அதே கனியை {பலனை} அளிக்கிறது. வியாசரின் சொல்லே இதற்குச் சான்றாகும், மேலும் முனிவர் வால்மீகியாலும் இது சொல்லப்பட்டிருக்கிறது.(6) ஹரிவம்சத்தை எழுதுவதில் முறையாக ஈடுபடும் பெரும் தவசி, தேனின் மணத்தால் ஈர்க்கப்பட்டுத் தாமரையை நோக்கி நகரும் வண்டைப் போலவே ஹரியின் தாமரைப் பாதத்தை விரைவாக அடைவான்.(7) பிரம்மனில் இருந்து ஆறாம் தலைமுறையைச் சார்ந்தவரும், நித்திய ஆன்ம மகிமை கொண்டவரும், நாராயணனுடைய ஒரு பகுதியாக {அவதாரமாக} தோன்றியவரும், சுகரை மட்டுமே தமது மகனாகக் கொண்டவருமான துவைபாயனரையே {வியாசரையே} அனைத்திற்கும் மேலான காரணராக நான் கருதுகிறேன்[4].(8)

[4] பெரும்பாட்டனும், அனைத்தின் காரணனுமான நாராயணனில் இருந்து தொடங்கி ஆறாமவரான கிருஷ்ண துவைபாயனரைப் போற்றுவோம்; வற்றாத செல்வமாக அன்ம அறிவைக் கொண்டவரும்; நாராயணனின் நிழலிடா நிழலாகப் பிறந்தவரும்; தவசியான பராசரரின் ஒரே மகனும், வேதங்களெனும் புதையலின் கொள்ளிடமுமான பெருந்தவசி துவைபாயனரை {வியாசரைப்} போற்றுவோம்" எனத் தேசிராஜு ஹனுமந்த ராவ் ஆங்கில மொழிபெயர்ப்பில் இருக்கிறது.

முகவுரை_யில் உள்ள சுலோகங்கள் : 8
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்